ETV Bharat / state

அம்பத்தூரில் போலீசாரை வடமாநிலத் தொழிலாளர்கள் தாக்கியதாக வழக்குப் பதிவு!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 26, 2023, 10:48 AM IST

ஆயுத பூஜை கொண்டாட்டத்தின்போது போலீசாரைத் தாக்கியதாக வட மாநில தொழிலாளர்கள் மீது வழக்கு பதிவு செய்து போலிசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

north-state-workers-who-attacked-the-police-under-the-influence-of-alcohol
மது போதையில் போலீசாரை தாக்கிய வட மாநில தொழிலாளர்கள்...

சென்னை: அம்பத்தூர் அடுத்துள்ள பட்டரவாக்கம் தொழிற்சாலையில், மது போதையில் 200க்கும் மேற்பட்ட வட மாநிலத் தொழிலாளர்கள் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர். இதை தடுக்க முயன்ற போலீசாரையும் தொழிலாளர்கள் தாக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.

அம்பத்தூர் அடுத்த பட்டரவாக்கம் சாலையில் தனியார் தொழிற்சாலை ஒன்று இயங்கி வருகிறது. இங்கு ஏராளமான வட மாநிலத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இந்த நிலையில், இங்கு நேற்று இரவு ஆயுத பூஜை விழா நடைபெற்றது. அப்போது 200க்கும் மேற்பட்ட வடமாநிலத் தொழிலாளர்கள் மது போதையில் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர்.

பின்னர், இது பற்றி அறிந்ததும் அப்பத்தூர் தொழிற்பேட்டை போலீசார் ரகுபதி மற்றும் காவலர் ராஜ்குமார் நேரில் சென்று, இது போன்ற செயல்களில் ஈடுபடக் கூடாது என்று அவர்களை கண்டித்துள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த தொழிலாளர்கள், காவலரை சரமாரியாக தாக்கியுள்ளதாகத் தெரிகிறது. மேலும் போலீசார் வந்த இருசக்கர வாகனத்தையும் அடித்து நொறுக்கியுள்ளதாக கூறப்படுகிறது.

இதில் படுகாயமடைந்த ரகுபதி தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கபட்டுள்ளார். அங்கு அவருக்கு தலையில் 3 தையல் போடப்பட்டுள்ளது என்றும், தோள்பட்டை இடுப்பு ஆகிய பகுதிகளில் காயம் ஏற்பட்டுள்ளது எனவும் கூறப்படுகிறது.

இதனையடுத்து சம்பந்தப்பட்ட தொழிற்சாலையில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். மேலும், அங்குள்ள சிசிடிவி காட்சிகளை வைத்து போலீசார் மீது தாக்குதலில் ஈடுபட்ட வடமாநிலத் தொழிலாளர்களை அடையாளம் காணும் பணியில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் வட இந்தியர்கள் ஒருவருக்கொருவர் மோதிக் கொண்டது, இதை தடுக்கச் சென்ற போலீசார் மீது தாக்குதல் நடத்தியது உள்ளிட்டவை குறித்து அம்பத்தூர் தொழில்பேட்டை காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, விசாரனை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: கர்நாடகாவில் கோர விபத்து; குழந்தைகள் உள்பட 12 பேர் உயிரிழப்பு - 3 பேர் படுகாயம்

சென்னை: அம்பத்தூர் அடுத்துள்ள பட்டரவாக்கம் தொழிற்சாலையில், மது போதையில் 200க்கும் மேற்பட்ட வட மாநிலத் தொழிலாளர்கள் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர். இதை தடுக்க முயன்ற போலீசாரையும் தொழிலாளர்கள் தாக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.

அம்பத்தூர் அடுத்த பட்டரவாக்கம் சாலையில் தனியார் தொழிற்சாலை ஒன்று இயங்கி வருகிறது. இங்கு ஏராளமான வட மாநிலத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இந்த நிலையில், இங்கு நேற்று இரவு ஆயுத பூஜை விழா நடைபெற்றது. அப்போது 200க்கும் மேற்பட்ட வடமாநிலத் தொழிலாளர்கள் மது போதையில் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர்.

பின்னர், இது பற்றி அறிந்ததும் அப்பத்தூர் தொழிற்பேட்டை போலீசார் ரகுபதி மற்றும் காவலர் ராஜ்குமார் நேரில் சென்று, இது போன்ற செயல்களில் ஈடுபடக் கூடாது என்று அவர்களை கண்டித்துள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த தொழிலாளர்கள், காவலரை சரமாரியாக தாக்கியுள்ளதாகத் தெரிகிறது. மேலும் போலீசார் வந்த இருசக்கர வாகனத்தையும் அடித்து நொறுக்கியுள்ளதாக கூறப்படுகிறது.

இதில் படுகாயமடைந்த ரகுபதி தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கபட்டுள்ளார். அங்கு அவருக்கு தலையில் 3 தையல் போடப்பட்டுள்ளது என்றும், தோள்பட்டை இடுப்பு ஆகிய பகுதிகளில் காயம் ஏற்பட்டுள்ளது எனவும் கூறப்படுகிறது.

இதனையடுத்து சம்பந்தப்பட்ட தொழிற்சாலையில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். மேலும், அங்குள்ள சிசிடிவி காட்சிகளை வைத்து போலீசார் மீது தாக்குதலில் ஈடுபட்ட வடமாநிலத் தொழிலாளர்களை அடையாளம் காணும் பணியில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் வட இந்தியர்கள் ஒருவருக்கொருவர் மோதிக் கொண்டது, இதை தடுக்கச் சென்ற போலீசார் மீது தாக்குதல் நடத்தியது உள்ளிட்டவை குறித்து அம்பத்தூர் தொழில்பேட்டை காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, விசாரனை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: கர்நாடகாவில் கோர விபத்து; குழந்தைகள் உள்பட 12 பேர் உயிரிழப்பு - 3 பேர் படுகாயம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.