ETV Bharat / state

சிங்கப்பூருக்கு கடத்த முயன்ற சுறா துடுப்புகள் பறிமுதல்.. சென்னை விமான நிலையத்தில் சிக்கிய பலே நபர்!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 9, 2023, 6:58 AM IST

Updated : Nov 9, 2023, 12:00 PM IST

chennai airport: சென்னையில் இருந்து ரூ.12 லட்சம் மதிப்பிலான 24 கிலோ சுறா மீன்களின் துடுப்புகளை உரிய ஆவணங்கள் இன்றி சிங்கப்பூருக்கு கடத்த முயன்ற பயணியை சுங்கத்துறை அதிகாரிகள் கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

shark fin smuggling at chennai airport
சுறா மீன்களின் துடுப்புகளைக் கடத்த முயன்ற பயணி சென்னை விமான நிலையத்தில் கைது

சென்னை: சென்னையிலிருந்து சிங்கப்பூர் செல்லும் இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் நேற்று முன்தினம் (நவ 07) நள்ளிரவு சென்னை சர்வதேச விமான நிலையத்திலிருந்து புறப்படத் தயாரானது. அந்த விமானத்தில் பயணிக்க வந்த பயணிகளைப் பாதுகாப்பு சோதனை பகுதியில் மத்திய தொழில் பாதுகாப்புப் படையினர் பரிசோதித்து அனுப்பிக் கொண்டு இருந்தனர்.

அப்போது சென்னையைச் சேர்ந்த மகேந்திரன் (59) என்பவர் சுற்றுலாப் பயணிகள் விசாவில், சிங்கப்பூர் செல்வதற்காக வந்திருந்தார். அவர் மீது சுங்கத்துறை அதிகாரிகளுக்குச் சந்தேகம் ஏற்பட்டது. இதை அடுத்து அவரை நிறுத்தி விசாரித்தனர். அதோடு அவருடைய உடைமைகளைச் சோதனையிட்டனர்.

இந்த சோதனையில் அவரிடம் இருந்த பெரிய பார்சல்களில், சுறா மீன்களின் துடுப்புகள் (Shark Fin) மொத்தம் 24 கிலோ இருந்தது. அதன் சர்வதேச மதிப்பு சுமார் ரூ.12 லட்சம். ஆனால் அதை வெளிநாட்டிற்குக் கொண்டு செல்வதற்கான முறையான ஆவணங்கள் எதுவும் மகேந்திரனிடம் இல்லை.

இந்த சுறா மீன்களின் துடுப்புகள் மருத்துவ குணம் உடையவை. அதோடு வெளிநாடுகளில் உயர்ரக நட்சத்திர உணவகங்கள் பெரிய விருந்து நிகழ்ச்சிகளில் சுறா மீன் துடுப்பு சூப்புகள் மிகவும் பிரபலமானவை. மேலும் சுறா மீன்கள் துடுப்புகளைப் பயன்படுத்தி உயிர் காக்கும் மருந்துகளும் தயாரிப்பதாகக் கூறப்படுகிறது.

இத்தகைய காரணங்களால் சுறா மீன்கள் துடுப்புகளை வெளிநாட்டிற்குக் கொண்டு செல்ல வேண்டும் என்றால், கடல் வாழ் உயிரினங்கள் பராமரிப்பு மற்றும் வன உயிரினங்களின் பாதுகாப்புத் துறையிடம் உரிய அனுமதி பெற வேண்டும். அவ்வாறு இல்லாமல் இதை வெளிநாட்டுக்குக் கொண்டு செல்வது, சட்டப்படி தண்டனைக்குரிய குற்றமாகும்.

இதை அடுத்து மத்திய தொழிற் பாதுகாப்புப் படை அதிகாரிகள் அந்த பயணியின் சிங்கப்பூர் பயணத்தை ரத்து செய்தனர். அதோடு அவரிடம் இருந்த சுறா மீன்கள் துடுப்பு பார்சல்களை கைப்பற்றினர். மேலும் சுறா மீன்களின் துடுப்புகளைக் கடத்த முயற்சித்த பயணி மகேந்திரனையும் சென்னை விமான நிலைய சுங்க அதிகாரிகள் கைது செய்தனர்.

இதன் தொடர்ச்சியாக விமான நிலைய சுங்க அதிகாரிகள் மகேந்திரனிடம், இந்த சுறா மீன்களின் துடுப்புகளை யாரிடம் இருந்து வாங்கினார்? சிங்கப்பூரில் யாரிடம் கொடுப்பதற்காக எடுத்துச் சொல்கிறார்? என்று விசாரணை நடத்துகின்றனர். அதோடு சென்னை பெசன்ட் நகரில் உள்ள ஒன்றிய வன உயிரின பாதுகாப்பு குற்றப் பிரிவு போலீசாருக்கும் இது குறித்து தகவல் கொடுத்துள்ளனர்.

