ETV Bharat / state

'டிடிவி தினகரன் ஒரு குழப்பவாதி..!' - எம்எல்ஏ கலைச்செல்வன் விமர்சனம்

சென்னை: 'நடந்து முடிந்த மக்களவைத் தேர்தல் மற்றும் இடைத்தேர்தலில் டிடிவி தினகரனுக்கு மக்கள் சரியான பாடம் புகட்டிவிட்டனர்' என்று அமமுக கட்சியில் இருந்து வெளியேறிய எம்எல்ஏ கலைச்செல்வன் தெரிவித்தார்.

author img

By

Published : Jul 3, 2019, 6:08 PM IST

Updated : Jul 3, 2019, 6:18 PM IST

கலைச்செல்வன்

டிடிவி தினகரனின் ஆதரவாளராக இருந்த விருதாச்சலம் எம்எல்ஏ கலைச்செல்வன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சென்னை தலைமைச்செயலகத்தில் சந்தித்து பேசினார். முன்னதாக அறந்தாங்கி எம்எல்ஏ ரத்தினசபாபதி நேற்று முதலமைச்சரை சந்தித்துள்ள நிலையில், அதன்தொடர்ச்சியாக இன்று கலைச்செல்வன் சந்தித்திருப்பது டிடிவி தினகரன் தரப்பில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

அறந்தாங்கி ரத்தின சபாபதி, விருதாச்சலம் கலைச்செல்வன், கள்ளக்குறிச்சி பிரபு ஆகிய மூன்று பேரும் கடந்த ஒரு வருடங்களாக டிடிவி தினகரன் பக்கம் ஆதரவு தெரிவித்து வந்தனர். முதலமைச்சரை சந்தித்தாலும் அவர்கள் டிடிவி தினகரன் பக்கம்தான் இருந்தனர். மக்களவைத் தேர்தலில் அமமுக பெற்ற தோல்விக்கு பிறகு கலைச்செல்வன் டிடிவி தினகரனை விட்டு ஒதுங்கியிருந்ததாக கூறப்படுகிறது.

தற்போது, கலைச்செல்வன் முதலமைச்சர் பழனிசாமியை சந்தித்த பிறகு செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, "அதிமுக தலைமை மீது யாருக்கும் கோபமில்லை. எங்களுக்குள் இருந்தது அண்ணன் தம்பி பிரச்னைதான். மாவட்ட செயலரின் கருத்து வேறுபாடுகளால் பிரிந்திருந்தோம். நாங்கள் மீண்டும் இருந்த இடத்திற்கே திரும்பி இருக்கிறோம். அதிமுகவை வழி நடத்திவரும் எடப்பாடி பழனிசாமி ஆட்சியை கலைக்க ஒருபோதும் நினைத்ததில்லை. முதலமைச்சர் சொல்வதை கேட்டு செயல்படுவோம்" என்று, தெரிவித்தார்.

மேலும் அவர், "முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து தங்களது தொகுதி பிரச்னையை பற்றி கோரிக்கை வைத்தேன். நடந்து முடிந்த மக்களவைத் தேர்தல், இடைத்தேர்தலில் டிடிவி தினகரனுக்கு மக்கள் சரியான பாடம் புகட்டிவிட்டனர். டிடிவி தினகரன் எந்த மனநிலையில் இருக்கிறார் என்பது தெரியவில்லை. புரிந்து கொண்டு ஒதுங்கி கொள்ள வேண்டும். அதிமுக ஆட்சியை கலைக்க வேண்டும் என்று டிடிவி தினகரன் கூறியதை என்னால் ஏற்க முடியவில்லை" என்றார்.

