ETV Bharat / state

கலப்பட டீசல் விற்றால், குண்டர் சட்டத்தில் நடவடிக்கை! - chennai district news

கலப்பட டீசல் விற்பனை செய்பவர்கள் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் அடைக்க கடுமையான நடவடிக்கை எடுக்க தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது.

-blended-diesel
-blended-diesel
author img

By

Published : Aug 17, 2021, 3:50 PM IST

சென்னை : கோயம்புத்தூர் சுற்றுவட்டாரப் பகுதிகளான சேலம், சங்ககிரி, நாமக்கல், திருசெங்கோடு, பொள்ளாச்சி ஆகிய பகுதிகளில் கலப்பட டீசல் விற்பனை செய்யப்படுவதாக புகார்கள் எழுந்துள்ளன.

இந்தப் புகாரின் அடிப்படையில் குடிமைப் பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத் துறை காவல்துறை கூடுதல் இயக்குநர் ஆபாஸ்குமார் உத்தரவுப்படி, காவல் கண்காணிப்பாளர்கள் ஸ்டாலின், பாஸ்கர் அவர்களின் நேரடி மேற்பார்வையில் காவல் துணைக் கண்காணிப்பாளர்கள், ஆய்வாளர்கள் தலைமையில் பல குழுக்களாகப் பிரிந்து கலப்பட டீசல் வாகன சோதனை தீவிரமாக ஈடுபட்டனர்.

கடந்த இரண்டு மாதங்களில் மட்டும் கலப்பட டீசல் சம்பந்தமாக மொத்தம் ஏழு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அதில் 26 ஆயிரத்து 400 லிட்டர் கலப்பட டீசல் பறிமுதல் செய்யப்பட்டு அந்த டீசல் ஏற்றி வந்த ஐந்து டேங்கர் லாரிகள், மூன்று டாடா ஏசி வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. மேலும் கடத்தலில் ஈடுபட்ட 10 நபர்கள் கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலுக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.

கலப்பட டீசல் பறிமுதல்

அதைத்தொடர்ந்து குற்றச் செயலில் ஈடுபடும் நபர்கள் மீது கள்ளச்சந்தை தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் தடுப்பு காவலில் வைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதில் கடந்த ஆகஸ்ட் 13ஆம் தேதி சேலம் மாவட்டம் சங்ககிரி குப்பனூர் பிரிவு சாலையில் வாகன தணிக்கையின் போது அதிகாலை சுமார் 03 மணியளவில் கோவையிலிருந்து சேலம் நோக்கி வந்த டேங்கர் லாரியில் சுமார் 4 ஆயிரம் லிட்டர் அளவுள்ள கலப்பட டீசல் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

ஓட்டுநர் மதியழகன் (47), கிளீனர் செல்வம் (26), உரிமையாளர் இன்பராஜ் திருப்பூர் ஆகியோர்கள் கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலுக்கு அனுப்பிவைக்கப்பட்டனர். அதேபோல் கே.ஜி.சாவடி எட்டிமடை கே.பி.எஸ் குடோன் அருகில் கடந்த 12ஆம் தேதி வாகனத் தணிக்கையில் நான்கு ஆயிரம் லிட்டர் ஏற்றி வந்த டாடா ஏசி வாகனங்களை ஓட்டி வந்த ஓட்டுநர்கள் சபாபதி, செல்வ கருப்பையா ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

மேலும் சேலம் கேது நாயக்கபன்பட்டியில் கடந்த மே 10ஆம் தேதி வாகனத் தணிக்கையில் 1,350 லிட்டர் ஏற்றி வந்த லாரியில் ஸ்டீல் ஃபேரல் (Steel barrel) பறிமுதல் செய்யப்பட்டு வெங்கடேசன் கைது செய்யப்பட்டுள்ளார்.

