ETV Bharat / state

மாதிரி கிராமத்தை உருவாக்கி பொங்கல் கொண்டாடிய சென்னை காவல் துறையினர் - Pongal Festival Celebrated by Police Parangimalai

சென்னை: பரங்கிமலை ஆயுதப்படை மைதானத்தில் மாதிரி கிராமத்தை உருவாக்கம் செய்து சென்னை காவல் துறை சார்பில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.

காவல் துறையினர் பொங்கல் விழா கொண்டாட்டம்
காவல் துறையினர் பொங்கல் விழா கொண்டாட்டம்
author img

By

Published : Jan 15, 2020, 10:17 AM IST

சென்னையை அடுத்த பரங்கிமலை ஆயுதப்படை மைதானத்தில் மாவட்ட காவல் துறையினர், மாதிரி கிராமத்தை உருவாக்கி பொங்கல் விழாவைக் கொண்டாடினர். இந்த விழாவில் சென்னை மாநகர காவல் துறை ஆணையர் ஏ.கே. விஸ்வநாதன், அவரது மனைவியும் காவல்துறை அலுவலருமான சீமா அகர்வால், கூடுதல் ஆணையர் பிரேம் ஆனந்த் சின்ஹா, இணை ஆணையர் மகேஸ்வரி, துணை ஆணையர் பிரபாகர் உள்ளிட்ட காவல்துறை அலுவலர்கள் தங்களின் குடும்பத்தினருடன் கலந்துகொண்டனர்.

பின்னர் ஆணையர் விஸ்வநாதன் தலைமையில் சமத்துவ பொங்கல் வைக்கப்பட்டது. தொடர்ந்து கிராமப்புற விளையாட்டுகளை காவல் துறையினர் குடும்பங்களுடன் விளையாடி மகிழ்ந்தனர். குறிப்பாக காவல் துறையினருக்கான கயிறு இழுக்கும் போட்டியும் அவர்களது குழந்தைகளின் நடன நிகழ்ச்சியும் நடைபெற்றது.

காவல் துறையினர் பொங்கல் விழா கொண்டாட்டம்

விழாவில் ஆணையர் விஸ்வநாதன் பேசுகையில், "சென்னையில் பணிபுரியும் காவல் துறையினர் சொந்த ஊருக்கு சென்று பொங்கல் கொண்டாட முடியாத நிலை ஏற்படும். எனவே, அவர்களின் ஊரில் கொண்டாடுவதைப் போன்று இங்கும் பொங்கல் கொண்டாட வேண்டும் என்பதற்காக சென்னை நகரில் காவல் துறையினர் மாதிரி கிராமத்தை உருவாக்கியுள்ளனர். காவல் துறை நினைத்தால் செய்ய முடியாத விசயமே இல்லை.

நான் இங்கு சிறு வயதில் சாப்பிட்ட ஜவ்வு மிட்டாயை சாப்பிட்டேன். அது என்னுடைய ஏழு வயதில் நடந்த சம்பவங்களை நினைவுப்படுத்தின. காவல்துறை குடும்ப பொங்கல் விழா முலம் அனைவரும் ஒரே குடும்ப என்ற உணர்வை ஏற்படுத்துகிறது" என்றார்.

இதையும் படிங்க: காணும் பொங்கலை முன்னிட்டு 5 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு!

சென்னையை அடுத்த பரங்கிமலை ஆயுதப்படை மைதானத்தில் மாவட்ட காவல் துறையினர், மாதிரி கிராமத்தை உருவாக்கி பொங்கல் விழாவைக் கொண்டாடினர். இந்த விழாவில் சென்னை மாநகர காவல் துறை ஆணையர் ஏ.கே. விஸ்வநாதன், அவரது மனைவியும் காவல்துறை அலுவலருமான சீமா அகர்வால், கூடுதல் ஆணையர் பிரேம் ஆனந்த் சின்ஹா, இணை ஆணையர் மகேஸ்வரி, துணை ஆணையர் பிரபாகர் உள்ளிட்ட காவல்துறை அலுவலர்கள் தங்களின் குடும்பத்தினருடன் கலந்துகொண்டனர்.

பின்னர் ஆணையர் விஸ்வநாதன் தலைமையில் சமத்துவ பொங்கல் வைக்கப்பட்டது. தொடர்ந்து கிராமப்புற விளையாட்டுகளை காவல் துறையினர் குடும்பங்களுடன் விளையாடி மகிழ்ந்தனர். குறிப்பாக காவல் துறையினருக்கான கயிறு இழுக்கும் போட்டியும் அவர்களது குழந்தைகளின் நடன நிகழ்ச்சியும் நடைபெற்றது.