டிடிவி தினகரனின் ஆதரவாளராக இருந்த விருதாச்சலம் எம்எல்ஏ கலைச்செல்வன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சென்னை தலைமைச்செயலகத்தில் சந்தித்து பேசினார். முன்னதாக அறந்தாங்கி எம்எல்ஏ ரத்தினசபாபதி நேற்று முதலமைச்சரை சந்தித்துள்ள நிலையில், அதன்தொடர்ச்சியாக இன்று கலைச்செல்வன் சந்தித்திருப்பது டிடிவி தினகரன் தரப்பில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

அறந்தாங்கி ரத்தின சபாபதி, விருதாச்சலம் கலைச்செல்வன், கள்ளக்குறிச்சி பிரபு ஆகிய மூன்று பேரும் கடந்த ஒரு வருடங்களாக டிடிவி தினகரன் பக்கம் ஆதரவு தெரிவித்து வந்தனர். முதலமைச்சரை சந்தித்தாலும் அவர்கள் டிடிவி தினகரன் பக்கம்தான் இருந்தனர். மக்களவைத் தேர்தலில் அமமுக பெற்ற தோல்விக்கு பிறகு கலைச்செல்வன் டிடிவி தினகரனை விட்டு ஒதுங்கியிருந்ததாக கூறப்படுகிறது.

தற்போது, கலைச்செல்வன் முதலமைச்சர் பழனிசாமியை சந்தித்த பிறகு செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, "அதிமுக தலைமை மீது யாருக்கும் கோபமில்லை. எங்களுக்குள் இருந்தது அண்ணன் தம்பி பிரச்னைதான். மாவட்ட செயலரின் கருத்து வேறுபாடுகளால் பிரிந்திருந்தோம். நாங்கள் மீண்டும் இருந்த இடத்திற்கே திரும்பி இருக்கிறோம். அதிமுகவை வழி நடத்திவரும் எடப்பாடி பழனிசாமி ஆட்சியை கலைக்க ஒருபோதும் நினைத்ததில்லை. முதலமைச்சர் சொல்வதை கேட்டு செயல்படுவோம்" என்று, தெரிவித்தார்.

மேலும் அவர், "முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து தங்களது தொகுதி பிரச்னையை பற்றி கோரிக்கை வைத்தேன். நடந்து முடிந்த மக்களவைத் தேர்தல், இடைத்தேர்தலில் டிடிவி தினகரனுக்கு மக்கள் சரியான பாடம் புகட்டிவிட்டனர். டிடிவி தினகரன் எந்த மனநிலையில் இருக்கிறார் என்பது தெரியவில்லை. புரிந்து கொண்டு ஒதுங்கி கொள்ள வேண்டும். அதிமுக ஆட்சியை கலைக்க வேண்டும் என்று டிடிவி தினகரன் கூறியதை என்னால் ஏற்க முடியவில்லை" என்றார்.

Intro:Body:அதிமுக அதிருப்தி எம்எல்ஏ விருதாச்சலம் கலைச்செல்வன் தலைமைச் செயலகத்தில் இன்று முதல்வரை சந்தித்தார். பின்னர் கலைச்செல்வன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி:

அதிமுகவை வழி நடத்தி வரும் தமிழக நிரந்தர முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்வழி அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் செயல்படுகிறார்கள்.

மாவட்ட செயலரின் கருத்து வேறுபாடுகளால் பிரிந்திருந்தோம்.

நாங்கள் மீண்டும் இருந்த இடத்திற்கே திரும்பி இருக்கிறோம்.

அதிமுக ஆட்சியை கலைத்து விடவேண்டும் என அடிக்கடி தினகரன் கூறியதால் எதிர்ப்பு தெரிவித்து திரும்பியுள்ளேன்.

நாடாளுமன்றத் தேர்தலில் மக்கள் சரியான பாடம் புகட்டி இருக்கிறார்கள்.

முதலமைச்சரை சந்தித்து அதிமுகவுக்கு ஆதரவாக செயல்படுவேன் எனக் கூறி எனது தொகுதியின் குறைகள் குறித்து மனு கொடுத்தேன்.

எதேச்சதிகார போக்குடன் செயல்படுகிறார் டிடிவி தினகரன். இதற்குப் பிறகாவது அவர் ஒதுங்கிக் கொள்ள வேண்டும், என்றார்.

தொடர்ந்து அறந்தாங்கி ரத்தினசபாபதி பேசுகையில்,
உண்மையான அதிமுகவினர் திமுகவுக்கு செல்ல மாட்டார்கள்.

டிடிவி தினகரன் அதிமுக அரசைக் கலைக்க வேண்டும் என குறிப்பிட்டபோது நாங்கள் உள்ளிருந்தே எதிர்தோம் என்றார்.Conclusion:
Last Updated : Jul 3, 2019, 6:18 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.