ETV Bharat / state

சென்னை மின்சார ரயில்களில் கூடுதல் பயணிகளை அனுமதிக்க திட்டம்!

சென்னை: புறநகர் மின்சார ரயில்களில் கூடுதல் பணிகளை அனுமதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக, தென்னக ரயில்வே நிர்வாகம் தகவல் வெளியிட்டுள்ளது.

author img

By

Published : Nov 5, 2020, 5:42 PM IST

Plan to allow extra passengers on Chennai electric trains
Plan to allow extra passengers on Chennai electric trains

கரோனா பாதிப்பு காரணமாக, பொது போக்குவரத்து முற்றிலுமாக முடக்கி வைக்கப்பட்டது. இந்த நிலையில், அரசு பணியாளர்கள் மற்றும் அத்தியாவசியப் பணியாளர்களுக்காக மட்டும் சிறப்பு புறநகர் ரயில்கள் இயக்கப்பட்டன. பின்னர், இதில் வங்கி ஊழியர்களும் பயணிக்க அனுமதிக்கப்பட்டது.

இந்த நிலையில், துப்புரவு பணியாளர்கள், தனியார் பாதுகாப்பு ஊழியர்கள் உள்ளிட்ட மேலும் சில தரப்பினருக்கு கூடுதலாக அனுமதி வழங்க தென்னக ரயில்வே முடிவு செய்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி,

  • அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பணியாற்றும் சுகாதார மற்றும் துப்புரவு பணியாளர்கள்
  • அரசு மற்றும் தனியார் துறைகளில் அத்தியாவசிய பொருட்கள் மற்றும் சேவை வழங்குவதில் ஈடுபட்டுள்ளவர்கள்
  • அனைத்து கல்வி நிலையங்களில் பணியாற்றும் ஊழியர்கள்
  • தனியார் பாதுகாப்பு நிறுவனங்களில் பணியாற்றுபவர்கள்
  • பொதுமக்கள் மற்றும் சரக்கு போக்குவரத்தில் தொடர்புடைய போக்குவரத்து நிறுவன ஊழியர்கள்
  • குழந்தைகள் பராமரிப்பு, முதியோர் பராமரிப்பு
  • கல்வி, சுகாதாரம் உள்ளிட்ட துறைகளில் பணியாற்றும் சமூக சேவை நிறுவன ஊழியர்கள்
  • அச்சு மற்றும் மின்னணு ஊடக ஊழியர்கள்
  • பார் கவுன்சிலில் உறுப்பினர்களாக உள்ள வழக்கறிஞர்கள்

மேற்கண்டவர்களுக்கு சென்னை புறநகர் மின்சார ரயில்களில் பயணிக்க, தென்னக ரயில்வே நிர்வாகம் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. உள்ளூர் மின்சார ரயில்களில் பயணிப்பதன் மூலம் கரோனா பாதிப்பு விரைவில் பரவக்கூடும் என பல்வேறு ஆய்வாளர்களும், மருத்துவர்களும் எச்சரித்து வருகின்றனர்.

இதற்கிடையில் சென்னையில் ஒட்டுமொத்தமாக பொதுமக்களுக்கு புறநகர் சேவையைப் பயன்படுத்த அனுமதி வழங்கப்பட்டால் மக்கள் கூட்டம் அதிகளவில் இருக்கும் என்பதாலும், கூட்டத்தை கட்டுப்படுத்தி கரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வதில் சிரமம் ஏற்படும் என்பதாலும், இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

கரோனா பாதிப்பு காரணமாக, கடந்த மார்ச் 23 ஆம் தேதி முதல் புறநகர் ரயில் சேவை நிறுத்தி வைக்கப்பட்டது. கடந்த நவம்பர் 1 ஆம் தேதி முதல் தமிழ்நாட்டில் புறநகர் ரயில்களில் பொது மக்கள் பயணிக்க தமிழ்நாடு அரசு அனுமதியளித்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: சரக்கு ரயில் சேவை: புதிய சாதனை படைத்த தெற்கு ரயில்வே

கரோனா பாதிப்பு காரணமாக, பொது போக்குவரத்து முற்றிலுமாக முடக்கி வைக்கப்பட்டது. இந்த நிலையில், அரசு பணியாளர்கள் மற்றும் அத்தியாவசியப் பணியாளர்களுக்காக மட்டும் சிறப்பு புறநகர் ரயில்கள் இயக்கப்பட்டன. பின்னர், இதில் வங்கி ஊழியர்களும் பயணிக்க அனுமதிக்கப்பட்டது.

இந்த நிலையில், துப்புரவு பணியாளர்கள், தனியார் பாதுகாப்பு ஊழியர்கள் உள்ளிட்ட மேலும் சில தரப்பினருக்கு கூடுதலாக அனுமதி வழங்க தென்னக ரயில்வே முடிவு செய்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி,

  • அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பணியாற்றும் சுகாதார மற்றும் துப்புரவு பணியாளர்கள்
  • அரசு மற்றும் தனியார் துறைகளில் அத்தியாவசிய பொருட்கள் மற்றும் சேவை வழங்குவதில் ஈடுபட்டுள்ளவர்கள்
  • அனைத்து கல்வி நிலையங்களில் பணியாற்றும் ஊழியர்கள்
  • தனியார் பாதுகாப்பு நிறுவனங்களில் பணியாற்றுபவர்கள்
  • பொதுமக்கள் மற்றும் சரக்கு போக்குவரத்தில் தொடர்புடைய போக்குவரத்து நிறுவன ஊழியர்கள்
  • குழந்தைகள் பராமரிப்பு, முதியோர் பராமரிப்பு
  • கல்வி, சுகாதாரம் உள்ளிட்ட துறைகளில் பணியாற்றும் சமூக சேவை நிறுவன ஊழியர்கள்
  • அச்சு மற்றும் மின்னணு ஊடக ஊழியர்கள்
  • பார் கவுன்சிலில் உறுப்பினர்களாக உள்ள வழக்கறிஞர்கள்

மேற்கண்டவர்களுக்கு சென்னை புறநகர் மின்சார ரயில்களில் பயணிக்க, தென்னக ரயில்வே நிர்வாகம் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. உள்ளூர் மின்சார ரயில்களில் பயணிப்பதன் மூலம் கரோனா பாதிப்பு விரைவில் பரவக்கூடும் என பல்வேறு ஆய்வாளர்களும், மருத்துவர்களும் எச்சரித்து வருகின்றனர்.

இதற்கிடையில் சென்னையில் ஒட்டுமொத்தமாக பொதுமக்களுக்கு புறநகர் சேவையைப் பயன்படுத்த அனுமதி வழங்கப்பட்டால் மக்கள் கூட்டம் அதிகளவில் இருக்கும் என்பதாலும், கூட்டத்தை கட்டுப்படுத்தி கரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வதில் சிரமம் ஏற்படும் என்பதாலும், இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

கரோனா பாதிப்பு காரணமாக, கடந்த மார்ச் 23 ஆம் தேதி முதல் புறநகர் ரயில் சேவை நிறுத்தி வைக்கப்பட்டது. கடந்த நவம்பர் 1 ஆம் தேதி முதல் தமிழ்நாட்டில் புறநகர் ரயில்களில் பொது மக்கள் பயணிக்க தமிழ்நாடு அரசு அனுமதியளித்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: சரக்கு ரயில் சேவை: புதிய சாதனை படைத்த தெற்கு ரயில்வே

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.