ETV Bharat / state

புதிய மின்சாரத் திருத்தச் சட்டத்தை திரும்பப் பெறுக - திமுக எம்பிக்கள் கையெழுத்துடன் ஸ்டாலின் பிரதமருக்கு கடிதம்

author img

By

Published : May 28, 2020, 5:38 PM IST

சென்னை : புதிய மின்சாரத் திருத்தச் சட்டம் - 2020ஐ திரும்பப் பெற வலியுறுத்தி பிரதமர் நரேந்திர மோடிக்கும், மத்திய அரசின் கூட்டணியில் அல்லாத மாநிலங்களின் முதலமைச்சர்களுக்கும் திமுக தலைவர் மு. க. ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

ஸ்டாலின் நரேந்திர மோடி
ஸ்டாலின் நரேந்திர மோடி

புதிய மின்சாரத் திருத்தச் சட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தி திமுக தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார். திமுகவைச் சேர்ந்த மக்களவை, மாநிலங்களவை உறுப்பினர்கள் அனைவரும் இக்கடிதத்தில் கையெழுத்திட்டுள்ளனர்.

மேலும், மாநில உரிமைகளையும், கூட்டாட்சித் தத்துவத்தையும் பாதுகாத்திடும் திமுகவின் முயற்சிக்கு துணை நின்றிடக் கோரி மத்திய பாஜக கூட்டணியில் இல்லாத கேரளா, ஆந்திரப் பிரதேசம், தெலங்கானா, ஒடிசா, மேற்கு வங்கம், ஜார்கண்ட், சத்தீஸ்கர், மகாராஷ்டிரா, ராஜஸ்தான், பஞ்சாப், புதுச்சேரி, டெல்லி ஆகிய 12 மாநில முதல்வர்களுக்கும் அவர் கடிதம் எழுதியுள்ளார்.

இதுகுறித்து கடிதத்தில், ”நமது விவசாயிகள் நாட்டின் முதுகெலும்பு மட்டுமல்ல; இன்றைக்கு நமது நாடு சிறந்து விளங்குவதற்கு அவர்கள் இன்றியமையாத பங்களிப்புகளைச் செய்துள்ளார்கள். ஆனால், அவர்கள் கடந்து வந்த பாதை இலகுவானதாக இல்லை. பல ஆண்டுகால போராட்டங்களுக்குப் பிறகே அவர்களது உரிமைகள் நிலைநாட்டப்பட்டன.

அத்தைகைய போராட்டங்களில், மிக முக்கியமானது, தமிழ்நாட்டில் ’மின் கட்டணக் குறைப்பு’, ’இலவச மின்சாரம்’ ஆகியவற்றை வலியுறுத்தி அப்போதைய விவசாயிகள் சங்கத் தலைவர் மறைந்த திரு. நாராயணசாமி அவர்களின் தலைமையில் கோயமுத்தூரில் நடைபெற்ற மாபெரும் போராட்டமாகும். கடன் மற்றும் மோசமான விளைச்சல் ஆகிய சுமைகளால், எந்தவிதமான நிவாரணமும் கிடைக்காத விவசாயிகள் பெருந்திரளாகக் கலந்து கொண்டார்கள்.

விவசாயிகளின் இந்தப் போராட்டத்தைத் தொடர்ந்து, 1989இல் நடைபெற்ற பொதுத் தேர்தலுக்காக திமுக சார்பில் வெளியிடப்பட்ட தேர்தல் அறிக்கையில், விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்கப்படும் என கலைஞர் கருணாநிதி வாக்குறுதி அளித்தார். இந்தியாவிலேயே முதல் முறையாக அனைத்து விவசாயிகளுக்கும் இலவச மின்சாரம் வழங்கும் திட்டத்தை அறிவித்து கலைஞர் தான் செயல்படுத்தினார்.

அத்திட்டம் 1990லிருந்து இன்றுவரை செயல்பட்டு வருகிறது. இந்தத் திட்டம்தான் தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சியின் முக்கியத் தூணாக விளங்கி, உணவுப் பற்றாக்குறையை போக்கியதுடன் இலட்சக்கணக்கான விவசாயிகளைப் பாதுகாத்தது.

இத்தகைய திட்டத்தை முடக்கும்விதமாக, இலட்சக்கணக்கான விவசாயிகளின் வாழ்வாதாரத்தை கடுமையாக பாதிக்கும் விதமாகவும் மின்சார திருத்தச் சட்டம் 2020 உள்ளது. மேலும், கரோனா தொற்றால் பொருளாதார பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில், இது பொறுப்பற்ற முடிவு மட்டுமில்லாமல், திறம்பட கையாள வேண்டிய கரோனா பேரிடரிலிருந்து கவனத்தை திசைதிருப்புவதும் ஆகும்.

