ETV Bharat / state

குறுவை சாகுபடிக்காக அமராவதி அணையிலிருந்து தண்ணீர் திறக்க உத்தரவு

author img

By

Published : Sep 17, 2020, 3:37 PM IST

சென்னை: திருப்பூர், கரூர் மாவட்டத்தில் குறுவை சாகுபடிக்காக வரும் 20ஆம் தேதி முதல் அமராவதி அணையிலிருந்து தண்ணீர் திறக்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

on september 20th Amravati dam opened for kharif cultivation
on september 20th Amravati dam opened for kharif cultivation

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,‌ "திருப்பூர் மாவட்டம், அமராவதி அணையிலிருந்து அமராவதி பழைய மற்றும் புதிய பாசன பகுதிகளுக்கு தண்ணீர் திறந்து விடுமாறு திருப்பூர் மற்றும் கரூர் மாவட்டங்களைச் சார்ந்த நீரை பயன்படுத்துவோர் சங்க பிரதிநிதிகள் உள்ளிட்ட வேளாண் பெருங்குடி மக்களிடமிருந்து கோரிக்கைகள் வந்துள்ளன.

வேளாண் மக்களின் வேண்டுகோளினை ஏற்று, திருப்பூர், கரூர் மாவட்டங்களைச் சார்ந்த 16 அமராவதி பழைய வாய்க்கால் பாசனப் பகுதி நிலங்களில் குறுவை சாகுபடிக்காக 6048.00 மி.கன.அடிக்கு மிகாமலும், திருப்பூர் மாவட்டத்திலுள்ள புதிய பாசனப் பகுதிகளில் 2661.00 மி.கன.அடிக்கு மிகாமலும், மொத்தம் 8709.00 மி.க.அடிக்கு மிகாமல் 20.9.2020 முதல் 2.2.2021 முடிய அமராவதி அணையிலிருந்து தண்ணீர் திறந்து விட ஆணையிட்டுள்ளேன்.

இதனால் திருப்பூர், கரூர் மாவட்டங்களில் உள்ள 51 ஆயிரத்து, 803 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும். விவசாயப் பெருமக்கள் நீரை சிக்கனமாக பயன்படுத்தி, நீர் மேலாண்மை மேற்கொண்டு உயர் மகசூல் பெற வேண்டும்" என்று கேட்டுக்கொண்டார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,‌ "திருப்பூர் மாவட்டம், அமராவதி அணையிலிருந்து அமராவதி பழைய மற்றும் புதிய பாசன பகுதிகளுக்கு தண்ணீர் திறந்து விடுமாறு திருப்பூர் மற்றும் கரூர் மாவட்டங்களைச் சார்ந்த நீரை பயன்படுத்துவோர் சங்க பிரதிநிதிகள் உள்ளிட்ட வேளாண் பெருங்குடி மக்களிடமிருந்து கோரிக்கைகள் வந்துள்ளன.

வேளாண் மக்களின் வேண்டுகோளினை ஏற்று, திருப்பூர், கரூர் மாவட்டங்களைச் சார்ந்த 16 அமராவதி பழைய வாய்க்கால் பாசனப் பகுதி நிலங்களில் குறுவை சாகுபடிக்காக 6048.00 மி.கன.அடிக்கு மிகாமலும், திருப்பூர் மாவட்டத்திலுள்ள புதிய பாசனப் பகுதிகளில் 2661.00 மி.கன.அடிக்கு மிகாமலும், மொத்தம் 8709.00 மி.க.அடிக்கு மிகாமல் 20.9.2020 முதல் 2.2.2021 முடிய அமராவதி அணையிலிருந்து தண்ணீர் திறந்து விட ஆணையிட்டுள்ளேன்.

இதனால் திருப்பூர், கரூர் மாவட்டங்களில் உள்ள 51 ஆயிரத்து, 803 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும். விவசாயப் பெருமக்கள் நீரை சிக்கனமாக பயன்படுத்தி, நீர் மேலாண்மை மேற்கொண்டு உயர் மகசூல் பெற வேண்டும்" என்று கேட்டுக்கொண்டார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.