ETV Bharat / state

கழிவுநீரை அகற்றக்கோரி பொதுமக்கள் சாலை மறியல்! - public road blocking protest in chennai

சென்னை: தமிழ்நாடு வீட்டுவசதி வாரிய குடியிருப்பில் மழைநீருடன் கழிவுநீர் புகுந்ததால் கழிவு நீரை அகற்றக்கோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

Public road rage demanding
Public road rage demanding
author img

By

Published : Dec 5, 2019, 9:02 AM IST

சென்னையில் கடந்த ஒரு சில நாள்காளக கனமழை பெய்து வருகிறது. இதனால், கொரட்டூர் தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் 500க்கும் மேற்பட்ட வீடுகளை மழைநீர் சூழ்ந்தது. இதையடுத்து, மூன்று நாட்கள் போராடி அரசு அலுவலர்கள் மழை நீரை வெளியேற்றியதால் இயல்பு நிலைக்கு திரும்பியது.

இந்நிலையில், நேற்று மாலை திடீரென மழை நீருடன் கழிவுநீர் கலந்து குடியிருப்புகளை சூழ்ந்தது. இதனால், ஆத்திரமடைந்த பொதுமக்கள் அம்பத்தூர் பட்டரவாக்கம் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இதன் காரணமாக, அப்பகுதியில் போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டது.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்திய பின் கலைந்துசென்றனர். இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், அம்பத்தூர் தொழிற்பேட்டை பட்டரைவாக்கம் போன்ற பகுதியில் உள்ள தொழிற்சாலைகளில் இருந்து மழை நீருடன் கழிவு நீரைக் கலந்து வெளியேற்றியதால் குடியிருப்புகளில் மழை நீருடன் கலந்த கழிவுநீர் சூழ்ந்துள்ளதாகக் குற்றஞ்சாட்டினர்.

சாலை மறியல் செய்யும் பொதுமக்கள்

உடனடியாக சென்னை மாநகராட்சி அலுவலர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை வைத்துள்ளனர். உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் மீண்டும் சாலை மறியல் உள்ளிட்ட போராட்டங்களில் ஈடுபடப்போவதாக பொதுமக்கள் எச்சரித்துள்ளனர்.

இதையும் படிங்க:

சூளகிரியில் குடிநீர் கேட்டு சாலை மறியல் செய்த பெண்கள்!

சென்னையில் கடந்த ஒரு சில நாள்காளக கனமழை பெய்து வருகிறது. இதனால், கொரட்டூர் தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் 500க்கும் மேற்பட்ட வீடுகளை மழைநீர் சூழ்ந்தது. இதையடுத்து, மூன்று நாட்கள் போராடி அரசு அலுவலர்கள் மழை நீரை வெளியேற்றியதால் இயல்பு நிலைக்கு திரும்பியது.

இந்நிலையில், நேற்று மாலை திடீரென மழை நீருடன் கழிவுநீர் கலந்து குடியிருப்புகளை சூழ்ந்தது. இதனால், ஆத்திரமடைந்த பொதுமக்கள் அம்பத்தூர் பட்டரவாக்கம் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இதன் காரணமாக, அப்பகுதியில் போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டது.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்திய பின் கலைந்துசென்றனர். இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், அம்பத்தூர் தொழிற்பேட்டை பட்டரைவாக்கம் போன்ற பகுதியில் உள்ள தொழிற்சாலைகளில் இருந்து மழை நீருடன் கழிவு நீரைக் கலந்து வெளியேற்றியதால் குடியிருப்புகளில் மழை நீருடன் கலந்த கழிவுநீர் சூழ்ந்துள்ளதாகக் குற்றஞ்சாட்டினர்.

சாலை மறியல் செய்யும் பொதுமக்கள்

உடனடியாக சென்னை மாநகராட்சி அலுவலர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை வைத்துள்ளனர். உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் மீண்டும் சாலை மறியல் உள்ளிட்ட போராட்டங்களில் ஈடுபடப்போவதாக பொதுமக்கள் எச்சரித்துள்ளனர்.

இதையும் படிங்க:

சூளகிரியில் குடிநீர் கேட்டு சாலை மறியல் செய்த பெண்கள்!

Intro:சென்னை கொரட்டூர் வீட்டுவசதி வாரிய குடியிருப்பில் மழைநீருடன் கழிவுநீர் புகுந்ததால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்Body:சென்னை கொரட்டூர் வீட்டுவசதி வாரிய குடியிருப்பில் மழைநீருடன் கழிவுநீர் புகுந்ததால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்


கடந்த ஒரு சில தினங்களாக சென்னை புறநகர் பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது இதனால் தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் 500க்கும் மேற்பட்ட வீடுகளை மழைநீர் சூழ்ந்தது. இந்த நிலையில் இரண்டு மூன்று தினங்களாக மழை நீரை அதிகாரிகள் போராடி வெளியேற்றிய நிலையில் இன்று காலை கொரட்டூர் பகுதி இயல்பு நிலைக்கு திரும்பியது இந்த நிலையில் இன்று மாலை திடீரென மழை நீருடன் கழிவுநீர் கலந்து குடியிருப்புகளை சூழ்ந்ததால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் அம்பத்தூர் பட்டரவாக்கம் சாலையில் மறியலில் ஈடுபட்டனர் இதனால் அம்பத்தூர் பட்டரவாக்கம் சாலையில் போக்குவரத்து பெரிதும் பாதிப்புக்கு உள்ளானது இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் பொதுமக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தி போராட்டத்தை கலைத்தனர் இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில் அம்பத்தூர் தொழிற்பேட்டை பட்டரைவாக்கம் போன்ற பகுதியில் உள்ள தொழிற்சாலைகளில் இருந்து மழை நீருடன் கழிவு நீரைக் கலந்து வெளியேற்றியதால் குடியிருப்புகளில் மழை நீருடன் கலந்த கழிவுநீர் சூழ்ந்துள்ள தாக குற்றம்சாட்டினர் உடனடியாக சென்னை மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை வைத்துள்ளனர் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் மீண்டும் சாலைமறியல் உள்ளிட்ட போராட்டத்தில் ஈடுபடப்போவதாக பொதுமக்கள் எச்சரித்துள்ளனர்Conclusion:

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.