மேலும், நமது அரசியல் சட்டப்படி மின்சாரம் பொதுப்பட்டியலில் இருக்கிறது. மின் நுகர்வு மீதான வரி, மின் விற்பனை மீதான வரி விதிக்கும் அதிகாரம், மாநிலங்களுக்கான அதிகாரப் பட்டியலில் உள்ளது. இந்நிலையில் இந்த புதிய மின்சாரச் சட்டத் திருத்தம் 2020 மாநிலங்களின் சட்டமியற்றும் அதிகாரத்தையும், மாநிலங்களுக்கு பொதுப்பட்டியலில் உள்ள அதிகாரத்தையும் பறிப்பதாக உள்ளது.

மேலும் இதில், மாநில மின்சார ஒழுங்குமுறை ஆணையங்களை மத்திய அரசின் நேரடிக் கட்டுப்பாட்டில் கொண்டு வருவது, ஐந்து பேர் கொண்ட தேர்வுக் குழுவில் மாநிலங்களின் தலைமைச் செயலாளர்களில் இருவர் மட்டுமே உறுப்பினர்களாக இருப்பது என, மாநில உரிமைகளைப் பறிக்கும் ஏராளமான விஷயங்கள் உள்ளன.

மீண்டும் ஐந்தாண்டுகள் ஆட்சி செய்ய மத்திய பாஜக அரசுக்கு மக்கள் அளித்த வாக்குகளை, மாநிலங்களின் அதிகாரங்களை பறிப்பதற்கோ, அரசியல் சட்டத்தின் கூட்டாட்சித் தத்துவத்தை ஒதுக்கித் தள்ளுவதற்கோ பயன்படுத்துவது உகந்தது அல்ல.

எனவே, திமுக தலைவர் என்கின்ற முறையில், மாநிலங்கள் சட்டமியற்றும் அதிகாரத்தை பறிக்கும் ’புதிய மின்சார திருத்தச் சட்டம் - 2020’ஐ திரும்ப பெற வேண்டும் என்றும், விவசாயிகளுக்கு வழங்கப்படும் இலவச மின்சாரத்தை ரத்து செய்யும் திட்டத்தையும் கைவிட வேண்டும் என்றும் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க : பத்திரத் திட்டத்தை நிறுத்திய ரிசர்வ் வங்கி - ப. சிதம்பரம் காட்டம்

புதிய மின்சாரத் திருத்தச் சட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தி திமுக தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார். திமுகவைச் சேர்ந்த மக்களவை, மாநிலங்களவை உறுப்பினர்கள் அனைவரும் இக்கடிதத்தில் கையெழுத்திட்டுள்ளனர்.

மேலும், மாநில உரிமைகளையும், கூட்டாட்சித் தத்துவத்தையும் பாதுகாத்திடும் திமுகவின் முயற்சிக்கு துணை நின்றிடக் கோரி மத்திய பாஜக கூட்டணியில் இல்லாத கேரளா, ஆந்திரப் பிரதேசம், தெலங்கானா, ஒடிசா, மேற்கு வங்கம், ஜார்கண்ட், சத்தீஸ்கர், மகாராஷ்டிரா, ராஜஸ்தான், பஞ்சாப், புதுச்சேரி, டெல்லி ஆகிய 12 மாநில முதல்வர்களுக்கும் அவர் கடிதம் எழுதியுள்ளார்.

இதுகுறித்து கடிதத்தில், ”நமது விவசாயிகள் நாட்டின் முதுகெலும்பு மட்டுமல்ல; இன்றைக்கு நமது நாடு சிறந்து விளங்குவதற்கு அவர்கள் இன்றியமையாத பங்களிப்புகளைச் செய்துள்ளார்கள். ஆனால், அவர்கள் கடந்து வந்த பாதை இலகுவானதாக இல்லை. பல ஆண்டுகால போராட்டங்களுக்குப் பிறகே அவர்களது உரிமைகள் நிலைநாட்டப்பட்டன.

