ETV Bharat / state

தனியார் பள்ளி மாணவர்களுக்கு தேர்வு வைத்தால் கடும் நடவடிக்கை - Private School Examination heavy Activity

சென்னை: மெட்ரிகுலேசன் இயக்குநரகத்தின் கீழ் செயல்படும் பள்ளிகள் அரசின் அறிவிப்பை மீறி தேர்வு நடத்தினால் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என மெட்ரிகுலேஷன் பள்ளிகள் இயக்குநர் எச்சரித்துள்ளார்.

தனியார் பள்ளியில் தேர்வு வைத்தால் கடும் நடவடிக்கை
தனியார் பள்ளியில் தேர்வு வைத்தால் கடும் நடவடிக்கை
author img

By

Published : May 20, 2020, 1:13 PM IST

தமிழ்நாட்டில் மெட்ரிகுலேசன் இயக்குநரகத்தின் கீழ் செயல்படும் பள்ளிகள் அரசின் அறிவிப்பை மீறி ஒன்றாம் வகுப்பு முதல் ஒன்பதாம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு தேர்வு வைத்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மெட்ரிக்குலேஷன் பள்ளிகள் இயக்குநரகம் எச்சரித்துள்ளது.

இது குறித்து மெட்ரிகுலேஷன் பள்ளிகள் இயக்குநர் கருப்பசாமி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், "தமிழ்நாடு முதலமைச்சர் கரோனா (தீநுண்மி) பரவாமல் தடுக்கும் நடவடிக்கையாக அனைத்துப் பள்ளிகளுக்கும் விடுமுறை அளித்துள்ளார். மேலும், ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு தேர்வுகள் நடத்த பல்வேறு வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டுள்ளன.

குறிப்பாக, ஒன்றாம் வகுப்பு முதல் ஒன்பதாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கும்படி பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்த நிலையில், பள்ளிகள் மீண்டும் திறந்தவுடன் தனியார் பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பு முதல் ஒன்பதாம் வகுப்புவரை மாணவர்களுக்கு தேர்வு நடைபெறும் என சில தனியார் பள்ளிகள் மாணவர்களுக்கு குறுஞ்செய்தி அனுப்பியுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

அரசு அறிவிப்பை மீறி தனியார் பள்ளிகள் செயல்படுவது அரசின் நடவடிக்கையை மீறிய செயலாகும். தனியார் பள்ளிகளில் தேர்வு நடைபெற இருப்பது தெரியவந்தார் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்" இவ்வாறு அவர் கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: கல்வி வியாபாரிகளின் வருமானத்திற்காக 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு!

தமிழ்நாட்டில் மெட்ரிகுலேசன் இயக்குநரகத்தின் கீழ் செயல்படும் பள்ளிகள் அரசின் அறிவிப்பை மீறி ஒன்றாம் வகுப்பு முதல் ஒன்பதாம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு தேர்வு வைத்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மெட்ரிக்குலேஷன் பள்ளிகள் இயக்குநரகம் எச்சரித்துள்ளது.

இது குறித்து மெட்ரிகுலேஷன் பள்ளிகள் இயக்குநர் கருப்பசாமி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், "தமிழ்நாடு முதலமைச்சர் கரோனா (தீநுண்மி) பரவாமல் தடுக்கும் நடவடிக்கையாக அனைத்துப் பள்ளிகளுக்கும் விடுமுறை அளித்துள்ளார். மேலும், ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு தேர்வுகள் நடத்த பல்வேறு வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டுள்ளன.

குறிப்பாக, ஒன்றாம் வகுப்பு முதல் ஒன்பதாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கும்படி பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்த நிலையில், பள்ளிகள் மீண்டும் திறந்தவுடன் தனியார் பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பு முதல் ஒன்பதாம் வகுப்புவரை மாணவர்களுக்கு தேர்வு நடைபெறும் என சில தனியார் பள்ளிகள் மாணவர்களுக்கு குறுஞ்செய்தி அனுப்பியுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

அரசு அறிவிப்பை மீறி தனியார் பள்ளிகள் செயல்படுவது அரசின் நடவடிக்கையை மீறிய செயலாகும். தனியார் பள்ளிகளில் தேர்வு நடைபெற இருப்பது தெரியவந்தார் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்" இவ்வாறு அவர் கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: கல்வி வியாபாரிகளின் வருமானத்திற்காக 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு!

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.