ETV Bharat / state

பேருந்துகளில் கட்டணம் கூடுதல் வசூலித்தால் நடவடிக்கை - அமைச்சர் சிவசங்கர் எச்சரிக்கை

author img

By

Published : Oct 22, 2022, 9:25 AM IST

ஆம்னி பேருந்துகளில் கட்டணம் கூடுதலாக வசூலிக்கப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Etv Bharat
Etv Bharat

தீபாவளி பண்டிகையையொட்டி, கோயம்பேடு பேருந்து நிலையத்தை போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் ஆய்வு செய்தார். அதன்பின் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அமைச்சர் சிவசங்கர், ''வழக்கமாக இயங்குகின்ற 2,100 பேருந்துகளை தவிர்த்து நாளை 1,586 சிறப்பு பேருந்துகளும், நாளை மறுநாள் 1,195 சிறப்பு பேருந்துகளும் இயக்கப்பட இருக்கிறது. ஒட்டுமொத்தமாக சென்னையிலிருந்து 10,518 பேருந்துகள் இயக்கப்பட இருக்கின்றன.

கடந்தாண்டு தீபாவளியில் முன்பதிவு செய்து பயணம் செய்தவர்கள் எண்ணிக்கை 87 ஆயிரமாக உள்ளது. இந்தாண்டு 1 லட்சத்து 4 ஆயிரம் பேர் முன்பதிவு செய்துள்ளனர். அதேபோல, பயணம் செய்பவர்கள் எண்ணிக்கையும் கூடுதலாகும் என்ற எண்ணத்தின் அடிப்படையில் கூடுதலான சிறப்பு பேருந்துகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

இன்னும் தேவை என்றால் பேருந்து வசதிகள் தயாராக உள்ளன. அதேபோல், சென்னை மாநகரத்திற்குள்ளாக பல்வேறு சிறப்பு பேருந்து நிலையங்களுக்கு மக்கள் செல்வதற்கு வசதியாக 150 பேருந்துகள் அந்த பகுதிகளில் மட்டும் இயக்கப்படுகிறன. தனியார் பேருந்துகளில் அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதாக பெரிய அளவில் புகார்கள் இல்லை. இருந்தாலும் நாங்கள் ஆய்வு செய்து வருகிறோம். போக்குவரத்துதுறை ஆணையர் மற்றும் அலுவலர்களும் அதை ஆய்வு செய்து வருகிறார்கள். தமிழ்நாடு முழுவதும் பல்வேறு குழுக்கள் ஆய்வு செய்கிற பணியில் இருக்கிறார்கள். ஆம்னி பேருந்துகளில் கட்டணம் கூடுதலாக வசூலிக்கப்பட்டால் நடவடிக்கை எடுக்கப்படும்'' என்றார்.

இதையும் படிங்க: தீபாவளி: சென்னையிலிருந்து 16,888 சிறப்புப்பேருந்துகள் இயக்கம்

தீபாவளி பண்டிகையையொட்டி, கோயம்பேடு பேருந்து நிலையத்தை போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் ஆய்வு செய்தார். அதன்பின் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அமைச்சர் சிவசங்கர், ''வழக்கமாக இயங்குகின்ற 2,100 பேருந்துகளை தவிர்த்து நாளை 1,586 சிறப்பு பேருந்துகளும், நாளை மறுநாள் 1,195 சிறப்பு பேருந்துகளும் இயக்கப்பட இருக்கிறது. ஒட்டுமொத்தமாக சென்னையிலிருந்து 10,518 பேருந்துகள் இயக்கப்பட இருக்கின்றன.

கடந்தாண்டு தீபாவளியில் முன்பதிவு செய்து பயணம் செய்தவர்கள் எண்ணிக்கை 87 ஆயிரமாக உள்ளது. இந்தாண்டு 1 லட்சத்து 4 ஆயிரம் பேர் முன்பதிவு செய்துள்ளனர். அதேபோல, பயணம் செய்பவர்கள் எண்ணிக்கையும் கூடுதலாகும் என்ற எண்ணத்தின் அடிப்படையில் கூடுதலான சிறப்பு பேருந்துகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

இன்னும் தேவை என்றால் பேருந்து வசதிகள் தயாராக உள்ளன. அதேபோல், சென்னை மாநகரத்திற்குள்ளாக பல்வேறு சிறப்பு பேருந்து நிலையங்களுக்கு மக்கள் செல்வதற்கு வசதியாக 150 பேருந்துகள் அந்த பகுதிகளில் மட்டும் இயக்கப்படுகிறன. தனியார் பேருந்துகளில் அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதாக பெரிய அளவில் புகார்கள் இல்லை. இருந்தாலும் நாங்கள் ஆய்வு செய்து வருகிறோம். போக்குவரத்துதுறை ஆணையர் மற்றும் அலுவலர்களும் அதை ஆய்வு செய்து வருகிறார்கள். தமிழ்நாடு முழுவதும் பல்வேறு குழுக்கள் ஆய்வு செய்கிற பணியில் இருக்கிறார்கள். ஆம்னி பேருந்துகளில் கட்டணம் கூடுதலாக வசூலிக்கப்பட்டால் நடவடிக்கை எடுக்கப்படும்'' என்றார்.

இதையும் படிங்க: தீபாவளி: சென்னையிலிருந்து 16,888 சிறப்புப்பேருந்துகள் இயக்கம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.