ETV Bharat / state

ப. சிதம்பரம் கைது விவகாரம் - தமிழ்நாடு முழுவதும் காங்., கண்டன ஆர்ப்பாட்டம்

முன்னாள் மத்திய அமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான ப. சிதம்பரம் கைது செய்யப்பட்ட நிலையில், தமிழ்நாடு முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் காங்கிரஸ் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

author img

By

Published : Aug 22, 2019, 6:13 PM IST

P Chidambaram

ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான ப. சிதம்பரம் நேற்று சிபிஐ அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். அவரது கைது நடவடிக்கை நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை வைத்து மத்திய அரசு சிதம்பரத்தை பழிவாங்குவதாகவும், சர்வாதிகார நடவடிக்கைகள் மூலம் ஜனநாயகப் படுகொலை செய்யப்பட்டிருப்பதாகவும் பல்வேறு எதிர்க்கட்சியினர் குற்றம்சாட்டியுள்ளனர்.

சிதம்பரம் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர் என்பதாலும் காங்கிரஸ் கட்சியின் முக்கிய பிரமுகர் என்பதாலும் அவரது கைது நடவடிக்கை மாநிலம் முழுவதும் காங்கிரஸ் கட்சியினரை கொதிப்படையச் செய்துள்ளது. இந்த நிலையில், இன்று மாநிலம் முழுவதும் காங்கிரஸ் கட்சியினர் மாவட்ட தலைநகர் உள்ளிட்ட இடங்களில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

சிதம்பரத்தை விடுதலை செய்ய வலியுறுத்தி சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே காங்கிரஸ் மாநகர பொருளாளர் பாஸ்கர் தலைமையில் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு காவல்துறையினர் அனுமதி அளிக்காத நிலையில் கட்சியினர் சிறிது நேரம் கோஷமிட்டு கலைந்து சென்றனர்.

ப. சிதம்பரம் கைதை கண்டித்து தமிழ்நாடு முழுவதும் காங்., கண்டன ஆர்ப்பாட்டம்

கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு தொண்டாமுத்தூர் எம்எல்ஏ கந்தசாமி, மாநில துணை தலைவர் வீனஸ் மணி, கணபதி சிவக்குமார், மாவட்ட பொருளாளர் சவுந்தரகுமார் உள்ளிட்டோர் தலைமையில் 50க்கும் மேற்பட்ட அக்கட்சியினர் மத்திய அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பெரம்பலூர் மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் புதிய பேருந்து நிலையத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற அக்கட்சியினர், மத்தியில் ஆளும் பாஜக அரசு சர்வாதிகாரப் போக்குடன் ஹிட்லர் ராஜ்ஜியத்தை போன்ற ஒரு அரசாக செயல்படுவதாக குற்றம்சாட்டினர்.

தேனி பங்களா மேடு பகுதியில் இளைஞர் காங்கிரஸ் தமிழ்நாடு மாநில தலைவர் ஹசன் ஆருண் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பேசிய அக்கட்சி நிர்வாகிகள் சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை மத்திய அரசின் கைப்பாவையாக செயல்படுவதாக குற்றம் சாட்டி கண்டன முழக்கங்களை எழுப்பினர். தொடர்ந்து அக்கட்சியினர் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டதால் தேனி-மதுரை சாலையில் சிறிது போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனையடுத்து அங்கிருந்த காவலர்கள் மறியலில் ஈடுபட்ட நூற்றுக்கும் மேற்பட்ட அக்கட்சியினரை கைது செய்து அழைத்துச் சென்றனர்.

ஈரோடு சூரம்பட்டி நான்கு சாலையில் மாநகர மாவட்ட தலைவர் ரவி தலைமையில் 50க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதோடு மத்திய பாஜக அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர். மத்திய பாஜக அரசு ஒரு குற்றவாளி, தீவிரவாதியை போல சிதம்பரத்தை கைது செய்துள்ளதாகவும் குற்றம்சாட்டினர்.

திண்டுக்கல் தலைமை அஞ்சலகம் முன்பு திரண்ட அக்கட்சியினர், முழுக்க முழுக்க இது ஒரு அரசியல் பழிவாங்கல் நடவடிக்கை என்று தெரிவித்தனர். பிரதமர் மோடிக்கு எதிராக கோஷங்களை எழுப்பியவாறு அவரது உருவப்படத்தை எரித்து போராட்டத்தில் ஈடுபட்டதால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. உடனடியாக அங்கிருந்த காவல்துறையினர் கட்சியினரை அங்கிருந்து அப்புறப்படுத்தினார்.

