ETV Bharat / state

திருமாவளவன் கோலம் போட்டு குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிர்ப்பு

author img

By

Published : Dec 31, 2019, 7:38 PM IST

சென்னை: விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், எம்.பியுமான திருமாவளவன் கோலம் போட்டு குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிர்ப்பு
குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிர்ப்பு


குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. அதன் தொடர்ச்சியாக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், எம்.பியுமான திருமாவளவன் சென்னை வேளச்சேரியில் உள்ள அவரது அலுவலகத்தில் கோலம் போட்டு தமது எதிர்ப்பை தெரிவித்தார்.

சுமார் 25 நிமிடங்கள் அமர்ந்து முழு கோலத்தையும் அவரே போட்டு முடித்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், "இந்திய நாட்டில் எனது எதிர்ப்பை தெரிவிப்பதற்கு அரசியலமைப்பு சட்டம் இடம் தருகிறது. ஆனால் கருத்து சுதந்திரத்தைப் பறிப்பது கண்டனத்திற்குறியது. இதுவும் கருத்து சுதந்திரத்தின் ஒரு போராட்ட வடிவமே. கோலம் போடுவோர் மீது ஏவப்படும் அடக்குமுறையை தமிழ்நாடு அரசு கைவிட வேண்டும்" என்றார்.

குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிர்ப்பு

மேலும், No CAA, No NPR, No NCR மட்டுமல்லாமல் No modi என்றும் மக்கள் கோலம் போட வேண்டும் எனவும் அவர் கூறினார்.

இதையும் படிங்க: நீதித் துறை, ஊடகத் துறை என அனைத்திலும் பாஜகவின் அரசியல் தலையீடு!'


குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. அதன் தொடர்ச்சியாக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், எம்.பியுமான திருமாவளவன் சென்னை வேளச்சேரியில் உள்ள அவரது அலுவலகத்தில் கோலம் போட்டு தமது எதிர்ப்பை தெரிவித்தார்.

சுமார் 25 நிமிடங்கள் அமர்ந்து முழு கோலத்தையும் அவரே போட்டு முடித்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், "இந்திய நாட்டில் எனது எதிர்ப்பை தெரிவிப்பதற்கு அரசியலமைப்பு சட்டம் இடம் தருகிறது. ஆனால் கருத்து சுதந்திரத்தைப் பறிப்பது கண்டனத்திற்குறியது. இதுவும் கருத்து சுதந்திரத்தின் ஒரு போராட்ட வடிவமே. கோலம் போடுவோர் மீது ஏவப்படும் அடக்குமுறையை தமிழ்நாடு அரசு கைவிட வேண்டும்" என்றார்.

குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிர்ப்பு

மேலும், No CAA, No NPR, No NCR மட்டுமல்லாமல் No modi என்றும் மக்கள் கோலம் போட வேண்டும் எனவும் அவர் கூறினார்.

இதையும் படிங்க: நீதித் துறை, ஊடகத் துறை என அனைத்திலும் பாஜகவின் அரசியல் தலையீடு!'

Intro:Body:குடியுரிமை சட்டத்திற்கு எதிராக சென்னை வேளச்சேரியில் உள்ள அவரது இல்லத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் கோலமிட்டு தமது எதிர்ப்பை பதிவு செய்தார். சுமார் 25 நிமிடங்கள் தானே அமர்ந்து முழு கோலத்தை போட்டு முடித்தார்

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், இந்திய நாட்டில் தமது எதிர்ப்பை தெரிவிப்பதற்கு அரசியலமைப்பு சட்டம் இடம் தருகிறது ஆனால் கருத்து சுதந்திரத்தைப் பரிப்பது கண்டனத்திற்குறியது. இதுவும் கருத்து சுதந்திரத்தின் ஒரு போராட்ட வடிவமே.

கோலம் போடுவோர் மீது ஏவப்படும் அடக்குமறையை தமிழக அரசு கைவிட வேண்டும்

மார்கழி மாதம் முழுதும் வீட்டில் கோலம் இடும் பெண்கள் CAA எதிராக கோலமிட்டு நமது எதிர்ப்பை தெரிவிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்

இந்த சட்டம் முஸ்லிம்களுக்கு மட்டுமில்லை ஒட்டுமொத்த தேசத்திற்கே கேடு விளைவிக்கும்

இதனை கண்டித்து புத்தாண்டு மற்றும் பொங்கல் திருநாளான தமிழர் திருநாளை கொண்டாடாமல் விடுதலை சிறுத்தைகள் புறக்கணிப்பு செய்ய வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.

முதன்முறையாக 25 நிமிடம் நானே கோலம் இட்டேன், பெண்களின் கஷ்டங்களை உணர்ந்தேன்

அனைவரும் சமம் என்பதை உணர்த்த, பெண்கள் தான் செய்ய வேண்டும் என்பதை கட்டுடைக்கவே நானே கோலம் இட்டேன்

No CAA,No NPR,No NCR மட்டுமல்லாமல் நோ மோடி என்றும் மக்கள் கோலம் போட வேண்டும்

ஒட்டுமொத்த ஜனநாயக சக்திகளும் ஒன்றிணைய வேண்டிய தேவை இருக்கிறது

ஆட்சி அதிகாரத்தில் இருப்பவர்கள் அகந்தையில் இருக்கிறார்கள் அதனால் சங்பரிவாரின் திட்டங்களை ஒவ்வொன்றாக நிறைவேற்றி வருகிறது மத்திய அரசு.


இந்திய வரலாற்றிலேயே ஆளுங்கட்சி ஆதரவு பிரச்சாரம் செய்வது இதுவே முதல் முறை



தமிழகத்தில் அனைத்து ஜனநாயக சக்திகளும் ஓரணியில் தான் இருக்கிறோம், ஆனால் ஆளும் அதிமுக மட்டும் தான் மத்திய அரசுக்கு முட்டு கொடுத்து வருகிறது

இந்தியாவில் அனைத்து குருஜி க்களும் எதிர்ப்பு தெரிவித்தால் தான் ஆச்சர்யம்

இந்தியா முழுவதும் எதிர்ப்பு வலுத்து வருவதை உணர்ந்தே அச்சத்தின் காரணமாக இந்த ஆதரவு பிரச்சாரத்தை மோடி அரசு மேற்கொண்டு வருகிறது

ராணுவ தளபதி பிபின் ராவத் முப்படைகளுக்கும் தளபதியாக அறிவித்திருப்பது ஆபத்தான விஷயம்.

மூன்று படைகளையும் தனிதனியாக கட்டுக்குள் வைத்திருப்பதற்கு பதில் ஒருவரை மட்டும் கை கட்டுக்குள் வைத்து கொள்ள பார்க்கிறார் மோடி.

மோடி அரசு ஏதோ தொலை நோக்கு திட்டத்துடன் இதனை நடத்துகிறது, பாக்கிஸ்தானை போல ராணுவ ஆட்சி முறையை கொண்டு வர திட்டமா என்ற அச்சம் எழுகிறது. நாம் விழித்தெழ வேண்டிய நேரம் இது என் தெரிவித்தார்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.