ETV Bharat / state

திமுக - காங்கிரஸ் இடையே பனிப்போர்: ஓபிஎஸ் - சென்னை

சென்னை: திமுக - காங்கிரஸ் இடையே பனிப்போர் நிலவி வருவதாக துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

ops
author img

By

Published : Sep 9, 2019, 7:29 PM IST

சென்னையை அடுத்த திருவேற்காடு அருகே உள்ள தனியார் குடியிருப்புக்கு சொந்தமான கிளப் ஹவுஸ் திறப்பு விழா நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இதில் தமிழ்நாடு துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு உடற்பயிற்சிக் கூடம், விளையாட்டு திடல் போன்ற பல்வேறு வசதிகளைக் கொண்ட கிளப் ஹவுஸை திறந்து வைத்தார்.

இதனைத் தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய அவர், ‘கட்டுமான சங்கங்களின் கோரிக்கையை ஏற்று ஒற்றை சாளர முறை இன்னும் ஓரிரு மாதங்களில் நடைமுறைப்படுத்தப்படும். மேலும், வீட்டு மனைகள் பதிவு செய்வதற்கான கட்டண குறைப்பு நடவடிக்கை ஆகியவற்றை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும்’ என தெரிவித்தார்.

ஓபிஎஸ் செய்தியாளர் சந்திப்பு

பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில், திமுக - காங்கிரஸ் இடையே பனிப்போர் நிலவி வருவதாகவும், இதுகுறித்து கருத்து கூற விரும்பவில்லை எனவும் அவர் கூறினார்.

அதேபோல், ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டத்தால் தமிழ்நாடு மக்களுக்கு எந்தவித பாதிப்பும் இருக்காது என்று உறுதியளித்த அவர், நாங்குநேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிமுக வெற்றி பெறும் எனவும் நம்பிக்கை தெரிவித்தார்.

சென்னையை அடுத்த திருவேற்காடு அருகே உள்ள தனியார் குடியிருப்புக்கு சொந்தமான கிளப் ஹவுஸ் திறப்பு விழா நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இதில் தமிழ்நாடு துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு உடற்பயிற்சிக் கூடம், விளையாட்டு திடல் போன்ற பல்வேறு வசதிகளைக் கொண்ட கிளப் ஹவுஸை திறந்து வைத்தார்.

இதனைத் தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய அவர், ‘கட்டுமான சங்கங்களின் கோரிக்கையை ஏற்று ஒற்றை சாளர முறை இன்னும் ஓரிரு மாதங்களில் நடைமுறைப்படுத்தப்படும். மேலும், வீட்டு மனைகள் பதிவு செய்வதற்கான கட்டண குறைப்பு நடவடிக்கை ஆகியவற்றை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும்’ என தெரிவித்தார்.

ஓபிஎஸ் செய்தியாளர் சந்திப்பு

பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில், திமுக - காங்கிரஸ் இடையே பனிப்போர் நிலவி வருவதாகவும், இதுகுறித்து கருத்து கூற விரும்பவில்லை எனவும் அவர் கூறினார்.

அதேபோல், ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டத்தால் தமிழ்நாடு மக்களுக்கு எந்தவித பாதிப்பும் இருக்காது என்று உறுதியளித்த அவர், நாங்குநேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிமுக வெற்றி பெறும் எனவும் நம்பிக்கை தெரிவித்தார்.

Intro:திமுக காங்கிரஸ் இடையே பனிப்போர் நிலவி வருவதாக துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் திருவேற்காட்டில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேட்டி


Body:சென்னை அடுத்த திருவேற்காடு அருகே தனியார் குடியிருப்புக்கு சொந்தமான கிளப் ஹவுஸ் திறப்பு விழா நிகழ்ச்சி நடைபெற்றது இதில் சிறப்பு விருந்தினராக தமிழக துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் கலந்து கொண்டு உடற்பயிற்சி கூடம்விளையாட்டு திடல் போன்ற பல்வேறு வசதிகள் கொண்ட கிளப் ஹவுஸ் திறந்து வைத்தார் பின்னர் அங்கிருந்த உடற்பயிற்சி சாதனத்தில் உடற்பயிற்சி மேற்கொண்டார் பின்னர் விளையாட்டு திடலை திறந்து வைத்த துணை முதல்வர் பில்லியர்ட்ஸ் விளையாட்டை ஆர்வமுடன் விளையாடினார் இதனைத்தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய அவர் கட்டுமான சங்கங்களின் கோரிக்கையை ஏற்று ஒற்றை சாளர முறை இன்னும் ஓரிரு மாதங்களில் நடைமுறைப்படுத்தப்படும் மேலும் வீட்டுமனைகள் பதிவு செய்வதற்கான கட்டணம் குறைப்பு மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்


Conclusion:பின்னர் செய்தியாளர்களை சந்தித்த துணை முதல்வர் பன்னீர்செல்வம் புதிய கட்டிடத்திற்கான பதிவு கட்டணம் 11 சதவீதமாக உள்ளது அதனை குறைக்க வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர் இதனை முதல்வருடன் ஆலோசனைக்கு பின்பு குறைக்கப்படும் மேலும் இது குறித்து விரைவான நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார் நாங்குநேரி சட்டமன்ற இடைத்தேர்தலில் காங்கிரஸ் போட்டியிடும் என தெரிவித்து வந்த நிலையில் திடீரென அதுகுறித்து நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டது குறித்த செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த துணை முதல்வர் தற்போது நாங்குநேரி விக்ரவாண்டி சட்டமன்ற இடைத்தேர்தலில் அதிமுக நிச்சயமாக மாபெரும் வெற்றி அடையும் மேலும் திமுக காங்கிரஸ் இடையே உட்கட்சி பனிப்போர் நடைபெற்று வருகிறது எனவே இது குறித்து நான் எவ்வித கருத்தும் கூற விரும்பவில்லை என தெரிவித்த அவர் ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டத்தில் தமிழக மக்களுக்கு எந்தவித பாதிப்பும் இருக்காது இந்த திட்டத்தில் அனைவருக்குமான பொது வினியோகத்தில் ஒரு கிராம் அளவிற்கு கூட உணவுகள் குறைக்கப்படாது மேலும் வடமாநிலத்தில் இருந்து இங்கு வந்து பொருட்கள் வாங்கும் ரேஷன் கடைகளுக்கு வழங்கப்படும் பொருட்கள் கூடுதலாக மத்திய தொகுப்பிலிருந்து வழங்கப்படும் என கூறப்பட்டுள்ளது எனவே இந்த திட்டத்தில் எந்தவித பாதிப்பும் ஏற்படாது என துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார் இந்த நிகழ்வில் ஊரக தொழில் வளர்ச்சி துறை அமைச்சர் பெஞ்சமின் தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் மா பா பாண்டியராஜன் உள்ளிட்ட அமைச்சர்கள் கலந்து கொண்டனர்

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.