அதேபோல் சேலம் சங்ககிரி முதல் எடப்பாடி ரோடு வாரி பேக்கரி முன்பு ஆகஸ்ட் 5ஆம் தேதி வாகனத் தணிக்கையில் 17 ஆயிரத்து 50 லிட்டர் ஏற்றி வந்த டாடா ஏசி வாகன ஓட்டுநர்கள், கலப்பட டீசல் உரிமையாளர்களான ஆரோக்கியராஜ், கவுதம், சங்கர், பழனிசாமி ஆகியோர்கள் கைது செய்யப்பட்டனர்.

குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது

நாமக்கல் தொட்டிப்பட்டியில் கடந்த ஜுன் 25ஆம் தேதி 7 ஆயிரம் லிட்டர் கலப்பட டீசலை ஏற்றி வந்த லாரி ஓட்டுநர், உரிமையாளர் ஆனந்தராஜ், தமிழ்ராஜ் ஆகியோர்கள் கைது செய்யப்பட்டனர். அதேபோல் நாமக்கல் முத்தாலப்பட்டி பைபாஸ் ரோட்டில் வாகனத் தணிக்கையில் கடந்த ஆகஸ்ட் 1ஆம் தேதி ஆயிரம் லிட்டர் கலப்பட டீசல் ஏற்றி வந்த லாரி ஓட்டுநர் ஈஸ்வரன் கைது செய்யப்பட்டார் .

சேலம் தேசிய நெடுஞ்சாலை பச்சபாளி ரோட்டில் கடந்த ஆகஸ்ட் 11ஆம் தேதி 350 லிட்டர் கலப்பட டீசல் டேங்கரில் வைத்து அரசு அனுமதி இல்லாமல் கள்ளத்தனமாக அங்கு செல்லும் வாகனங்களுக்குக் குறைந்த விலையில் விற்பனை செய்ய வந்த டேங்கர் உரிமையாளர் முருகன் கைது செய்யப்பட்டுள்ளார்.

தொடர்ந்து, கலப்பட டீசல் விற்பனை செய்பவர்கள் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க கடுமையான நடவடிக்கை எடுக்க தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது.

இதையும் படிங்க : கருணாநிதி செய்த தவறை ஸ்டாலினும் செய்வார் - அமைச்சர் சேகர்பாபு

சென்னை : கோயம்புத்தூர் சுற்றுவட்டாரப் பகுதிகளான சேலம், சங்ககிரி, நாமக்கல், திருசெங்கோடு, பொள்ளாச்சி ஆகிய பகுதிகளில் கலப்பட டீசல் விற்பனை செய்யப்படுவதாக புகார்கள் எழுந்துள்ளன.

இந்தப் புகாரின் அடிப்படையில் குடிமைப் பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத் துறை காவல்துறை கூடுதல் இயக்குநர் ஆபாஸ்குமார் உத்தரவுப்படி, காவல் கண்காணிப்பாளர்கள் ஸ்டாலின், பாஸ்கர் அவர்களின் நேரடி மேற்பார்வையில் காவல் துணைக் கண்காணிப்பாளர்கள், ஆய்வாளர்கள் தலைமையில் பல குழுக்களாகப் பிரிந்து கலப்பட டீசல் வாகன சோதனை தீவிரமாக ஈடுபட்டனர்.

கடந்த இரண்டு மாதங்களில் மட்டும் கலப்பட டீசல் சம்பந்தமாக மொத்தம் ஏழு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அதில் 26 ஆயிரத்து 400 லிட்டர் கலப்பட டீசல் பறிமுதல் செய்யப்பட்டு அந்த டீசல் ஏற்றி வந்த ஐந்து டேங்கர் லாரிகள், மூன்று டாடா ஏசி வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. மேலும் கடத்தலில் ஈடுபட்ட 10 நபர்கள் கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலுக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.

