ETV Bharat / state

"சம வேலைக்கு சம ஊதியம்" இடைநிலை ஆசிரியர்கள் போராட்டம்: தமிழக அரசின் பேச்சுவார்த்தை தோல்வி!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 1, 2023, 4:29 PM IST

Tamil Nadu Teachers protest: இடைநிலை ஆசிரியர்களுக்கு எந்த தேதியில், கோரிக்கைகள் அமல்படுத்தப்படும் என்று முதலமைச்சர் தெரிவிக்க வேண்டும். 2024ஆம் ஆண்டு தொடக்கத்தில் இருந்தாவது கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும் என இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்கள் இயக்கத்தின் மாநில பொதுச் செயலாளர் ராபர்ட் தெரிவித்துள்ளார்.

negotiations-with-the-tamil-nadu-government-regarding-the-demand-of-secondary-teachers-ssta-failed
"சம வேலைக்கு" "சம ஊதியம்" இடைநிலை ஆசிரியர்கள் உடனான தமிழக அரசு பேச்சுவார்த்தை தோல்வி!

சென்னை: இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய முரண்பாட்டைக் களைய வலியுறுத்தி, செப்டம்பர் 28ஆம் தேதி முதல் தொடர்ந்து 4வது நாளாகக் கொளுத்தும் வெயிலிலும் போராட்டம் நடத்தி வரும் ஆசிரியர்களுடன் பள்ளிக்கல்வித்துறை செயலாளர் காகர்லா உஷா இன்று (அக்.1) பேச்சுவார்த்தை நடத்தினார்.

வெயிலின் கொடுமை தாங்காமல் வயது முதிர்வு காரணமாக 230க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் உடல்நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும், 13 பேர் போராட்டக் களத்திலேயே சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதையும் படிங்க: பாட்டு பாடி போராட்டம் நடத்திய பகுதி நேர ஆசிரியர்கள்; பேச்சுவார்த்தைக்குப் பிறகும் போராட்டம் தொடர்வதாக அறிவிப்பு!

இந்த நிலையில் "சம வேலைக்கு" "சம ஊதியம்" போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்களுடன் பள்ளிக்கல்வித்துறை முதன்மைச் செயலாளர் காகர்லா உஷா பேச்சுவார்த்தைக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்கள் இயக்கத்தின் மாநில பொதுச் செயலாளர் ராபர்ட் கூறும் போது, 2009ஆம் ஆண்டுக்கு ஜூன் 1ஆம் தேதிக்குப் பின் பணியில் சேர்ந்த இடைநிலை ஆசிரியர்களுக்கு ஊதிய முரண்பாடு இருப்பது குறித்து நான்கு நாட்களாக உண்ணாவிரதம் போராட்டம் நடத்தி வருகிறோம். பள்ளிக் கல்வித்துறை முதன்மை செயலாளர், நிதித்துறை கூடுதல் செயலாளருடன் இன்று பேச்சுவார்த்தை நடைபெற்றது. இன்னும் கால அவகாசம் வேண்டும் என்று தெரிவிக்கின்றனர்.ஊதிய முரண்பாடுகளைக் களைவதில், இத்தனை ஆண்டுகளில் எந்தவிதமான முன்னேற்றமும் இல்லை. நியாயமான பதில் கிடைக்கும் வரை நிச்சயம் உண்ணாவிரதப் போராட்டம் தொடரும். எங்களின் சில கருத்துக்களைத் தெரிவித்துள்ளோம். பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.

இதையும் படிங்க: சம வேலைக்கு சம ஊதியம்; போராட்டக் குழுவினருடன் அரசு பேச்சுவார்த்தை!

கூடுதல் அவகாசம் தருவதில் பிரச்சினை இல்லை. இதே கோரிக்கைக்காகப் பல ஆண்டுகளாகப் போராடி வருகிறோம். முதலமைச்சர் கவனத்திற்கு எடுத்துச் செல்ல தெரிவித்துள்ளோம். ஏற்கனவே 14 ஆண்டுகள் ஆகிவிட்டது, இன்னும் கால அவகாசம் கேட்கின்றனர். ஏற்கனவே போராட்டத்தின் போது மூவர் குழு அமைக்கப்பட்டது. மூன்று மாதங்களில் பதில் அளிக்கப்படும் என்றனர். ஒன்பது மாதங்களாகியும் எந்தவித முன்னேற்றமும் இல்லை.

