ETV Bharat / state

மக்கள் நல்வாழ்வுத்துறை கூடுதல் நிதி ஒதுக்கீட்டு: மருத்துவர்கள் சங்கம் வரவேற்பு

author img

By

Published : Aug 14, 2021, 1:56 AM IST

தமிழ்நாடு அரசின் நிதிநிலை அறிக்கையில், கடந்த ஆண்டை விட மக்கள் நல்வாழ்வுத்துறைக்கு கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்துள்ளதற்கு சமூக சமத்துவத்திற்கான மருத்துவர்கள் சங்கம் வரவேற்பு தெரிவித்துள்ளது.

மக்கள் நல்வாழ்வுத்துறை கூடுதல் நிதி ஒதுக்கீட்டுக்கு வரவேற்பு
மக்கள் நல்வாழ்வுத்துறை கூடுதல் நிதி ஒதுக்கீட்டுக்கு வரவேற்பு

சென்னை: புதிதாகப் பொறுப்பேற்றுள்ள மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு இன்று(ஆக.13) தனது முதல் நிதிநிலை அறிக்கையைத் தாக்கல் செய்தது. தமிழ்நாடு சட்டப்பேரவை வரலாற்றில் முதன்முறையாக காகிதம் இல்லாத பட்ஜெட்டாக இந்த பட்ஜெட்டை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்தார்.

இதில் பல்வேறு துறைகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள நிலையில், இந்த முறை மக்கள் நல்வாழ்வுத்துறைக்கு கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டை விட கூடுதல் நிதி

இது குறித்து சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்க பொதுச் செயலாளர் ரவீந்திரநாத் கருத்து தெரிவிக்கையில், “இன்று தாக்கல் செய்யப்பட்டுள்ள 2021-2022ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையில், மக்கள் நல்வாழ்வுத்துறைக்கு கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பது வரவேற்புக்குரியது. 2020-2021 ஆம் ஆண்டிற்கு மக்கள் நல்வாழ்வுத்துறைக்கு ரூ.15 ஆயிரத்து 773 கோடி ஒதுக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் தற்போது 2021-2022 ஆம் ஆண்டிற்கு ரூ18 ஆயிரத்து 930 கோடியே 20 லட்சம் ஒதுக்கப்பட்டுள்ளது வரவேற்புக்குரியது. கரோனா பரவலை கருத்தில் கொண்டு, இந்த நிதி ஒதுக்கீட்டை மேலும் அதிகரிக்க முயற்சிக்க வேண்டும். மகப்பேறு விடுப்புக் காலத்தை அதிகரித்திருப்பது பாராட்டத்தக்கது.

பேறுகால சிசு மரண விகிதத்தை குறைத்தல், குழந்தைகள் வளர்ச்சிக் குறைபாட்டை களைதல், விபத்து தடுப்பு, பாதாள சாக்கடைத் திட்டம், குடிநீர் வழங்கல் போன்றவற்றிற்காக வெளியிடப்பட்டுள்ள அறிவிப்புகள் வரவேற்கத்தக்கன.

தமிழில் இணையதளங்கள்?

மக்களைத் தேடி மருத்துவம் திட்டம் வரவேற்கத்தக்கது. மக்கள் மொழியான தமிழில் அரசு செயல்பட வேண்டும், கணினி மயம் வேண்டும், வீண் செலவு கூடாது, உற்பத்தித் திறன் அதிகரிக்கப்பட வேண்டும் போன்ற நிதி அமைச்சரின் அறிவிப்புகள் வரவேற்புக்குரியன.

அவை அனைத்தும் மருத்துவத்துறையிலும் தீவிரமாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டும். மக்கள் நல்வாழ்வுத்துறை, மருத்துவக் கல்வி இயக்குனரகம், தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர் மருத்துவப் பல்கலைக்கழகம் உள்ளிட்ட அனைத்து துறைகளின் இணையதளங்களையும் தமிழிலும் அமைத்திட வேண்டும்.