கலப்பட டீசல் பறிமுதல்

அதைத்தொடர்ந்து குற்றச் செயலில் ஈடுபடும் நபர்கள் மீது கள்ளச்சந்தை தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் தடுப்பு காவலில் வைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதில் கடந்த ஆகஸ்ட் 13ஆம் தேதி சேலம் மாவட்டம் சங்ககிரி குப்பனூர் பிரிவு சாலையில் வாகன தணிக்கையின் போது அதிகாலை சுமார் 03 மணியளவில் கோவையிலிருந்து சேலம் நோக்கி வந்த டேங்கர் லாரியில் சுமார் 4 ஆயிரம் லிட்டர் அளவுள்ள கலப்பட டீசல் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

ஓட்டுநர் மதியழகன் (47), கிளீனர் செல்வம் (26), உரிமையாளர் இன்பராஜ் திருப்பூர் ஆகியோர்கள் கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலுக்கு அனுப்பிவைக்கப்பட்டனர். அதேபோல் கே.ஜி.சாவடி எட்டிமடை கே.பி.எஸ் குடோன் அருகில் கடந்த 12ஆம் தேதி வாகனத் தணிக்கையில் நான்கு ஆயிரம் லிட்டர் ஏற்றி வந்த டாடா ஏசி வாகனங்களை ஓட்டி வந்த ஓட்டுநர்கள் சபாபதி, செல்வ கருப்பையா ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

மேலும் சேலம் கேது நாயக்கபன்பட்டியில் கடந்த மே 10ஆம் தேதி வாகனத் தணிக்கையில் 1,350 லிட்டர் ஏற்றி வந்த லாரியில் ஸ்டீல் ஃபேரல் (Steel barrel) பறிமுதல் செய்யப்பட்டு வெங்கடேசன் கைது செய்யப்பட்டுள்ளார்.

அதேபோல் சேலம் சங்ககிரி முதல் எடப்பாடி ரோடு வாரி பேக்கரி முன்பு ஆகஸ்ட் 5ஆம் தேதி வாகனத் தணிக்கையில் 17 ஆயிரத்து 50 லிட்டர் ஏற்றி வந்த டாடா ஏசி வாகன ஓட்டுநர்கள், கலப்பட டீசல் உரிமையாளர்களான ஆரோக்கியராஜ், கவுதம், சங்கர், பழனிசாமி ஆகியோர்கள் கைது செய்யப்பட்டனர்.

குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது

நாமக்கல் தொட்டிப்பட்டியில் கடந்த ஜுன் 25ஆம் தேதி 7 ஆயிரம் லிட்டர் கலப்பட டீசலை ஏற்றி வந்த லாரி ஓட்டுநர், உரிமையாளர் ஆனந்தராஜ், தமிழ்ராஜ் ஆகியோர்கள் கைது செய்யப்பட்டனர். அதேபோல் நாமக்கல் முத்தாலப்பட்டி பைபாஸ் ரோட்டில் வாகனத் தணிக்கையில் கடந்த ஆகஸ்ட் 1ஆம் தேதி ஆயிரம் லிட்டர் கலப்பட டீசல் ஏற்றி வந்த லாரி ஓட்டுநர் ஈஸ்வரன் கைது செய்யப்பட்டார் .

சேலம் தேசிய நெடுஞ்சாலை பச்சபாளி ரோட்டில் கடந்த ஆகஸ்ட் 11ஆம் தேதி 350 லிட்டர் கலப்பட டீசல் டேங்கரில் வைத்து அரசு அனுமதி இல்லாமல் கள்ளத்தனமாக அங்கு செல்லும் வாகனங்களுக்குக் குறைந்த விலையில் விற்பனை செய்ய வந்த டேங்கர் உரிமையாளர் முருகன் கைது செய்யப்பட்டுள்ளார்.

தொடர்ந்து, கலப்பட டீசல் விற்பனை செய்பவர்கள் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க கடுமையான நடவடிக்கை எடுக்க தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது.

இதையும் படிங்க : கருணாநிதி செய்த தவறை ஸ்டாலினும் செய்வார் - அமைச்சர் சேகர்பாபு

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.