ETV Bharat / state

பொங்கல் பரிசு 21ஆம் தேதி வரை கிடைக்கும் - தமிழ்நாடு அரசு

author img

By

Published : Jan 13, 2020, 7:53 PM IST

சென்னை : பொங்கல் பரிசு பெறுவதற்கான கால அவகாசத்தை 21ஆம் தேதி வரை நீட்டித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.

CM Edappadi Pongal Gift, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பொங்கல் பரிசு
CM Edappadi Pongal Gift

பொங்கல் பண்டிகை சிறப்பாகக் கொண்டாடுவதற்காக கரும்பு, பச்சரிசி, முந்திரி உள்ளிட்ட பொருட்களுடன் ஆயிரம் ரூபாய் ரொக்கம் அடங்கிய பொங்கல் பரிசு வழங்கப்படும் என தமிழ்நாடு முதலமைச்சர் அறிவித்திருந்தார். அதன்படி கடந்த 9ஆம் தேதி முதல் 12ஆம் தேதி வரை ரேஷன் கடைகளில் பொங்கல் பரிசு வழங்கப்பட்டது.

தமிழ்நாட்டில் மொத்தம் 2 கோடி 30 ஆயிரத்து 431 அரிசி அட்டைதாரர்களுக்கு பொங்கல் சிறப்பு பரிசு தொகுப்பு கொடுக்க திட்டமிடப்பட்டு, தற்போதுவரை 1 கோடியே 89 லட்சத்து 70 ஆயிரத்து 686 குடும்பங்களுக்கு பரிசு தொகுப்பு விநியோகிக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 10 லட்சத்து 59 ஆயிரத்து 745 குடும்பங்களுக்கு இன்று மாலைக்குள் வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

அனைத்து அரிசி ரேஷன் அட்டைதாரர்களுக்கும் தமிழ்நாடு அரசால் அறிவிக்கப்பட்ட பொங்கல் சிறப்பு பரிசு தொகுப்புடன் 1000 ரூபாய் பணம் நேற்று மாலை 6 மணி வரை 94.71 விழுக்காடு பேருக்கு கொடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், பொங்கல் பரிசு வாங்குவதற்கான கால அவகாசத்தை 21ஆம் தேதி வரை நீட்டித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. இதற்கான சுற்றறிக்கையை உணவுப் பொருள்கள் வழங்கல் துறை ஆணையர் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் அனுப்பியுள்ளார்.

இதையும் படிங்க : தென் திருவிதாங்கூர் இந்து கல்லூரியில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாட்டம்

பொங்கல் பண்டிகை சிறப்பாகக் கொண்டாடுவதற்காக கரும்பு, பச்சரிசி, முந்திரி உள்ளிட்ட பொருட்களுடன் ஆயிரம் ரூபாய் ரொக்கம் அடங்கிய பொங்கல் பரிசு வழங்கப்படும் என தமிழ்நாடு முதலமைச்சர் அறிவித்திருந்தார். அதன்படி கடந்த 9ஆம் தேதி முதல் 12ஆம் தேதி வரை ரேஷன் கடைகளில் பொங்கல் பரிசு வழங்கப்பட்டது.

தமிழ்நாட்டில் மொத்தம் 2 கோடி 30 ஆயிரத்து 431 அரிசி அட்டைதாரர்களுக்கு பொங்கல் சிறப்பு பரிசு தொகுப்பு கொடுக்க திட்டமிடப்பட்டு, தற்போதுவரை 1 கோடியே 89 லட்சத்து 70 ஆயிரத்து 686 குடும்பங்களுக்கு பரிசு தொகுப்பு விநியோகிக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 10 லட்சத்து 59 ஆயிரத்து 745 குடும்பங்களுக்கு இன்று மாலைக்குள் வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

அனைத்து அரிசி ரேஷன் அட்டைதாரர்களுக்கும் தமிழ்நாடு அரசால் அறிவிக்கப்பட்ட பொங்கல் சிறப்பு பரிசு தொகுப்புடன் 1000 ரூபாய் பணம் நேற்று மாலை 6 மணி வரை 94.71 விழுக்காடு பேருக்கு கொடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், பொங்கல் பரிசு வாங்குவதற்கான கால அவகாசத்தை 21ஆம் தேதி வரை நீட்டித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. இதற்கான சுற்றறிக்கையை உணவுப் பொருள்கள் வழங்கல் துறை ஆணையர் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் அனுப்பியுள்ளார்.

இதையும் படிங்க : தென் திருவிதாங்கூர் இந்து கல்லூரியில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாட்டம்

Intro:Body: இன்றுடன் முடிவடையும் என அறிவிக்கப்பட்டிருந்த பொங்கல் பரிசு பெறுவதற்கு காலஅவகாசம் 21ஆம் தேதி நீட்டிப்பு செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

பொங்கல் பண்டிகை சிறப்பாக கொண்டாடுவதற்காக கரும்பு பச்சரிசி முந்திரி உள்ளிட்ட பொருட்களுடன் ஆயிரம் ரூபாய் ரொக்கம் அடங்கிய பொங்கல் பரிசு வழங்கப்படும் என தமிழக முதல்வர் அறிவித்திருந்தார். அதன்படி கடந்த 9ம் தேதி முதல் 12ஆம் தேதி வரை ரேஷன் கடைகளில் பொங்கல் பரிசு வழங்கப்பட்டது.


தமிழகத்தில் மொத்தம் 2 கோடி 30 ஆயிரத்து 431 அரிசி அட்டைத்தாரர்களுக்கு பொங்கல் சிறப்பு பரிசு தொகுப்பு கொடுக்க திட்டமிடப்பட்டு, தற்போது வரை 1 கோடியே 89 லட்சத்து 70 ஆயிரத்து 686 குடும்பங்களுக்கு பரிசு தொகுப்பு விநியோகப்பட்டுள்ளது. மீதமுள்ள 10 லட்சத்து 59 ஆயிரத்து 745 குடும்பங்களுக்கு இன்று மாலைக்குள் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்த்து.

அனைத்து அரிசி ரேஷன் அட்டை தாரர்களுக்கு தமிழக அரசால் அறிவிக்கப்பட்ட பொங்கல் சிறப்பு பரிசு தொகுப்புடன் 1000 ரூபாய் பணம் நேற்று மாலை 6 மணி வரை 94.71 % கொடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் பொங்கல் பரிசு வாங்குவதற்கான கால அவகாசத்தை 21ஆம் தேதி வரை நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதற்கான சுற்றறிக்கையை உணவுப் பொருள்கள் வழங்கல் துறை ஆணையர் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கு அனுப்பியுள்ளார். Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.