ETV Bharat / state

உதயமானது செங்கல்பட்டு மாவட்டம் - தொடங்கி வைத்த முதலமைச்சர்! - செங்கல்பட்டை தலைமையிடமாகக் கொண்டு உருவாக்கப்பட்ட புதிய மாவட்டம்

காஞ்சிபுரம்: செங்கல்பட்டை தலைமையிடமாகக் கொண்டு உருவாக்கப்பட்ட புதிய மாவட்டத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று தொடக்கி வைத்தார்.

new-district
new-district
author img

By

Published : Nov 29, 2019, 2:05 PM IST

காஞ்சிபுரம் மாவட்டத்தில் இருந்து செங்கல்பட்டை பிரித்து தனி மாவட்டமாக உருவாக்கப்படும் என்று தமிழ்நாடு சட்டப்பேரவையில் முதலமைச்சர் பழனிசாமி அறிவித்தார். அதன்படி செங்கல்பட்டு மாவட்டத்தின் செயல்பாட்டை முதலமைச்சர் பழனிசாமி இன்று தொடக்கி வைத்தார். இந்த மாவட்டத்தில் தாம்பரம், செங்கல்பட்டு, மதுராந்தகம் ஆகிய மூன்று வருவாய் கோட்டங்கள் இடம்பெற்றுள்ளன.

இந்நிகழ்ச்சியில், மானிய விலையில் இருசக்கர வாகனம் உள்ளிட்ட திட்டங்களை பயனாளிகளுக்கு முதலமைச்சர் பழனிசாமி வழங்கினார். துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள், செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் உள்ளிட்டோர் இதில் பங்கேற்றனர்.

செங்கல்பட்டு மாவட்டத் தொடக்க விழா

முன்னதாக, வேலூர் மாவட்டம் மூன்றாகப் பிரிக்கப்பட்டு ராணிப்பேட்டை, திருப்பத்தூர் ஆகிய மாவட்டங்களின் செயல்பாட்டை முதலமைச்சர் பழனிசாமி நேற்று தொடங்கி வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


இதையும் படிங்க:

ரூ.1000 ரொக்கம் உள்ளிட்ட பொங்கல் பரிசுத் தொகுப்பை தொடங்கி வைத்த முதலமைச்சர்

காஞ்சிபுரம் மாவட்டத்தில் இருந்து செங்கல்பட்டை பிரித்து தனி மாவட்டமாக உருவாக்கப்படும் என்று தமிழ்நாடு சட்டப்பேரவையில் முதலமைச்சர் பழனிசாமி அறிவித்தார். அதன்படி செங்கல்பட்டு மாவட்டத்தின் செயல்பாட்டை முதலமைச்சர் பழனிசாமி இன்று தொடக்கி வைத்தார். இந்த மாவட்டத்தில் தாம்பரம், செங்கல்பட்டு, மதுராந்தகம் ஆகிய மூன்று வருவாய் கோட்டங்கள் இடம்பெற்றுள்ளன.

இந்நிகழ்ச்சியில், மானிய விலையில் இருசக்கர வாகனம் உள்ளிட்ட திட்டங்களை பயனாளிகளுக்கு முதலமைச்சர் பழனிசாமி வழங்கினார். துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள், செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் உள்ளிட்டோர் இதில் பங்கேற்றனர்.

செங்கல்பட்டு மாவட்டத் தொடக்க விழா

முன்னதாக, வேலூர் மாவட்டம் மூன்றாகப் பிரிக்கப்பட்டு ராணிப்பேட்டை, திருப்பத்தூர் ஆகிய மாவட்டங்களின் செயல்பாட்டை முதலமைச்சர் பழனிசாமி நேற்று தொடங்கி வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


இதையும் படிங்க:

ரூ.1000 ரொக்கம் உள்ளிட்ட பொங்கல் பரிசுத் தொகுப்பை தொடங்கி வைத்த முதலமைச்சர்

Intro:காஞ்சிபுரம் மாவட்டத்தில் இருந்து புதிதாக பிரிக்கப்படும் செங்கல்பட்டு மாவட்டம் துவக்கவிழா மற்றும் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா இன்னும் சில மணி நேரங்களில் துவங்க உள்ளதால் இவ்விழாவிற்கு தமிழக முதல்வர் மற்றும் துணை முதல்வர் வருகை தர உள்ளனர்


Body:காஞ்சிபுரம் மாவட்டம் செங்கல்பட்டில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் இருந்து புதிதாக பிரிக்கப்படும் செங்கல்பட்டு மாவட்டம் துவக்க விழா மற்றும் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா இன்னும் சில மணி நேரங்களில் நடக்க இருக்கும் நிலையில் அதற்கான முன்னேற்பாடுகள் பிரமாண்டமான முறையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது குறிப்பாக உயரமான பதாகைகள் மற்றும் கோட்டை அமைப்பு போன்ற பதாகைகள் பொருத்தப்பட்டுள்ளன அதுமட்டுமின்றி இலைகளாலும் மலர்களாலும் செய்யப்பட்ட நுழைவாயில் வாழைமர தோரணங்கள் மற்றும் ஆயி அதிமுக கட்சி கொடியினை சாலையோரம் நட்டு வண்ண தோரணங்களால் அலங்கரிக்கப்பட்டு உள்ளது அதுமட்டுமின்றி கிராமியக் கலைகளான மயிலாட்டம் ஒயிலாட்டம் கரகாட்டம் பறையாட்டம் போன்ற பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடத்தப்படவுள்ளன அதற்கான முன்னேற்பாடுகளும் செய்யப்பட்டு வருகின்றன முதலாவதாக செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை திறந்து வைத்த பிறகு மாவட்டம் தொடங்கும் விழா நடைபெற உள்ளது


Conclusion:இவ்விழாவிற்கு ஆயிரக்கணக்கில் மகளிர் களும் பொதுமக்களும் கட்சி நிர்வாகிகளும் குவிந்தவண்ணம் உள்ளனர்
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.