இதையும் படிங்க: சென்னையில் இருந்து தென்மாவட்டங்களுக்கு வந்தே பாரத் உட்பட கூடுதல் சிறப்பு ரயில்கள்: தெற்கு ரயில்வே ரயில்வே அறிவிப்பு

சென்னை: சென்னையிலிருந்து சிங்கப்பூர் செல்லும் இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் நேற்று முன்தினம் (நவ 07) நள்ளிரவு சென்னை சர்வதேச விமான நிலையத்திலிருந்து புறப்படத் தயாரானது. அந்த விமானத்தில் பயணிக்க வந்த பயணிகளைப் பாதுகாப்பு சோதனை பகுதியில் மத்திய தொழில் பாதுகாப்புப் படையினர் பரிசோதித்து அனுப்பிக் கொண்டு இருந்தனர்.

அப்போது சென்னையைச் சேர்ந்த மகேந்திரன் (59) என்பவர் சுற்றுலாப் பயணிகள் விசாவில், சிங்கப்பூர் செல்வதற்காக வந்திருந்தார். அவர் மீது சுங்கத்துறை அதிகாரிகளுக்குச் சந்தேகம் ஏற்பட்டது. இதை அடுத்து அவரை நிறுத்தி விசாரித்தனர். அதோடு அவருடைய உடைமைகளைச் சோதனையிட்டனர்.

இந்த சோதனையில் அவரிடம் இருந்த பெரிய பார்சல்களில், சுறா மீன்களின் துடுப்புகள் (Shark Fin) மொத்தம் 24 கிலோ இருந்தது. அதன் சர்வதேச மதிப்பு சுமார் ரூ.12 லட்சம். ஆனால் அதை வெளிநாட்டிற்குக் கொண்டு செல்வதற்கான முறையான ஆவணங்கள் எதுவும் மகேந்திரனிடம் இல்லை.

இந்த சுறா மீன்களின் துடுப்புகள் மருத்துவ குணம் உடையவை. அதோடு வெளிநாடுகளில் உயர்ரக நட்சத்திர உணவகங்கள் பெரிய விருந்து நிகழ்ச்சிகளில் சுறா மீன் துடுப்பு சூப்புகள் மிகவும் பிரபலமானவை. மேலும் சுறா மீன்கள் துடுப்புகளைப் பயன்படுத்தி உயிர் காக்கும் மருந்துகளும் தயாரிப்பதாகக் கூறப்படுகிறது.

இத்தகைய காரணங்களால் சுறா மீன்கள் துடுப்புகளை வெளிநாட்டிற்குக் கொண்டு செல்ல வேண்டும் என்றால், கடல் வாழ் உயிரினங்கள் பராமரிப்பு மற்றும் வன உயிரினங்களின் பாதுகாப்புத் துறையிடம் உரிய அனுமதி பெற வேண்டும். அவ்வாறு இல்லாமல் இதை வெளிநாட்டுக்குக் கொண்டு செல்வது, சட்டப்படி தண்டனைக்குரிய குற்றமாகும்.

இதை அடுத்து மத்திய தொழிற் பாதுகாப்புப் படை அதிகாரிகள் அந்த பயணியின் சிங்கப்பூர் பயணத்தை ரத்து செய்தனர். அதோடு அவரிடம் இருந்த சுறா மீன்கள் துடுப்பு பார்சல்களை கைப்பற்றினர். மேலும் சுறா மீன்களின் துடுப்புகளைக் கடத்த முயற்சித்த பயணி மகேந்திரனையும் சென்னை விமான நிலைய சுங்க அதிகாரிகள் கைது செய்தனர்.

இதன் தொடர்ச்சியாக விமான நிலைய சுங்க அதிகாரிகள் மகேந்திரனிடம், இந்த சுறா மீன்களின் துடுப்புகளை யாரிடம் இருந்து வாங்கினார்? சிங்கப்பூரில் யாரிடம் கொடுப்பதற்காக எடுத்துச் சொல்கிறார்? என்று விசாரணை நடத்துகின்றனர். அதோடு சென்னை பெசன்ட் நகரில் உள்ள ஒன்றிய வன உயிரின பாதுகாப்பு குற்றப் பிரிவு போலீசாருக்கும் இது குறித்து தகவல் கொடுத்துள்ளனர்.

இதையும் படிங்க: சென்னையில் இருந்து தென்மாவட்டங்களுக்கு வந்தே பாரத் உட்பட கூடுதல் சிறப்பு ரயில்கள்: தெற்கு ரயில்வே ரயில்வே அறிவிப்பு

Last Updated : Nov 9, 2023, 12:00 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.