ETV Bharat / state

திமுக வாரிசு அரசியல் குறித்து மீம்: அதிமுக தகவல் தொழில்நுட்ப பிரிவினர் மீது புகார்

author img

By

Published : Oct 12, 2020, 8:22 PM IST

சென்னை: திமுக இளைஞரணிச் செயலாளர் உதயநிதி குறித்து அவதூறு பரப்பும் வகையில் மீம் பதிவு செய்ததற்காக அதிமுக தகவல் தொழில்நுட்ப பிரிவினர் மீது சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

வழக்கறிஞர் சிவா
வழக்கறிஞர் சிவா

சமூக வலைதளங்களில் திமுக இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் குறித்து அவதூறு பரப்பும் வகையில் மீம் பதிவிட்டுவரும் அதிமுக தகவல் தொழில்நுட்ப பிரிவினர் மீது திமுக வழக்கறிஞர்கள் சார்பாக வழக்கறிஞர் சிவா சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.

meme
மீம்

சமூக வலைதளங்களில் திமுக இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலினின் புகைப்படங்களைப் பதிவிட்டு, அதில் அவரைத் திட்டியும் அவதூறான கருத்துக்களைப் பதிவிட்டும் அதிமுகவின் தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் ஏஸ்பைர் சுவாமிநாதன் செயல்பட்டுவருகின்றார்.

meme
மீம்

உதயநிதி ஸ்டாலின் மட்டுமில்லாமல் அவரது குழந்தைகளின் புகைப்படங்களைப் பதிவிட்டும் கருத்துகளைத் தெரிவித்துவருகின்றார். இதேபோல சபரீஷ் மணிகண்டன், ராஜ் சத்யம் ஆகியோரும் தொடர்ந்து உதயநிதி ஸ்டாலின் பெயருக்கு அவதூறு பரப்பும் வகையில் பதிவிட்டுவருகின்றனர்.

meme
மீம்

இதனால் மூவர் மீதும் சட்டப்படி நடவடிக்கை எடுக்கக்கோரியும், அவர்களைக் கைதுசெய்ய கோரியும் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் கூடுதல் ஆணையர் தேன் மொழியை சந்தித்து புகார் அளித்துள்ளதாக வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.

meme
மீம்

இதையும் படிங்க:ஸ்டாலினுடனான கூட்டத்தில் தரையில் அமர்ந்த ஊராட்சி மன்றத் தலைவர் - வைரலாகும் புகைப்படம்!

சமூக வலைதளங்களில் திமுக இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் குறித்து அவதூறு பரப்பும் வகையில் மீம் பதிவிட்டுவரும் அதிமுக தகவல் தொழில்நுட்ப பிரிவினர் மீது திமுக வழக்கறிஞர்கள் சார்பாக வழக்கறிஞர் சிவா சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.

meme
மீம்

சமூக வலைதளங்களில் திமுக இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலினின் புகைப்படங்களைப் பதிவிட்டு, அதில் அவரைத் திட்டியும் அவதூறான கருத்துக்களைப் பதிவிட்டும் அதிமுகவின் தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் ஏஸ்பைர் சுவாமிநாதன் செயல்பட்டுவருகின்றார்.

meme
மீம்

உதயநிதி ஸ்டாலின் மட்டுமில்லாமல் அவரது குழந்தைகளின் புகைப்படங்களைப் பதிவிட்டும் கருத்துகளைத் தெரிவித்துவருகின்றார். இதேபோல சபரீஷ் மணிகண்டன், ராஜ் சத்யம் ஆகியோரும் தொடர்ந்து உதயநிதி ஸ்டாலின் பெயருக்கு அவதூறு பரப்பும் வகையில் பதிவிட்டுவருகின்றனர்.

meme
மீம்

இதனால் மூவர் மீதும் சட்டப்படி நடவடிக்கை எடுக்கக்கோரியும், அவர்களைக் கைதுசெய்ய கோரியும் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் கூடுதல் ஆணையர் தேன் மொழியை சந்தித்து புகார் அளித்துள்ளதாக வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.

meme
மீம்

இதையும் படிங்க:ஸ்டாலினுடனான கூட்டத்தில் தரையில் அமர்ந்த ஊராட்சி மன்றத் தலைவர் - வைரலாகும் புகைப்படம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.