அத்தைகைய போராட்டங்களில், மிக முக்கியமானது, தமிழ்நாட்டில் ’மின் கட்டணக் குறைப்பு’, ’இலவச மின்சாரம்’ ஆகியவற்றை வலியுறுத்தி அப்போதைய விவசாயிகள் சங்கத் தலைவர் மறைந்த திரு. நாராயணசாமி அவர்களின் தலைமையில் கோயமுத்தூரில் நடைபெற்ற மாபெரும் போராட்டமாகும். கடன் மற்றும் மோசமான விளைச்சல் ஆகிய சுமைகளால், எந்தவிதமான நிவாரணமும் கிடைக்காத விவசாயிகள் பெருந்திரளாகக் கலந்து கொண்டார்கள்.

விவசாயிகளின் இந்தப் போராட்டத்தைத் தொடர்ந்து, 1989இல் நடைபெற்ற பொதுத் தேர்தலுக்காக திமுக சார்பில் வெளியிடப்பட்ட தேர்தல் அறிக்கையில், விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்கப்படும் என கலைஞர் கருணாநிதி வாக்குறுதி அளித்தார். இந்தியாவிலேயே முதல் முறையாக அனைத்து விவசாயிகளுக்கும் இலவச மின்சாரம் வழங்கும் திட்டத்தை அறிவித்து கலைஞர் தான் செயல்படுத்தினார்.

அத்திட்டம் 1990லிருந்து இன்றுவரை செயல்பட்டு வருகிறது. இந்தத் திட்டம்தான் தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சியின் முக்கியத் தூணாக விளங்கி, உணவுப் பற்றாக்குறையை போக்கியதுடன் இலட்சக்கணக்கான விவசாயிகளைப் பாதுகாத்தது.

இத்தகைய திட்டத்தை முடக்கும்விதமாக, இலட்சக்கணக்கான விவசாயிகளின் வாழ்வாதாரத்தை கடுமையாக பாதிக்கும் விதமாகவும் மின்சார திருத்தச் சட்டம் 2020 உள்ளது. மேலும், கரோனா தொற்றால் பொருளாதார பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில், இது பொறுப்பற்ற முடிவு மட்டுமில்லாமல், திறம்பட கையாள வேண்டிய கரோனா பேரிடரிலிருந்து கவனத்தை திசைதிருப்புவதும் ஆகும்.

மேலும், நமது அரசியல் சட்டப்படி மின்சாரம் பொதுப்பட்டியலில் இருக்கிறது. மின் நுகர்வு மீதான வரி, மின் விற்பனை மீதான வரி விதிக்கும் அதிகாரம், மாநிலங்களுக்கான அதிகாரப் பட்டியலில் உள்ளது. இந்நிலையில் இந்த புதிய மின்சாரச் சட்டத் திருத்தம் 2020 மாநிலங்களின் சட்டமியற்றும் அதிகாரத்தையும், மாநிலங்களுக்கு பொதுப்பட்டியலில் உள்ள அதிகாரத்தையும் பறிப்பதாக உள்ளது.

மேலும் இதில், மாநில மின்சார ஒழுங்குமுறை ஆணையங்களை மத்திய அரசின் நேரடிக் கட்டுப்பாட்டில் கொண்டு வருவது, ஐந்து பேர் கொண்ட தேர்வுக் குழுவில் மாநிலங்களின் தலைமைச் செயலாளர்களில் இருவர் மட்டுமே உறுப்பினர்களாக இருப்பது என, மாநில உரிமைகளைப் பறிக்கும் ஏராளமான விஷயங்கள் உள்ளன.

மீண்டும் ஐந்தாண்டுகள் ஆட்சி செய்ய மத்திய பாஜக அரசுக்கு மக்கள் அளித்த வாக்குகளை, மாநிலங்களின் அதிகாரங்களை பறிப்பதற்கோ, அரசியல் சட்டத்தின் கூட்டாட்சித் தத்துவத்தை ஒதுக்கித் தள்ளுவதற்கோ பயன்படுத்துவது உகந்தது அல்ல.

எனவே, திமுக தலைவர் என்கின்ற முறையில், மாநிலங்கள் சட்டமியற்றும் அதிகாரத்தை பறிக்கும் ’புதிய மின்சார திருத்தச் சட்டம் - 2020’ஐ திரும்ப பெற வேண்டும் என்றும், விவசாயிகளுக்கு வழங்கப்படும் இலவச மின்சாரத்தை ரத்து செய்யும் திட்டத்தையும் கைவிட வேண்டும் என்றும் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க : பத்திரத் திட்டத்தை நிறுத்திய ரிசர்வ் வங்கி - ப. சிதம்பரம் காட்டம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.