அனைத்து நோயாளிகளின் மருத்துவக் குறிப்பேடுகள், பரிசோதனை முடிவுகள் அனைத்தையும் கணினி மயமாக்கிட வேண்டும். அது தரமான, விரைவான சிகிச்சை அளிக்கவும், ஆராய்ச்சிகளை மேற்கொள்ளவும் உதவும்.

நிரந்தர ஊழியர்கள் நியமனம்

‘தமிழ்நாடு சுகாதார சீரமைப்புத் திட்டம்’ மூலம், காலை நேரங்களில் அரசு மருத்துவமனைகளில் உள்ள அனைத்து வசதிகளும், மருத்துவ சேவைகளும் (புற நோயாளிகள் பிரிவு, அறுவை அரங்கம், இரத்தப் பரிசோதனை நிலையம், சி.டி.ஸ்கேன், சிறப்பு மருத்துவப் பிரிவு போன்ற அனைத்தும்), மாலை நேரங்களிலும் செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இதற்கென தனியாக மருத்துவர்களையும், ஊழியர்களையும் நியமித்திட வேண்டும். இதன் மூலம் காலையில் மருத்துவமனைக்கு வர இயலாத, வேலைகளுக்குச் செல்லும் தொழிலாளர்கள், மாலை நேரங்களில் அரசு மருத்துவமனைகளுக்கு வந்து பயன்பெற முடியும். பொதுமக்களுக்கும், காலதாமதமின்றி அரசு மருத்துவமனைகளில் சிகிச்சைகள் கிடைக்கும். பல உயிர் இழப்புகளை தடுத்திட முடியும்.

மருத்துவத்துறையில் ஒப்பந்தம், தற்காலிக அடிப்படையில் பணிபுரியும் மருத்துவர்கள், பல்மருத்துவர்கள், ஆயுஷ் மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவப் பணியாளர்களை பணி நிரந்தரம் செய்திட வேண்டும். மக்களைத் தேடி மருத்துவம் உள்ளிட்ட நல்ல திட்டங்களுக்கு, தனியாக நிரந்தர ஊழியர்களை நியமிக்க வேண்டும்.

நெக்ஸ்ட் தேர்வுக்கு எதிர்ப்பு

மருத்துவக் கருவிகள் வாங்க ரூ.741 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இவ்வளவு பெரிய தொகையில், அரசே பொதுத் துறை நிறுவனங்கள் மூலம் மருந்துகள், ஊசிகள், மருத்துவக் கருவிகள் போன்றவற்றை உற்பத்தி செய்ய முடியும். இதன் மூலம் தரமாகவும், தட்டுப்பாடின்றியும், குறைந்த செலவில் மருந்துகள், மருத்துவக் கருவிகளை அரசு பெற முடியும். இவைகளை அரசு மருத்துவமனைகளில் பயன்படுத்துவதன் மூலம், பெருமளவு நிதியைச் சேமிக்க முடியும்.

வேறு மாநிலங்களுக்கும், நாடுகளுக்கும் விற்பதன் மூலம் வருவாய் ஈட்டவும் முடியும். மருத்துவ ஆராய்ச்சிக்கென தனியாக நிதி ஒதுக்கீடு செய்திட வேண்டும். தமிழ்நாடு அரசே தனியாக ஒரு வைரஸ் ஆராய்ச்சி மையத்தை தொடங்கிட வேண்டும். அரசு மருத்துவர்களின் ஊதிய உயர்வு, பதவி உயர்வு கோரிக்கைகளை அரசு நிறைவேற்றிட வேண்டும்.

