ETV Bharat / state

'தமிழ்நாட்டில் மேலும் 4 புதிய மருத்துவக் கல்லூரிகள் தொடங்கப்படும்' - விஜயபாஸ்கர்

சென்னை: தமிழ் நாட்டில் கூடுதலாக நான்கு புதிய மருத்துவக் கல்லூரிகள் தொடங்க மத்திய அரசிடம் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளதாக பூந்தமல்லியில் நடைபெற்ற சர்வதேச பல் மருத்துவர் கருத்தரங்கு தொடக்க விழாவில் தமிழ்நாடு சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.

author img

By

Published : Dec 10, 2019, 8:05 PM IST

minister vijayabaskar
minister vijayabaskar

சென்னை அருகேயுள்ள பூந்தமல்லியில் சவிதா பல் மருத்துவக் கல்லூரியில் சர்வதேச பல் மருத்துவக் கருத்தரங்கு தொடக்க விழா நடைபெற்றது. இதில் தமிழ்நாடு துணை முதலமைச்சர் ஓ. பன்னீர் செல்வம், தமிழ்நாடு சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் ஆகியோர் கலந்து கொண்டு குத்து விளக்கேற்றி தொடங்கி வைத்தனர்.

மூன்று நாள் நடைபெறும் இந்தக் கருத்தரங்கில் இலங்கை, நேபாளம் மற்றும் பல்வேறு நாடுகளைச் சார்ந்த பல் மருத்துவர்கள் 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இதில், பல் மருத்துவத் துறையிலுள்ள வேலைவாய்ப்புகள் பல்வேறு நாடுகளில் உள்ள கல்வி முறைகள் குறித்தும் மாணவர்களுக்கு விளக்கப்பட்டது.

இதன் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய அமைச்சர் விஜயபாஸ்கர், "பல் மருத்துவப் படிப்பு என்பது மருத்துவத் துறைக்கு இணையான ஒரு படிப்பாகும். எனவே, பல் மருத்துவம் முடித்தவர்களுக்கு வேலை வாய்ப்பு உருவாக்கும் வகையில் முதலமைச்சர் ஒப்புதலோடு தாலுகா வாரியாக பல் மருத்துவ மையங்கள் ஏற்படுத்தப்படும்.

இதனுடன் சேர்த்து ஒவ்வொரு மாவட்டத்திலும் நடமாடும் பல் மருத்துவக் குழுவும் தொடங்குவதற்கு விரைவில் அறிவிப்பாக அரசாணை பிறப்பிக்கப்படும். ஐயாயிரத்து 724 பேர் மருத்துவர்கள், செவிலியர்கள் இன்றைக்கு மெகா நியமனம் செய்யப்பட்டனர்.

புதிதாக பெறப்பட்டுள்ள ஒன்பது புதிய அரசு மருத்துவக் கல்லூரியில், ஒரு மருத்துவக் கல்லூரிக்கு 300 மருத்துவர்கள் 600 பாராமெடிக்கல் செவிலியர்கள் என 900 புதிய மருத்துவப் பணியிடங்கள் உருவாக்கப்படும். இவையனைத்தும் மருத்துவப் பணியாளர் தேர்வாணையம் மூலமாக நிரப்பப்படும்.

'நான்கு புதிய மருத்துவக் கல்லூரிகள் கிடைக்கும்'

கூடுதலாக மேலும் நான்கு மருத்துவக் கல்லூரிக்கான கோரிக்கையை மத்திய அரசிடம் வழங்கியுள்ளோம். அதன்படி கடலூர், கள்ளக்குறிச்சி, காஞ்சிபுரம், அரியலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் நான்கு புதிய அரசு மருத்துவக் கல்லூரிகள் தொடங்கவுள்ளோம்" என்றார்.

இதையும் படிங்க: திண்டுக்கல்லில் அழகிரி: தொண்டர்களிடையே தள்ளுமுள்ளு... களேபரமான கூட்டம்!

