சென்னை: கிழக்கு தாம்பரம் பகுதியை சேர்ந்தவர் வாராகி, இவர் தனியார் மாத இதழ் பத்திரிக்கை நடத்தி வருகிறார். மேலும் ஒரு மக்கள் மன்றத்தையும் நிறுவி அதன் தலைவராகவும் செயல்பட்டு வருகிறார். முன்னதாக தாம்பரம் காவல் ஆணையர் அமல்ராஜ் அவர்களின் புகைப்படத்தை சமூக வலைதளத்தில் பதிவிட்டு அதனுடன் ஒரு வீடியோவையும் சேர்த்து, காவல்துறையினர் மாமூல் வாங்குகிறார்கள். உங்கள் தலைமையின் கீழ் இயங்கும் காவல்துறையின் லட்சணம் இதுதானா என, அவரது சமூக வலைதள பக்கங்களில் இரு தினங்களுக்கு முன்பு பதிவு வெளியிட்டிருந்தார்.
இந்நிலையில் அந்த வீடியோவில் காவல்துறைக்கு ஒவ்வொறு மாதமும் பணம் கொடுத்ததாக பேசிய நபர் விக்ரம் (எ) பாஸ்கர், பள்ளிகரணை காவல் நிலையத்தில் கொடுத்த புகார் மனுவில் தானும் எனது நண்பரான கார்த்திக்கும் கிழக்கு தாம்பரத்தில் ஓயோ நடத்தி வருகிறோம்.
கார்த்திக் சேலையூர் கேம்ப் ரோட்டில் தனியாக ஸ்பா நடந்தி வருகிறார். அங்கு வந்த வாராகி என்பவர் தன்னை பத்திரிக்கையாளர் என்று அறிமுகம் செய்து கொண்டு, அனுமதியில்லாமல் ஸ்பா நடத்தி வருவதாக கார்த்திக்கை மிரட்டி ஒவ்வொரு மாதமும் மாமூல் தர வேண்டும் என பணம் வசூல் செய்து வந்துள்ளார்.
இந்நிலையில் விக்ரமை, கார்த்திக் உடன் சேர்ந்து ஸ்பா நடத்துமாறு வாராகி மிரட்டியுள்ளார். அதற்கு விக்ரம் மறுத்துள்ளார். அதற்கு வாராகி என்னை கவனித்து கொண்டால் அனைத்து பிரச்சினைகளையும் பார்த்து கொள்கிறேன் என கூறியுள்ளார். அப்படியே காவல்துறையில் சிக்கிக் கொண்டாலும் நான் சொல்வதை போல் காவல்துறையினர் லஞ்சம் வாங்குவதாக சொல்லிவிடு என கூறியுள்ளார்.
இதையும் படிங்க: ஐபிஎஸ் வேடமணிந்து அண்ணன் நகையை கொள்ளையடிக்க தம்பி போட்டதிட்டம்- விசாரணையில் அம்பலம்
அப்போது விக்ரம் ஒப்புக் கொள்ளாததால், ஆத்திரமடைந்த வாராகி கடந்த 6ம் தேதி விக்ரமை மேடவாக்கம் பிரதான சாலை, வெள்ளக்கல் சுடுகாடு அருகே வழிமறித்து “நீ ஸ்பா நடத்த ஒப்புக் கொள்ளவில்லை என்றால் நீ சம்பந்தப்பட்ட ஆடியோ, விடியோ என்னிடம் உள்ளது அதனை சமூக வலைதளங்களில் பதிவிட்டு உன்னையும், உன் குடும்பத்தையும் அசிங்கப்படுத்தி விடுவேன்” என மிரட்டி உள்ளார். அப்போது வாராகியுடன் காரில் அடியாட்கள் சிலர் இருந்துள்ளனர்.
இதனால் அச்சம் அடைந்த விக்ரம் சொந்த ஊர் சென்றுள்ளார். அதன் பிறகு வாராகி சொன்னபடி 16ம் தேதி வீடியோவை வெளியிட்டு அவமானப்படுத்தி உள்ளார். இதனால் மன உளைச்சல் அடைந்த விக்ரம், வாராகி மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பள்ளிக்கரணை காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
அதன் பேரில் தனியார் மாத இதழ் ஆசிரியர் கைது செய்யப்பட்டார். அவர் மீது வழிமறித்து மிரட்டுவது, மிரட்டி பயத்தை ஏற்படுத்தி பணம் பறிப்பது உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது. மேலும் வாராகியிடம் பள்ளிக்கரணை காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: நீட் தேர்வை ரத்து செய்ய கோரி உதயநிதி ஸ்டாலின் தலைமையில் ஒரு நாள் உண்ணாவிரதப் போராட்டம்!