எந்த தேதியில் கோரிக்கைகள் அமல்படுத்தப்படும் என்று முதலமைச்சர் தெரிவிக்க வேண்டும். முதல்வர் தேதியை அறிவித்தால் போராட்டத்தைக் கைவிடுவோம். எங்கள் நியாயமான கொள்கையை அரசு அதிகாரிகள் அனைத்து விதத்திலும் ஏற்றுக் கொண்டனர். ஆனால், அந்த கோரிக்கைகள் நிறைவேற்றப்படுவதில் காலதாமதம் ஆகிறது. இன்றே கோரிக்கைகளை நிறைவேற்றச் சொல்லிக் கேட்கவில்லை. 2024ஆம் ஆண்டு தொடக்கத்திலிருந்ததாவது கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும் எனக் கோரிக்கை வைத்துள்ளோம் எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: காவிரி விவகாரம்; அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும்- ஈபிஎஸ் வலியுறுத்தல்

சென்னை: இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய முரண்பாட்டைக் களைய வலியுறுத்தி, செப்டம்பர் 28ஆம் தேதி முதல் தொடர்ந்து 4வது நாளாகக் கொளுத்தும் வெயிலிலும் போராட்டம் நடத்தி வரும் ஆசிரியர்களுடன் பள்ளிக்கல்வித்துறை செயலாளர் காகர்லா உஷா இன்று (அக்.1) பேச்சுவார்த்தை நடத்தினார்.

வெயிலின் கொடுமை தாங்காமல் வயது முதிர்வு காரணமாக 230க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் உடல்நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும், 13 பேர் போராட்டக் களத்திலேயே சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதையும் படிங்க: பாட்டு பாடி போராட்டம் நடத்திய பகுதி நேர ஆசிரியர்கள்; பேச்சுவார்த்தைக்குப் பிறகும் போராட்டம் தொடர்வதாக அறிவிப்பு!

இந்த நிலையில் "சம வேலைக்கு" "சம ஊதியம்" போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்களுடன் பள்ளிக்கல்வித்துறை முதன்மைச் செயலாளர் காகர்லா உஷா பேச்சுவார்த்தைக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்கள் இயக்கத்தின் மாநில பொதுச் செயலாளர் ராபர்ட் கூறும் போது, 2009ஆம் ஆண்டுக்கு ஜூன் 1ஆம் தேதிக்குப் பின் பணியில் சேர்ந்த இடைநிலை ஆசிரியர்களுக்கு ஊதிய முரண்பாடு இருப்பது குறித்து நான்கு நாட்களாக உண்ணாவிரதம் போராட்டம் நடத்தி வருகிறோம். பள்ளிக் கல்வித்துறை முதன்மை செயலாளர், நிதித்துறை கூடுதல் செயலாளருடன் இன்று பேச்சுவார்த்தை நடைபெற்றது. இன்னும் கால அவகாசம் வேண்டும் என்று தெரிவிக்கின்றனர்.ஊதிய முரண்பாடுகளைக் களைவதில், இத்தனை ஆண்டுகளில் எந்தவிதமான முன்னேற்றமும் இல்லை. நியாயமான பதில் கிடைக்கும் வரை நிச்சயம் உண்ணாவிரதப் போராட்டம் தொடரும். எங்களின் சில கருத்துக்களைத் தெரிவித்துள்ளோம். பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.

இதையும் படிங்க: சம வேலைக்கு சம ஊதியம்; போராட்டக் குழுவினருடன் அரசு பேச்சுவார்த்தை!

கூடுதல் அவகாசம் தருவதில் பிரச்சினை இல்லை. இதே கோரிக்கைக்காகப் பல ஆண்டுகளாகப் போராடி வருகிறோம். முதலமைச்சர் கவனத்திற்கு எடுத்துச் செல்ல தெரிவித்துள்ளோம். ஏற்கனவே 14 ஆண்டுகள் ஆகிவிட்டது, இன்னும் கால அவகாசம் கேட்கின்றனர். ஏற்கனவே போராட்டத்தின் போது மூவர் குழு அமைக்கப்பட்டது. மூன்று மாதங்களில் பதில் அளிக்கப்படும் என்றனர். ஒன்பது மாதங்களாகியும் எந்தவித முன்னேற்றமும் இல்லை.

எந்த தேதியில் கோரிக்கைகள் அமல்படுத்தப்படும் என்று முதலமைச்சர் தெரிவிக்க வேண்டும். முதல்வர் தேதியை அறிவித்தால் போராட்டத்தைக் கைவிடுவோம். எங்கள் நியாயமான கொள்கையை அரசு அதிகாரிகள் அனைத்து விதத்திலும் ஏற்றுக் கொண்டனர். ஆனால், அந்த கோரிக்கைகள் நிறைவேற்றப்படுவதில் காலதாமதம் ஆகிறது. இன்றே கோரிக்கைகளை நிறைவேற்றச் சொல்லிக் கேட்கவில்லை. 2024ஆம் ஆண்டு தொடக்கத்திலிருந்ததாவது கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும் எனக் கோரிக்கை வைத்துள்ளோம் எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: காவிரி விவகாரம்; அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும்- ஈபிஎஸ் வலியுறுத்தல்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.