காவல் துறையினர் பொங்கல் விழா கொண்டாட்டம்

விழாவில் ஆணையர் விஸ்வநாதன் பேசுகையில், "சென்னையில் பணிபுரியும் காவல் துறையினர் சொந்த ஊருக்கு சென்று பொங்கல் கொண்டாட முடியாத நிலை ஏற்படும். எனவே, அவர்களின் ஊரில் கொண்டாடுவதைப் போன்று இங்கும் பொங்கல் கொண்டாட வேண்டும் என்பதற்காக சென்னை நகரில் காவல் துறையினர் மாதிரி கிராமத்தை உருவாக்கியுள்ளனர். காவல் துறை நினைத்தால் செய்ய முடியாத விசயமே இல்லை.

நான் இங்கு சிறு வயதில் சாப்பிட்ட ஜவ்வு மிட்டாயை சாப்பிட்டேன். அது என்னுடைய ஏழு வயதில் நடந்த சம்பவங்களை நினைவுப்படுத்தின. காவல்துறை குடும்ப பொங்கல் விழா முலம் அனைவரும் ஒரே குடும்ப என்ற உணர்வை ஏற்படுத்துகிறது" என்றார்.

இதையும் படிங்க: காணும் பொங்கலை முன்னிட்டு 5 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு!

Intro:பரங்கிமலையில் கிராமம் போல் உருவாக்கி பொங்கல் விழா கொண்டாடிய போலீஸ் குடும்பத்தினர் சிறு வயது நினைவை ஏற்படுத்தியதாக போலீஸ் கமிஷனர் பேச்சுBody:பரங்கிமலையில் கிராமம் போல் உருவாக்கி பொங்கல் விழா கொண்டாடிய போலீஸ் குடும்பத்தினர் சிறு வயது நினைவை ஏற்படுத்தியதாக போலீஸ் கமிஷனர் பேச்சு

சென்னையை அடுத்த பரங்கிமலை ஆயுதப்படை மைதானத்தில் பரங்கிமலை மாவட்ட போலீஸ் சார்பில் காவலர் குடும்ப பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. இந்த விழாவில் சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் விஸ்வநாதன் தனது மனைவியும் போலீஸ் அதிகாரியுமான சீமா அகர்வால், கூடுதல் கமிஷனர் பிரேம் ஆனந்த் சின்ஹா, இணை கமிஷனர் மகேஸ்வரி, துணை கமிஷனர் பிரபாகர் உள்பட போலீஸ் அதிகாரிகள், போலீசார் குடும்பத்தினருடன் கலந்துக் கொண்டனர். இதையடுத்து பரங்கிமலை ஆயுதப்படை மைதானத்தை மாதிரி கிராம் போல் மாற்றப்பட்டது. மாடுகள், ஆடுகள் அமைக்கப்பட்டது. போலீஸ் கமிஷனர் விஸ்வநாதன் தலைமையில் சமத்துவ பொங்கல் வைக்கப்பட்டது. பின்னர் கிராமங்களில் உள்ள கலாச்சார, பண்பாட்டு முறைகளை பார்வையிட்டார். கிராமப்புற விளையாட்டுகளை போலீசார் விளையாடி மகிழ்ந்தனர். போலீசாரின் கயிறு இழுக்கும் போட்டியும் நடந்தது. பின்னர் கைரேகை ஜோசியத்தை கமிஷனர் பார்த்தார். போலீஸ் குடும்ப குழந்தைகளின் நடனங்கள் நடந்தன. கலை நிகழ்ச்சியும் நடந்தது. பின்னர் விழாவில் போலீஸ் கமிஷனர் விஸ்வநாதன் பேசுகையில், சென்னை நகரில் ஒரு கிராமத்தை கொண்டு வந்துவிட்டனர். போலீசார் சொந்த ஊருக்கு சென்று பொங்கல் கொண்டாட முடியாத நிலையில் ஊரை இங்கு கொண்டு வந்துவிட்டனர். போலீஸ் நினைத்தால் செய்ய முடியாத விசயமே இல்லை. சிறு வயதில் சாப்பிட்ட ஜவ்வு மிட்டாய் தற்போது சாப்பிட்டேன். 7 வயதில் நடந்த சம்பவங்களை நினைவுப்படுத்தின. போலீஸ் குடும்ப பொங்கல் விழா முலம் அனைவரும் ஒரே குடும்ப என்ற உணர்வை ஏற்படுத்துகிறது. இவ்வாறு அவர் கூறினார்.Conclusion:

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.