சென்னை மதுரவாயில் பகுதியைச் சேர்ந்தவர் கலைச்செல்வி. பூ வியாபாரம் செய்து வரும் இவர் வழக்கம் போல் வியாபாரத்திற்காக கோயம்பேடு மார்கெட்டில் பூக்களை வாங்கி கொண்டு இருசக்கர வாகனத்தில் வீட்டிற்குச் சென்று கொண்டிருந்தார். வடபழனி துரைசாமி சாலையில் சென்று கொண்டிருந்த போது அந்த வழியே வந்த மாநகர பேருந்து, கலைச்செல்வி சென்ற இருசக்கர வாகனத்தின் மீது மோதியது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் உடலை மீட்டு உடற்கூராய்விற்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் இதுதொடர்பாக வழக்குப் பதிவு செய்து பேருந்து ஓட்டுநரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதையும் படிங்க:மகாராஷ்டிராவில் கட்டடம் இடிந்து விழுந்து விபத்து!