ETV Bharat / state

'ஈழத்தமிழர்களைப் பற்றியோ ராஜிவ் காந்தியைப் பற்றியோ பேச கனிமொழிக்குத் தகுதியில்லை...!'

author img

By

Published : Oct 19, 2019, 5:00 PM IST

சென்னை: ஈழத்தமிழர்களைப் பற்றியோ ராஜிவ் காந்தியைப் பற்றியோ பேசுவதற்கு கனிமொழிக்குத் தகுதியில்லை, அநாகரிகத்தின் ஆரம்பமே திமுகதான் என நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் விமர்சனம் செய்துள்ளார்.

சீமான்

தூத்துக்குடியிலிருந்து சென்னை திரும்பிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசுகையில், ''இடைத்தேர்தல் என்றாலே வாக்குகளை விலைகொடுத்து வாங்குவதை மரபாக்கிவிட்டார்கள். பணம் கொடுத்தால்தான் வாக்குபெற முடியும். மக்கள் இந்த இரண்டு கட்சிகளின் மீதும் வெறுப்பில் உள்ளார்கள். தேர்தல் நேரத்தில் பணம்தான் வெற்றியைத் தீர்மானிக்கிறது என்றால் இது பணநாயகமாக மாறி ஜனநாயகம் இறந்துவிடும்'' என்றார்.

தொடர்ந்து, அமைச்சர் ராஜேந்திர பாலாஜி இஸ்லாமியர்கள் பற்றி பேசியது குறித்து கருத்து கூறிய சீமான், அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் அணுகுமுறை அநாகரிகமானது. அமைச்சர் என்பவர் சாதி, மதம் கடந்து பொதுவானவராக இருக்க வேண்டும். மாண்பை தவறி ஒரு அமைச்சர் பேசுவது அநாகரிகமானது என்றார்.

சீமான் செய்தியாளர் சந்திப்பு

பின்னர் ஈழத் தமிழர்களைப் பற்றியோ ராஜிவ் காந்தியைப் பற்றியோ பேச கனிமொழிக்குத் தகுதி இல்லை என்றும் அநாகரிகத்தின் ஆரம்பமே திமுகதான் என சீமான் கடுமையாக விமர்சனம் செய்தார். முன்னதாக ராஜிவ் காந்தி குறித்த சீமானின் பேச்சு அநாகரிகமானது என கனிமொழி கருத்து தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்கலாமே: 'சீமான் பேசியது அநாகரீகமான ஒன்று' - கனிமொழி கருத்து

தூத்துக்குடியிலிருந்து சென்னை திரும்பிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசுகையில், ''இடைத்தேர்தல் என்றாலே வாக்குகளை விலைகொடுத்து வாங்குவதை மரபாக்கிவிட்டார்கள். பணம் கொடுத்தால்தான் வாக்குபெற முடியும். மக்கள் இந்த இரண்டு கட்சிகளின் மீதும் வெறுப்பில் உள்ளார்கள். தேர்தல் நேரத்தில் பணம்தான் வெற்றியைத் தீர்மானிக்கிறது என்றால் இது பணநாயகமாக மாறி ஜனநாயகம் இறந்துவிடும்'' என்றார்.

தொடர்ந்து, அமைச்சர் ராஜேந்திர பாலாஜி இஸ்லாமியர்கள் பற்றி பேசியது குறித்து கருத்து கூறிய சீமான், அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் அணுகுமுறை அநாகரிகமானது. அமைச்சர் என்பவர் சாதி, மதம் கடந்து பொதுவானவராக இருக்க வேண்டும். மாண்பை தவறி ஒரு அமைச்சர் பேசுவது அநாகரிகமானது என்றார்.

சீமான் செய்தியாளர் சந்திப்பு

பின்னர் ஈழத் தமிழர்களைப் பற்றியோ ராஜிவ் காந்தியைப் பற்றியோ பேச கனிமொழிக்குத் தகுதி இல்லை என்றும் அநாகரிகத்தின் ஆரம்பமே திமுகதான் என சீமான் கடுமையாக விமர்சனம் செய்தார். முன்னதாக ராஜிவ் காந்தி குறித்த சீமானின் பேச்சு அநாகரிகமானது என கனிமொழி கருத்து தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்கலாமே: 'சீமான் பேசியது அநாகரீகமான ஒன்று' - கனிமொழி கருத்து

Intro:நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் சென்னை விமான நிலையத்தில் பேட்டிBody:நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் சென்னை விமான நிலையத்தில் பேட்டி


தூத்துக்குடியிலிருந்து சென்னை திரும்பிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் சென்னை விமானநிலையத்தில் செய்தியாளர்களிடம் கூறியதாவது.

நாங்குநேரி, விக்கரவாண்டி தொகுதி குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர் இடைதேர்தல் என்றாலே வாக்கை விலை கொடுத்து வாங்குவதை மரபாக்கிவிட்டார்கள் என சீமான் தெரிவித்தார்.

மேலும் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி இஸ்லாமியர்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியது குறித்து சீமானிடம் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த சீமான் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் அணுகுமுறை அநாகரிகமானது, அமைச்சர் என்பவர் மதம் சாதி கடந்து பொதுவானவராக இருக்க வேண்டும் என்றும், மாண்பை தவறி அமைச்சர் பேசுவது அநாகரிகமானது என தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர் பணம் கொடுத்தால்தான் வாக்கு பெற முடியும் என்றும் மக்கள் இந்த 2 கட்சிகளின் மீதும் வெறுப்பில் உள்ளார்கள் என தெரிவித்த அவர் தேர்தல் நேரத்தில் பணம் தான் வெற்றியை தீர்மானிக்கிறது என்றால் இது பணநாயகமாக மாறி ஜனநாயகம் இறந்துவிடும் என சீமான் தெரிவித்துள்ளார்.

பின்னர் ராஜீவ்காந்தி குறித்து சீமானின் பேச்சு அநாகரிகமானது என கனிமொழி கருத்து தெரிவித்ததற்கு பதிலளித்த சீமான், ஈழ தமிழர்களை பற்றியோ, ராஜீவ்காந்தியை பற்றி பேச கனிமொழிக்கு தகுதி இல்லை என்றும் அநாகரிகத்தின் ஆரம்பமே திமுகதான் என சீமான் தெரிவித்துள்ளார்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.