ETV Bharat / state

வடபழனியில் மாநகர பேருந்து மோதி இளம்பெண் உயிரிழப்பு - மாநகர பேருந்து மோதி விபத்து

சென்னை: வடபழனியில் மாநகர பேருந்து மோதி மீண்டும் பெண் ஒருவர் பலியான சம்பவம் அப்பகுதி மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

பேருந்து மோதியதில் பலியான கலைச்செல்வி
author img

By

Published : Sep 25, 2019, 7:49 PM IST

சென்னை மதுரவாயில் பகுதியைச் சேர்ந்தவர் கலைச்செல்வி. பூ வியாபாரம் செய்து வரும் இவர் வழக்கம் போல் வியாபாரத்திற்காக கோயம்பேடு மார்கெட்டில் பூக்களை வாங்கி கொண்டு இருசக்கர வாகனத்தில் வீட்டிற்குச் சென்று கொண்டிருந்தார். வடபழனி துரைசாமி சாலையில் சென்று கொண்டிருந்த போது அந்த வழியே வந்த மாநகர பேருந்து, கலைச்செல்வி சென்ற இருசக்கர வாகனத்தின் மீது மோதியது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

கலைச்செல்வி வந்த இருசக்கர வாகனம்
கலைச்செல்வி வந்த இருசக்கர வாகனம்

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் உடலை மீட்டு உடற்கூராய்விற்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் இதுதொடர்பாக வழக்குப் பதிவு செய்து பேருந்து ஓட்டுநரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

பேருந்து மோதியதில் பலியான கலைச்செல்வி

இதையும் படிங்க:மகாராஷ்டிராவில் கட்டடம் இடிந்து விழுந்து விபத்து!

சென்னை மதுரவாயில் பகுதியைச் சேர்ந்தவர் கலைச்செல்வி. பூ வியாபாரம் செய்து வரும் இவர் வழக்கம் போல் வியாபாரத்திற்காக கோயம்பேடு மார்கெட்டில் பூக்களை வாங்கி கொண்டு இருசக்கர வாகனத்தில் வீட்டிற்குச் சென்று கொண்டிருந்தார். வடபழனி துரைசாமி சாலையில் சென்று கொண்டிருந்த போது அந்த வழியே வந்த மாநகர பேருந்து, கலைச்செல்வி சென்ற இருசக்கர வாகனத்தின் மீது மோதியது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

கலைச்செல்வி வந்த இருசக்கர வாகனம்
கலைச்செல்வி வந்த இருசக்கர வாகனம்

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் உடலை மீட்டு உடற்கூராய்விற்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் இதுதொடர்பாக வழக்குப் பதிவு செய்து பேருந்து ஓட்டுநரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

பேருந்து மோதியதில் பலியான கலைச்செல்வி

இதையும் படிங்க:மகாராஷ்டிராவில் கட்டடம் இடிந்து விழுந்து விபத்து!

Intro:Body:*சென்னை வடபழனியில் மாநகர பேருந்து மோதி மீண்டும் ஒரு பெண் பலி*

சென்னை மதுரவாயில் பகுதியை சேர்ந்தவர் பூ வியாபாரம் செய்யும் கலைச்செல்வி. இவர் வழக்கம் போல் பூ வியாபாரத்திற்காக பூக்கள் வாங்க கோயம்பேடு மார்கெட்டில் தனது இருசக்கர வாகனத்தில் வந்துள்ளார். பின்னர் வீடு திரும்பிக் கொண்டிருந்த கலைச்செல்வி தனது வாகனத்தில் வடபழனி துரைசாமி சாலையில் சென்று கொண்டிருந்த போது அந்த வழியாக வந்த தடமென் 12b பேருந்து தீடீரென மோதியுள்ளது. இதில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக கலைச்செல்வி உயிரிழந்தார்.

விபத்தை ஏற்படுத்திய
மாநகரப் பேருந்து மற்றும் ஓட்டுனரையும் பிடித்து பொதுமக்கள் கிண்டி போக்குவரத்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். விபத்து குறித்து கிண்டி போக்குவரத்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

வடபழனி துரைசாமி சாலையில் திடீரென்று போக்குவரத்து மாற்றம் செய்து சாலையில் பேருந்து திருப்பி விட்டதன் காரணமாக அதிக அளவில் அப்பகுதியில் விபத்து ஏற்படுவதாக மக்கள் தெரிவிக்கின்றனர். மேலும் வடபழனி பகுதியில் அடுத்தடுத்து மாநகரப் பேருந்து மோதி இருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.