ETV Bharat / state

பேரறிவாளனின் பரோல் மனுவை நிராகரித்தது தமிழ்நாடு அரசு!

author img

By

Published : Sep 4, 2020, 12:39 PM IST

Updated : Sep 4, 2020, 2:00 PM IST

perarivalan-parole-petition-rejected-mhc
perarivalan-parole-petition-rejected-mhc

12:36 September 04

சென்னை: பரோல் கேட்ட பேரறிவாளனின் மனுவை சிறைத்துறை மட்டும் நிராகரித்த நிலையில், தற்போது மாநில அரசும் நிராகரித்து விட்டதாக தமிழ்நாடு அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

முன்னாள் பிரதமர் ராஜிவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் கைதியாக உள்ள பேரறிவாளன், கடந்த 29 ஆண்டுகளாக சென்னை புழல் சிறையில் தண்டனை அனுபவித்து வருகிறார். இந்நிலையில் பேரறிவாளனுக்கு 90 நாட்கள் பரோல் வழங்கக்கோரி அவரது தாயார் அற்புதம்மாள் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இவ்வழக்கு நீதிபதி கிருபாகரன், வேலுமணி ஆகியோர் அடங்கிய அமர்வில் ஏற்கனவே விசாரணைக்கு வந்தபோது, சிறைத்துறை தரப்பில், கடந்த 2017, 2019 ஆம் ஆண்டு பேரறிவாளனுக்கு விடுப்பு வழங்கப்பட்டுள்ளதால், அடுத்த 2 ஆண்டுகளுக்கு மீண்டும் விடுப்பு வழங்க முடியாது. அதனால் அற்புதம்மாள் மனுவை கடந்த ஜூலை 29 ஆம் தேதி சிறைத்துறை ஐஜி நிராகரித்து விட்டதாக விளக்கமளிக்கப்பட்டது.

இதற்கு அதிருப்தி தெரிவித்த நீதிபதிகள், அற்புதம்மாள் மனு குறித்து முடிவு எடுக்க தமிழ்நாடு அரசுக்கு முழு அதிகாரம் வழங்கப்பட்டுள்ள நிலையில், அதன்படி இந்த மனு மீது உரிய முடிவு எடுக்காமல் அதனை சிறைத்துறைக்கு அனுப்பி வைத்தது ஏன்? என நீதிபதிகள் கேள்வி எழுப்பியிருந்தனர்.

இந்நிலையில் இந்த வழக்கு இன்று(செப்.4) மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, பேரறிவாளனின் பரோல் மனுவை தமிழ்நாடு அரசும் நிராகரித்து விட்டதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து மனு நிராகரிக்கப்பட்டது தொடர்பான உத்தரவை மனுதாரர் தரப்புக்கு வழங்குமாறு கூறிய நீதிபதிகள், இவ்வழக்கில் வரும் செப்டம்பர் 8 ஆம் தேதி உத்தரவு பிறப்பிக்கப்படும் என்றும் தெரிவித்தனர்.  

இதையும் படிங்க:சர்வதேச வினாடி வினா போட்டியில் 2ஆம் இடம் பிடித்த 7 வயது சிறுமி..!

12:36 September 04

சென்னை: பரோல் கேட்ட பேரறிவாளனின் மனுவை சிறைத்துறை மட்டும் நிராகரித்த நிலையில், தற்போது மாநில அரசும் நிராகரித்து விட்டதாக தமிழ்நாடு அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

முன்னாள் பிரதமர் ராஜிவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் கைதியாக உள்ள பேரறிவாளன், கடந்த 29 ஆண்டுகளாக சென்னை புழல் சிறையில் தண்டனை அனுபவித்து வருகிறார். இந்நிலையில் பேரறிவாளனுக்கு 90 நாட்கள் பரோல் வழங்கக்கோரி அவரது தாயார் அற்புதம்மாள் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இவ்வழக்கு நீதிபதி கிருபாகரன், வேலுமணி ஆகியோர் அடங்கிய அமர்வில் ஏற்கனவே விசாரணைக்கு வந்தபோது, சிறைத்துறை தரப்பில், கடந்த 2017, 2019 ஆம் ஆண்டு பேரறிவாளனுக்கு விடுப்பு வழங்கப்பட்டுள்ளதால், அடுத்த 2 ஆண்டுகளுக்கு மீண்டும் விடுப்பு வழங்க முடியாது. அதனால் அற்புதம்மாள் மனுவை கடந்த ஜூலை 29 ஆம் தேதி சிறைத்துறை ஐஜி நிராகரித்து விட்டதாக விளக்கமளிக்கப்பட்டது.

இதற்கு அதிருப்தி தெரிவித்த நீதிபதிகள், அற்புதம்மாள் மனு குறித்து முடிவு எடுக்க தமிழ்நாடு அரசுக்கு முழு அதிகாரம் வழங்கப்பட்டுள்ள நிலையில், அதன்படி இந்த மனு மீது உரிய முடிவு எடுக்காமல் அதனை சிறைத்துறைக்கு அனுப்பி வைத்தது ஏன்? என நீதிபதிகள் கேள்வி எழுப்பியிருந்தனர்.

இந்நிலையில் இந்த வழக்கு இன்று(செப்.4) மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, பேரறிவாளனின் பரோல் மனுவை தமிழ்நாடு அரசும் நிராகரித்து விட்டதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து மனு நிராகரிக்கப்பட்டது தொடர்பான உத்தரவை மனுதாரர் தரப்புக்கு வழங்குமாறு கூறிய நீதிபதிகள், இவ்வழக்கில் வரும் செப்டம்பர் 8 ஆம் தேதி உத்தரவு பிறப்பிக்கப்படும் என்றும் தெரிவித்தனர்.  

இதையும் படிங்க:சர்வதேச வினாடி வினா போட்டியில் 2ஆம் இடம் பிடித்த 7 வயது சிறுமி..!

Last Updated : Sep 4, 2020, 2:00 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.