ETV Bharat / state

Senthil Balaji: அமலாக்கத்துறை ஆவணங்கள் கோரிய மனு தள்ளுபடி! சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் தீர்ப்பு!

author img

By

Published : Aug 14, 2023, 10:35 PM IST

Updated : Aug 15, 2023, 3:39 PM IST

அமலாக்கத் துறை தாக்கல் செய்த ஆவணங்களை முழுமையாக வழங்க கோரி செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனுவை, விசாரிக்கும்படி வலியுறுத்தாததால் வழக்கை தள்ளுபடி செய்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Etv Bharat
Etv Bharat

சென்னை: சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச் சட்ட வழக்கில் கடந்த ஜூன் 14ஆம் தேதி கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜியின் கைது நடவடிக்கை சரியானது என உச்ச நீதிமன்ற தீர்ப்பிற்கு பிறகு, ஆகஸ்ட் 7 முதல் 12ஆம் தேதி வரை அமலாக்கத்துறை காவலில் எடுத்து விசாரணை மேற்கொண்டது.

இதனையடுத்து செந்தில் பாலாஜி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி முன்பு ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது, செந்தில் பாலாஜி மீது 120 பக்கங்களுக்கும் மேற்பட்ட குற்றப்பத்திரிகையும், மூவாயிரம் பக்கங்களைக் கொண்ட ஆவணங்களையும் டிரங்க் பெட்டியில் வைத்து தாக்கல் செய்தது அமலாக்கத்துறை.

வழக்கை விசாரித்த நீதிபதி அல்லி, செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவலை மீண்டும் நீட்டித்து, வரும் ஆகஸ்ட் 25ஆம் தேதி வரை அமைச்சர் செந்தில் பாலாஜி நீதிமன்ற காவலில் இருக்குமாறு உத்தரவிட்டார். அதன் பின் அமைச்சர் செந்தில் காவல்துறை பாதுகாப்பில் புழல் சிறையில் மீண்டும் அடைக்கப்பட்டார்.

இந்நிலையில், அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிராக அமலாக்கத்துறையினர் தாக்கல் செய்த கைது குறிப்பாணை, குற்றப்பத்திரிகை, அதனுடன் தாக்கல் செய்த ஆவணங்கள் என அனைத்து விபரங்களையும் முழுமையாக வழங்க கோரி செந்தில் பாலாஜி தரப்பில் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டு இருந்தது.

இதையடுத்து, அமலாக்கத்துறை தரப்பிற்கு மனுத் தாக்கல் செய்தது குறித்த தகவலை தெரிவிக்குமாறு செந்தில் பாலாஜி தரப்பு வழக்கறிஞர் அறிவுறுத்தல் வழங்கினார். ஆனால், இந்த மனுவை நீதிமன்றத்தில் விசாரிக்கும்படி வலியுறுத்தவில்லை என தெரிய வந்ததால் செந்தில் பாலாஜி தரப்பில் ஆவணங்களை கோரிய மனுவை தள்ளுபடி செய்வதாக நீதிபதி அல்லி உத்தரவிட்டார்.

இதையும் படிங்க: கவர்ச்சி அறிவிப்புகளால் ஆன்லைன் நிறுவனங்கள் பணம் சம்பாதிக்கின்றன- தமிழக அரசு வாதம்!

சென்னை: சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச் சட்ட வழக்கில் கடந்த ஜூன் 14ஆம் தேதி கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜியின் கைது நடவடிக்கை சரியானது என உச்ச நீதிமன்ற தீர்ப்பிற்கு பிறகு, ஆகஸ்ட் 7 முதல் 12ஆம் தேதி வரை அமலாக்கத்துறை காவலில் எடுத்து விசாரணை மேற்கொண்டது.

இதனையடுத்து செந்தில் பாலாஜி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி முன்பு ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது, செந்தில் பாலாஜி மீது 120 பக்கங்களுக்கும் மேற்பட்ட குற்றப்பத்திரிகையும், மூவாயிரம் பக்கங்களைக் கொண்ட ஆவணங்களையும் டிரங்க் பெட்டியில் வைத்து தாக்கல் செய்தது அமலாக்கத்துறை.

வழக்கை விசாரித்த நீதிபதி அல்லி, செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவலை மீண்டும் நீட்டித்து, வரும் ஆகஸ்ட் 25ஆம் தேதி வரை அமைச்சர் செந்தில் பாலாஜி நீதிமன்ற காவலில் இருக்குமாறு உத்தரவிட்டார். அதன் பின் அமைச்சர் செந்தில் காவல்துறை பாதுகாப்பில் புழல் சிறையில் மீண்டும் அடைக்கப்பட்டார்.

இந்நிலையில், அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிராக அமலாக்கத்துறையினர் தாக்கல் செய்த கைது குறிப்பாணை, குற்றப்பத்திரிகை, அதனுடன் தாக்கல் செய்த ஆவணங்கள் என அனைத்து விபரங்களையும் முழுமையாக வழங்க கோரி செந்தில் பாலாஜி தரப்பில் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டு இருந்தது.

இதையடுத்து, அமலாக்கத்துறை தரப்பிற்கு மனுத் தாக்கல் செய்தது குறித்த தகவலை தெரிவிக்குமாறு செந்தில் பாலாஜி தரப்பு வழக்கறிஞர் அறிவுறுத்தல் வழங்கினார். ஆனால், இந்த மனுவை நீதிமன்றத்தில் விசாரிக்கும்படி வலியுறுத்தவில்லை என தெரிய வந்ததால் செந்தில் பாலாஜி தரப்பில் ஆவணங்களை கோரிய மனுவை தள்ளுபடி செய்வதாக நீதிபதி அல்லி உத்தரவிட்டார்.

இதையும் படிங்க: கவர்ச்சி அறிவிப்புகளால் ஆன்லைன் நிறுவனங்கள் பணம் சம்பாதிக்கின்றன- தமிழக அரசு வாதம்!

Last Updated : Aug 15, 2023, 3:39 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.