சென்னை அருகேயுள்ள பூந்தமல்லியில் சவிதா பல் மருத்துவக் கல்லூரியில் சர்வதேச பல் மருத்துவக் கருத்தரங்கு தொடக்க விழா நடைபெற்றது. இதில் தமிழ்நாடு துணை முதலமைச்சர் ஓ. பன்னீர் செல்வம், தமிழ்நாடு சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் ஆகியோர் கலந்து கொண்டு குத்து விளக்கேற்றி தொடங்கி வைத்தனர்.

மூன்று நாள் நடைபெறும் இந்தக் கருத்தரங்கில் இலங்கை, நேபாளம் மற்றும் பல்வேறு நாடுகளைச் சார்ந்த பல் மருத்துவர்கள் 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இதில், பல் மருத்துவத் துறையிலுள்ள வேலைவாய்ப்புகள் பல்வேறு நாடுகளில் உள்ள கல்வி முறைகள் குறித்தும் மாணவர்களுக்கு விளக்கப்பட்டது.

இதன் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய அமைச்சர் விஜயபாஸ்கர், "பல் மருத்துவப் படிப்பு என்பது மருத்துவத் துறைக்கு இணையான ஒரு படிப்பாகும். எனவே, பல் மருத்துவம் முடித்தவர்களுக்கு வேலை வாய்ப்பு உருவாக்கும் வகையில் முதலமைச்சர் ஒப்புதலோடு தாலுகா வாரியாக பல் மருத்துவ மையங்கள் ஏற்படுத்தப்படும்.

இதனுடன் சேர்த்து ஒவ்வொரு மாவட்டத்திலும் நடமாடும் பல் மருத்துவக் குழுவும் தொடங்குவதற்கு விரைவில் அறிவிப்பாக அரசாணை பிறப்பிக்கப்படும். ஐயாயிரத்து 724 பேர் மருத்துவர்கள், செவிலியர்கள் இன்றைக்கு மெகா நியமனம் செய்யப்பட்டனர்.

புதிதாக பெறப்பட்டுள்ள ஒன்பது புதிய அரசு மருத்துவக் கல்லூரியில், ஒரு மருத்துவக் கல்லூரிக்கு 300 மருத்துவர்கள் 600 பாராமெடிக்கல் செவிலியர்கள் என 900 புதிய மருத்துவப் பணியிடங்கள் உருவாக்கப்படும். இவையனைத்தும் மருத்துவப் பணியாளர் தேர்வாணையம் மூலமாக நிரப்பப்படும்.

'நான்கு புதிய மருத்துவக் கல்லூரிகள் கிடைக்கும்'

கூடுதலாக மேலும் நான்கு மருத்துவக் கல்லூரிக்கான கோரிக்கையை மத்திய அரசிடம் வழங்கியுள்ளோம். அதன்படி கடலூர், கள்ளக்குறிச்சி, காஞ்சிபுரம், அரியலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் நான்கு புதிய அரசு மருத்துவக் கல்லூரிகள் தொடங்கவுள்ளோம்" என்றார்.

இதையும் படிங்க: திண்டுக்கல்லில் அழகிரி: தொண்டர்களிடையே தள்ளுமுள்ளு... களேபரமான கூட்டம்!

Intro:தமிழகத்தில் மேலும் 4 புதிய மருத்துவ கல்லூரிகள் துவங்க மத்திய அரசிடம் கோரிக்கை வைக்கப் பட்டுள்ளதாக பூந்தமல்லியில் நடைபெற்ற சர்வதேச பல் மருத்துவர் கருத்தரங்கு துவக்க விழாவிற்கு பின்னர் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் பேட்டி


