ETV Bharat / state

போதையில் இளைஞர்கள் தகராறு: கைது செய்த காவல் துறை!

சென்னை: வில்லிவாக்கம் அருகே மது அருந்திய போதையில் தகராறு செய்த இரண்டு இளைஞர்களை காவல் துறையினர் கைது செய்தனர்.

author img

By

Published : May 19, 2020, 2:51 PM IST

போதையில் இளைஞர்கள் தகராறு: கைது செய்த காவல் துறை
போதையில் இளைஞர்கள் தகராறு: கைது செய்த காவல் துறை

சென்னை வில்லிவாக்கம் அன்னை சத்யா நகரைச் சேர்ந்தவர் யுவராஜ். நேற்று இவருக்கு பிறந்தநாள் என்பதால் அவரது நண்பரான ஜெகதீஷை வீட்டிற்கு அழைத்துள்ளார்.

வீட்டற்கு வந்த ஜெகதீஷும், யுவராஜும் அவரது வீட்டின் மொட்டை மாடியில் அமர்ந்து மது அருந்தியுள்ளனர். பின்னர், போதை தலைக்கேறவே அதிக சத்தம் போட்டுள்ளனர்.

இதனால், எரிச்சலடைந்த பக்கத்து வீட்டினர், குடித்துவிட்டு ஏன் இப்படி சத்தம் போடுகிறீர்கள் என்று கேட்டுள்ளனர். இதனால், ஆத்திரமடைந்த இருவரும் பக்கத்து வீட்டுக்காரர்களை தகாத வார்த்தைகளால் திட்டியுள்ளனர்.

காவல் துறையினர் கைது செய்த இளைஞர்கள்

பின்னர், அருகில் வசிப்பவர்கள் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தனர். அப்போது உதவி ஆய்வாளர் செல்வமணி தலைமையில் ரோந்து பணியில் இருந்த வில்லிவாக்கம் காவல் துறையினர், சம்பவ இடத்திற்குச் சென்றனர்.

அங்கு போதையில் இருந்த இளைஞர்களை கைது செய்த காவல் துறையினர், அவர்களை வில்லிவக்கம் காவல் நிலையததிற்கு அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

இதையும் படிங்க: மது போதையில் ரோட்டில் உருண்ட அரசு ஊழியர்!

சென்னை வில்லிவாக்கம் அன்னை சத்யா நகரைச் சேர்ந்தவர் யுவராஜ். நேற்று இவருக்கு பிறந்தநாள் என்பதால் அவரது நண்பரான ஜெகதீஷை வீட்டிற்கு அழைத்துள்ளார்.

வீட்டற்கு வந்த ஜெகதீஷும், யுவராஜும் அவரது வீட்டின் மொட்டை மாடியில் அமர்ந்து மது அருந்தியுள்ளனர். பின்னர், போதை தலைக்கேறவே அதிக சத்தம் போட்டுள்ளனர்.

இதனால், எரிச்சலடைந்த பக்கத்து வீட்டினர், குடித்துவிட்டு ஏன் இப்படி சத்தம் போடுகிறீர்கள் என்று கேட்டுள்ளனர். இதனால், ஆத்திரமடைந்த இருவரும் பக்கத்து வீட்டுக்காரர்களை தகாத வார்த்தைகளால் திட்டியுள்ளனர்.

காவல் துறையினர் கைது செய்த இளைஞர்கள்

பின்னர், அருகில் வசிப்பவர்கள் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தனர். அப்போது உதவி ஆய்வாளர் செல்வமணி தலைமையில் ரோந்து பணியில் இருந்த வில்லிவாக்கம் காவல் துறையினர், சம்பவ இடத்திற்குச் சென்றனர்.

அங்கு போதையில் இருந்த இளைஞர்களை கைது செய்த காவல் துறையினர், அவர்களை வில்லிவக்கம் காவல் நிலையததிற்கு அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

இதையும் படிங்க: மது போதையில் ரோட்டில் உருண்ட அரசு ஊழியர்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.