ETV Bharat / state

புதிதாக வரும் தண்டனை கைதிகளைத் தனி அறையில் வைக்க வேண்டும் டிஜிபி உத்தரவு

author img

By

Published : Apr 3, 2020, 6:12 PM IST

சென்னை: சிறையில் புதிதாக வரும் தண்டனை கைதிகளைத் தனி அறையில் வைக்க வேண்டும் என சிறைத் துறை டிஜிபி உத்தரவிட்டுள்ளார்.

Prisoners issue
Prisoners issue

கரோனா பரவலைத் தடுக்க தமிழ்நாடு அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. குறிப்பாக தமிழ்நாடு சிறைகளில் கரோனா பரவலைத் தடுக்கும் விதமாக 3500க்கும் மேற்பட்ட சிறை கைதிகளை இடைக்கால ஜாமீன் வழங்கி விடுதலையும் செய்தனர்.

மேலும் கைதிகளைப் பார்க்க வரும் பார்வையாளரின் நேரத்தை தடை செய்து வீடியோ கால் மூலம் குடும்பத்தினரிடம் பேசவும் சிறைத்துறையினர் ஏற்பாடு செய்துள்ளனர். இந்த நிலையில் குற்றம் புரிந்து புதிதாக சிறைக்கு வரும் குற்றவாளிகளை சுகாதாரத் துறை அலுவலர்கள் முழுவதுமாக பரிசோதித்து தனி அறையில் வைக்க ஏற்பாடு செய்திருப்பதாகவும், புதிய கைதிகளுடன் ஏற்கனவே சிறையில் இருக்கும் கைதிகள் தொடர்பு கொள்ளாதவாறு வைத்திருக்க வேண்டும் எனவும் சிறைத்துறை டிஜிபி சுனில் குமார் சிங் அனைத்து சிறைத்துறை அலுவலர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.

மேலும், அவருக்கு ஏதேனும் அறிகுறிகள் இருந்தால் உடனே அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்ப வேண்டும் என கூறியுள்ளார். இவற்றை காவல்துறையினரும் பின்பற்ற வேண்டும் என ஏற்கெனவே சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும் எந்தெந்த சிறைகளில் தனியாக அறை ஒதுக்கப்பட்டுள்ளது என்ற விவரங்களும் கொடுக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: அகல்விளக்கை ஏற்றுவதற்கு அறிவியல் பூர்வமான காரணம் உண்டா பிரதமரே! - எம்.பி சுப்பராயன்

கரோனா பரவலைத் தடுக்க தமிழ்நாடு அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. குறிப்பாக தமிழ்நாடு சிறைகளில் கரோனா பரவலைத் தடுக்கும் விதமாக 3500க்கும் மேற்பட்ட சிறை கைதிகளை இடைக்கால ஜாமீன் வழங்கி விடுதலையும் செய்தனர்.

மேலும் கைதிகளைப் பார்க்க வரும் பார்வையாளரின் நேரத்தை தடை செய்து வீடியோ கால் மூலம் குடும்பத்தினரிடம் பேசவும் சிறைத்துறையினர் ஏற்பாடு செய்துள்ளனர். இந்த நிலையில் குற்றம் புரிந்து புதிதாக சிறைக்கு வரும் குற்றவாளிகளை சுகாதாரத் துறை அலுவலர்கள் முழுவதுமாக பரிசோதித்து தனி அறையில் வைக்க ஏற்பாடு செய்திருப்பதாகவும், புதிய கைதிகளுடன் ஏற்கனவே சிறையில் இருக்கும் கைதிகள் தொடர்பு கொள்ளாதவாறு வைத்திருக்க வேண்டும் எனவும் சிறைத்துறை டிஜிபி சுனில் குமார் சிங் அனைத்து சிறைத்துறை அலுவலர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.

மேலும், அவருக்கு ஏதேனும் அறிகுறிகள் இருந்தால் உடனே அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்ப வேண்டும் என கூறியுள்ளார். இவற்றை காவல்துறையினரும் பின்பற்ற வேண்டும் என ஏற்கெனவே சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும் எந்தெந்த சிறைகளில் தனியாக அறை ஒதுக்கப்பட்டுள்ளது என்ற விவரங்களும் கொடுக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: அகல்விளக்கை ஏற்றுவதற்கு அறிவியல் பூர்வமான காரணம் உண்டா பிரதமரே! - எம்.பி சுப்பராயன்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.