தமிழ்நாட்டிற்கெனத் தனித்துவமான மாநிலக் கல்விக் கொள்கையை வகுக்க, கல்வியாளர்கள், வல்லுநர்களைக் கொண்ட உயர் மட்டக் குழு நியமிப்பு அறிவிப்பு வரவேற்புக்குரியது. ஒன்றிய அரசு மருத்துவக் கல்வியில் திணிக்கும் “நெக்ஸ்ட் தேர்வை” கொண்டு வரக்கூடாது, அதனை ரத்து செய்ய வலியுறுத்தி, தமிழ்நாடு சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றிட வேண்டும்” என்றார்.

இதையும் படிங்க: தமிழ்நாடு பட்ஜெட் 2021: நீதி மேலாண்மை!

சென்னை: புதிதாகப் பொறுப்பேற்றுள்ள மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு இன்று(ஆக.13) தனது முதல் நிதிநிலை அறிக்கையைத் தாக்கல் செய்தது. தமிழ்நாடு சட்டப்பேரவை வரலாற்றில் முதன்முறையாக காகிதம் இல்லாத பட்ஜெட்டாக இந்த பட்ஜெட்டை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்தார்.

இதில் பல்வேறு துறைகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள நிலையில், இந்த முறை மக்கள் நல்வாழ்வுத்துறைக்கு கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டை விட கூடுதல் நிதி

இது குறித்து சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்க பொதுச் செயலாளர் ரவீந்திரநாத் கருத்து தெரிவிக்கையில், “இன்று தாக்கல் செய்யப்பட்டுள்ள 2021-2022ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையில், மக்கள் நல்வாழ்வுத்துறைக்கு கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பது வரவேற்புக்குரியது. 2020-2021 ஆம் ஆண்டிற்கு மக்கள் நல்வாழ்வுத்துறைக்கு ரூ.15 ஆயிரத்து 773 கோடி ஒதுக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் தற்போது 2021-2022 ஆம் ஆண்டிற்கு ரூ18 ஆயிரத்து 930 கோடியே 20 லட்சம் ஒதுக்கப்பட்டுள்ளது வரவேற்புக்குரியது. கரோனா பரவலை கருத்தில் கொண்டு, இந்த நிதி ஒதுக்கீட்டை மேலும் அதிகரிக்க முயற்சிக்க வேண்டும். மகப்பேறு விடுப்புக் காலத்தை அதிகரித்திருப்பது பாராட்டத்தக்கது.

பேறுகால சிசு மரண விகிதத்தை குறைத்தல், குழந்தைகள் வளர்ச்சிக் குறைபாட்டை களைதல், விபத்து தடுப்பு, பாதாள சாக்கடைத் திட்டம், குடிநீர் வழங்கல் போன்றவற்றிற்காக வெளியிடப்பட்டுள்ள அறிவிப்புகள் வரவேற்கத்தக்கன.

தமிழில் இணையதளங்கள்?

மக்களைத் தேடி மருத்துவம் திட்டம் வரவேற்கத்தக்கது. மக்கள் மொழியான தமிழில் அரசு செயல்பட வேண்டும், கணினி மயம் வேண்டும், வீண் செலவு கூடாது, உற்பத்தித் திறன் அதிகரிக்கப்பட வேண்டும் போன்ற நிதி அமைச்சரின் அறிவிப்புகள் வரவேற்புக்குரியன.

அவை அனைத்தும் மருத்துவத்துறையிலும் தீவிரமாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டும். மக்கள் நல்வாழ்வுத்துறை, மருத்துவக் கல்வி இயக்குனரகம், தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர் மருத்துவப் பல்கலைக்கழகம் உள்ளிட்ட அனைத்து துறைகளின் இணையதளங்களையும் தமிழிலும் அமைத்திட வேண்டும்.

அனைத்து நோயாளிகளின் மருத்துவக் குறிப்பேடுகள், பரிசோதனை முடிவுகள் அனைத்தையும் கணினி மயமாக்கிட வேண்டும். அது தரமான, விரைவான சிகிச்சை அளிக்கவும், ஆராய்ச்சிகளை மேற்கொள்ளவும் உதவும்.