இது போன்று, அரியலூர், விழுப்புரம், புதுக்கோட்டை, வேலூர், நாகை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த காங்கிரஸ் நிர்வாகிகள் மாவட்ட தலைநகரங்களில் மத்திய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

தமிழ்நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சியினர் போராட்டங்களில் ஈடுபட்டதால் சிதம்பரத்தின் கைது விவகாரம் பூதாகரமாக வெடித்துள்ளது.

ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான ப. சிதம்பரம் நேற்று சிபிஐ அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். அவரது கைது நடவடிக்கை நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை வைத்து மத்திய அரசு சிதம்பரத்தை பழிவாங்குவதாகவும், சர்வாதிகார நடவடிக்கைகள் மூலம் ஜனநாயகப் படுகொலை செய்யப்பட்டிருப்பதாகவும் பல்வேறு எதிர்க்கட்சியினர் குற்றம்சாட்டியுள்ளனர்.

சிதம்பரம் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர் என்பதாலும் காங்கிரஸ் கட்சியின் முக்கிய பிரமுகர் என்பதாலும் அவரது கைது நடவடிக்கை மாநிலம் முழுவதும் காங்கிரஸ் கட்சியினரை கொதிப்படையச் செய்துள்ளது. இந்த நிலையில், இன்று மாநிலம் முழுவதும் காங்கிரஸ் கட்சியினர் மாவட்ட தலைநகர் உள்ளிட்ட இடங்களில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

சிதம்பரத்தை விடுதலை செய்ய வலியுறுத்தி சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே காங்கிரஸ் மாநகர பொருளாளர் பாஸ்கர் தலைமையில் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு காவல்துறையினர் அனுமதி அளிக்காத நிலையில் கட்சியினர் சிறிது நேரம் கோஷமிட்டு கலைந்து சென்றனர்.

ப. சிதம்பரம் கைதை கண்டித்து தமிழ்நாடு முழுவதும் காங்., கண்டன ஆர்ப்பாட்டம்

கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு தொண்டாமுத்தூர் எம்எல்ஏ கந்தசாமி, மாநில துணை தலைவர் வீனஸ் மணி, கணபதி சிவக்குமார், மாவட்ட பொருளாளர் சவுந்தரகுமார் உள்ளிட்டோர் தலைமையில் 50க்கும் மேற்பட்ட அக்கட்சியினர் மத்திய அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பெரம்பலூர் மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் புதிய பேருந்து நிலையத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற அக்கட்சியினர், மத்தியில் ஆளும் பாஜக அரசு சர்வாதிகாரப் போக்குடன் ஹிட்லர் ராஜ்ஜியத்தை போன்ற ஒரு அரசாக செயல்படுவதாக குற்றம்சாட்டினர்.

தேனி பங்களா மேடு பகுதியில் இளைஞர் காங்கிரஸ் தமிழ்நாடு மாநில தலைவர் ஹசன் ஆருண் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பேசிய அக்கட்சி நிர்வாகிகள் சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை மத்திய அரசின் கைப்பாவையாக செயல்படுவதாக குற்றம் சாட்டி கண்டன முழக்கங்களை எழுப்பினர். தொடர்ந்து அக்கட்சியினர் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டதால் தேனி-மதுரை சாலையில் சிறிது போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனையடுத்து அங்கிருந்த காவலர்கள் மறியலில் ஈடுபட்ட நூற்றுக்கும் மேற்பட்ட அக்கட்சியினரை கைது செய்து அழைத்துச் சென்றனர்.

ஈரோடு சூரம்பட்டி நான்கு சாலையில் மாநகர மாவட்ட தலைவர் ரவி தலைமையில் 50க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதோடு மத்திய பாஜக அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர். மத்திய பாஜக அரசு ஒரு குற்றவாளி, தீவிரவாதியை போல சிதம்பரத்தை கைது செய்துள்ளதாகவும் குற்றம்சாட்டினர்.

திண்டுக்கல் தலைமை அஞ்சலகம் முன்பு திரண்ட அக்கட்சியினர், முழுக்க முழுக்க இது ஒரு அரசியல் பழிவாங்கல் நடவடிக்கை என்று தெரிவித்தனர். பிரதமர் மோடிக்கு எதிராக கோஷங்களை எழுப்பியவாறு அவரது உருவப்படத்தை எரித்து போராட்டத்தில் ஈடுபட்டதால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. உடனடியாக அங்கிருந்த காவல்துறையினர் கட்சியினரை அங்கிருந்து அப்புறப்படுத்தினார்.

இது போன்று, அரியலூர், விழுப்புரம், புதுக்கோட்டை, வேலூர், நாகை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த காங்கிரஸ் நிர்வாகிகள் மாவட்ட தலைநகரங்களில் மத்திய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

தமிழ்நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சியினர் போராட்டங்களில் ஈடுபட்டதால் சிதம்பரத்தின் கைது விவகாரம் பூதாகரமாக வெடித்துள்ளது.

Intro:Body:Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.