Body:சென்னை அடுத்த பூந்தமல்லியில் சவிதா பல் மருத்துவ கல்லூரியில் சர்வதேச பல் மருத்துவ கருத்தரங்கு துவக்க விழா நடைபெற்றது இதில் தமிழக துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் மற்றும் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் ஆகியோர் கலந்து கொண்டு குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தனர் இந்த மூன்று நாள் கருத்தரங்கில் இலங்கை நேபாளம் மற்றும் பல்வேறு நாடுகளை சார்ந்த பல் மருத்துவர்கள் பல் மருத்துவ சங்கங்களில் உறுப்பினராக உள்ளவர்கள் என 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர் இந்த கருத்தரங்கில் பல் மருத்துவ துறையில் உள்ள வேலைவாய்ப்புகள் பல்வேறு நாடுகளில் உள்ள கல்வி முறைகள் குறித்தும் மாணவர்களுக்கு விளக்கி கூறப்பட்டது


Conclusion:பின்னர் அவர்களை சந்தித்த தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் பல் மருத்துவ படிப்பு என்பது மருத்துவ துறைக்கு இணையான ஒரு படிப்பு எனவே பல்மருத்துவம் முடித்த அவர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கும் வகையில் மாவட்ட அளவில் உள்ள கொடுத்து வைத்த முடித்து அந்த வீடியோஸ் முடித்தவர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்க கூடிய வகையில் ஏற்கனவே மாவட்ட அளவில் இருக்கக்கூடிய அந்த பிரிவுகளை தற்போது முதலமைச்சர் ஒப்புதலோடு தாலுகா வாரியாக பல்மருத்துவ மையங்கள் ஏற்படுத்தப்படும் இதனுடன் சேர்த்து ஒவ்வொரு மாவட்டத்திலும் நடமாடும் பல் மருத்துவக் குழுவும் தொடங்குவதற்கு மாண்புமிகு முதலமைச்சர் பதவியை வழங்க நடவடிக்கை எடுக்க அறிவிப்பாக அரசாணை பிறப்பிக்கப்படும் எனதெரிவித்தார் தொடர்ந்து பேசிய அவர் 5724 பேர் மருத்துவர்கள் செவிலியர்கள் இன்றைக்கு மெகா நியமனம் செய்ய பட்டனர் மேலும் 9 புதிய அரசு மருத்துவக் கல்லூரி நம்ம பெற்றிருக்கின்றோம் 9 புதிய அரசு மருத்துவக் கல்லூரி கல்லூரியில் ஒரு மருத்துவக் கல்லூரிக்கு 300 மருத்துவர்கள் 600 பரமெடிகல்ஸ் செவிலியர்கள் என 900 புதிய மருத்துவ பணியிடங்கள் உருவாக்கப்படும் என கூறினார். இவை மருத்துவப் பணியாளர் தேர்வாணையம் மூலமாக ஒரு மருத்துவமனை க்கு900 புதிய மருத்துவர்கள் நேரடியாக உருவாக்கப்படும். இதன் மூலம் மாவட்டத்தில் மருத்துவ சேவையின் தரம் உயரும்.தமிழகம் மருத்துவ துறையில் ஒரு மகத்தான வளர்ச்சி அடைந்துள்ளது பதினைந்து இருபது ஆண்டுகளுக்கு பின்னர் பெறகூடிய வளர்ச்சியை இந்த ஆண்டுடேதமிழகம் எட்டிஉள்ளது. கூடுதலான மேலும் நான்கு மருத்துவக் கல்லூரிக்கான கோரிக்கையை மத்திய அரசிடம் வழங்கிஉள்ளோம் இவை கடலூர் ,கள்ளகுறிச்சி ,காஞ்சிபுரம் ,அரியலூர்மாவட்டங்களில் நான்கு புதிய அரசு மருத்துவ கல்லூரிகள் துவங்க உள்ளோம் என தகவல் அளித்தார். புதிதாக துவங்கப்பட உள்ள மருத்துவ கல்லூரிகளில் தமிழகத்தில் பின்பற்றப்படும் இட ஒதுக்கீட்டு முறையை பின்பற்ற படும் என நம்பிக்கை தெரிவித்தார்
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.