மறைந்த ஒய்.ஜி.பார்த்தசாரதியின் மனைவியும், ஒய்.ஜி.மகேந்திரனின் தாயாரும் ஒய்.ஜி.ராஜலட்சுமி பார்த்தசாரதி (93) ஆவார். பத்மா சேஷாத்ரி கல்வி குழுமத்தை உருவாக்கி அதன் தாளாளராக இருந்தார்.
கிரீம்ஸ் சாலையில் உள்ள, தனியார் மருத்துவமனையில் வயது மூப்பால் சிகிச்சை பெற்று வந்த இவர் மாரடைப்பால் காலமானார். இவரது மறைவுக்கு, முதலமைச்சர், துணை முதலமைச்சர், கல்வியாளர்கள், அரசியல் கட்சி தலைவர்கள் நாடக, திரையுலக பிரமுகர்கள், பொதுமக்கள் என பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.