நிரந்தர ஊழியர்கள் நியமனம்

‘தமிழ்நாடு சுகாதார சீரமைப்புத் திட்டம்’ மூலம், காலை நேரங்களில் அரசு மருத்துவமனைகளில் உள்ள அனைத்து வசதிகளும், மருத்துவ சேவைகளும் (புற நோயாளிகள் பிரிவு, அறுவை அரங்கம், இரத்தப் பரிசோதனை நிலையம், சி.டி.ஸ்கேன், சிறப்பு மருத்துவப் பிரிவு போன்ற அனைத்தும்), மாலை நேரங்களிலும் செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இதற்கென தனியாக மருத்துவர்களையும், ஊழியர்களையும் நியமித்திட வேண்டும். இதன் மூலம் காலையில் மருத்துவமனைக்கு வர இயலாத, வேலைகளுக்குச் செல்லும் தொழிலாளர்கள், மாலை நேரங்களில் அரசு மருத்துவமனைகளுக்கு வந்து பயன்பெற முடியும். பொதுமக்களுக்கும், காலதாமதமின்றி அரசு மருத்துவமனைகளில் சிகிச்சைகள் கிடைக்கும். பல உயிர் இழப்புகளை தடுத்திட முடியும்.

மருத்துவத்துறையில் ஒப்பந்தம், தற்காலிக அடிப்படையில் பணிபுரியும் மருத்துவர்கள், பல்மருத்துவர்கள், ஆயுஷ் மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவப் பணியாளர்களை பணி நிரந்தரம் செய்திட வேண்டும். மக்களைத் தேடி மருத்துவம் உள்ளிட்ட நல்ல திட்டங்களுக்கு, தனியாக நிரந்தர ஊழியர்களை நியமிக்க வேண்டும்.

நெக்ஸ்ட் தேர்வுக்கு எதிர்ப்பு

மருத்துவக் கருவிகள் வாங்க ரூ.741 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இவ்வளவு பெரிய தொகையில், அரசே பொதுத் துறை நிறுவனங்கள் மூலம் மருந்துகள், ஊசிகள், மருத்துவக் கருவிகள் போன்றவற்றை உற்பத்தி செய்ய முடியும். இதன் மூலம் தரமாகவும், தட்டுப்பாடின்றியும், குறைந்த செலவில் மருந்துகள், மருத்துவக் கருவிகளை அரசு பெற முடியும். இவைகளை அரசு மருத்துவமனைகளில் பயன்படுத்துவதன் மூலம், பெருமளவு நிதியைச் சேமிக்க முடியும்.

வேறு மாநிலங்களுக்கும், நாடுகளுக்கும் விற்பதன் மூலம் வருவாய் ஈட்டவும் முடியும். மருத்துவ ஆராய்ச்சிக்கென தனியாக நிதி ஒதுக்கீடு செய்திட வேண்டும். தமிழ்நாடு அரசே தனியாக ஒரு வைரஸ் ஆராய்ச்சி மையத்தை தொடங்கிட வேண்டும். அரசு மருத்துவர்களின் ஊதிய உயர்வு, பதவி உயர்வு கோரிக்கைகளை அரசு நிறைவேற்றிட வேண்டும்.

தமிழ்நாட்டிற்கெனத் தனித்துவமான மாநிலக் கல்விக் கொள்கையை வகுக்க, கல்வியாளர்கள், வல்லுநர்களைக் கொண்ட உயர் மட்டக் குழு நியமிப்பு அறிவிப்பு வரவேற்புக்குரியது. ஒன்றிய அரசு மருத்துவக் கல்வியில் திணிக்கும் “நெக்ஸ்ட் தேர்வை” கொண்டு வரக்கூடாது, அதனை ரத்து செய்ய வலியுறுத்தி, தமிழ்நாடு சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றிட வேண்டும்” என்றார்.

இதையும் படிங்க: தமிழ்நாடு பட்ஜெட் 2021: நீதி மேலாண்மை!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.