ETV Bharat / state

"முதல் பேருந்தை தாமதமாக இயக்கினால் ஓட்டுநர், நடத்துநர் மீது நடவடிக்கை" -அமைச்சர் வார்னிங்!

author img

By

Published : Mar 27, 2023, 4:40 PM IST

போக்குவரத்துக் கழக பணிமனைகளில் அதிகாலையில் இயக்கக் கூடிய முதல் பேருந்தினை தாமதமாக இயக்கினால் ஓட்டுநர் மற்றும் நடத்துநர் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.

Minister
போக்குவரத்து

சென்னை: சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று(மார்ச்.27) தமிழ்நாடு போக்குவரத்துத் துறை சார்பில், அரசு போக்குவரத்துக் கழக விருப்ப ஓய்வு பெற்றவர்கள் மற்றும் இறந்த பணியாளர்களுக்கான ஓய்வு கால பணப்பலன்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் கலந்து கொண்டு, 23 பேருக்கு காசோலைகளை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் போக்குவரத்துத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் கோபால், அனைத்து போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர்கள் உள்ளிட்டப் பலர் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் சிவசங்கர், "தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களில் கடந்த 2020ஆம் ஆண்டு மே மாதம் முதல் 2021ஆம் ஆண்டு மார்ச் மாதம் வரை பணிபுரிந்து விருப்ப ஓய்வுபெற்ற மற்றும் இறந்த பணியாளர்கள் என 1,242 நபர்களுக்கு வருங்கால வைப்பு நிதி பணிக்கொடை, விடுப்பு ஒப்படைப்பு தொகை மற்றும் ஓய்வூதிய ஒப்படைப்பு தொகை உள்ளிட்ட பணப்பலன்கள் 242.67 கோடி ரூபாயில் வழங்கப்பட்டுள்ளது.

அதேபோல், தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களில் கடந்த 2020ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் 2022ஆம் ஆண்டு மார்ச் மாதம் வரை பணிபுரிந்து விருப்ப ஓய்வுபெற்ற மற்றும் இறந்த பணியாளர்கள் என மொத்தம் 1,626 நபர்களுக்கு வருங்கால வைப்பு நிதி, பணிக்கொடை, விடுப்பு ஒப்படைப்பு தொகை, ஓய்வூதிய ஒப்படைப்புத் தொகை உள்ளிட்ட பணப் பலன்களான 308.45 கோடி ரூபாய் வழங்கப்பட்டு வருகிறது.

அதன் ஒரு பகுதியாக தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களைச் சார்ந்த 23 ஓய்வுபெற்ற மற்றும் இறந்த பணியாளர்களின் வருங்கால வைப்பு நிதி, பணிக்கொடை, விடுப்பு ஒப்படைப்பு தொகை மற்றும் ஓய்வூதிய ஒப்படைப்பு தொகை உள்ளிட்ட பணப்பலன்களுக்குரிய காசோலைகளை தற்போது வழங்கி உள்ளோம். அதேபோல் மீதமுள்ள 1,603 பணியாளர்களுக்கும் அந்த போக்குவரத்துக் கழக நிர்வாகத்தின் வாயிலாக காசோலைகள் வழங்கப்படும்.

தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின், கடந்த கால ஆட்சியாளர்கள் விட்டுச்சென்ற கடன்களையும், தேர்தல் வாக்குறுதிகளையும் பூர்த்தி செய்து கொண்டே மக்களின் தேவைகளையும் பூர்த்தி செய்து வருகிறார். அதிமுக ஆட்சிக்காலத்தில் போக்குவரத்து ஊழியர்களின் வயது வரம்பை 58-லிருந்து 60ஆக உயர்த்திவிட்டனர். ஆனால், ஓட்டுநர்கள் முழு உடல் உழைப்பை போடும் நிலையும், நடத்துநர்கள் பணி முடிவடையும் வரை நின்று கொண்டே இருக்கும் சூழலும் இருப்பதினாலும், அவர்களுக்கு நீரிழிவு நோய் மற்றும் கண்பார்வை குறைபாடு ஏற்படுகின்றது.

சென்னை மாநகரப் பணிமனைகளில் நீண்ட நாள் விடுப்பு எடுத்தவர்களைச் சந்தித்து பணிக்கு திரும்ப வலியுறுத்தியபோது, 58 வயதோடு தங்களுக்கு ஓய்வு வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர். இதுதொடர்பாக விரைவில் முதலமைச்சரிடம் தெரிவித்து நடவடிக்கை எடுக்கப்படும்.

பணிமனைகளில் அதிகாலை இயக்கக்கூடிய முதல் பேருந்துகள் தாமதமாக இயக்கப்படுவதாகப் புகார்கள் அளிக்கப்பட்டால், ஓட்டுநர் மற்றும் நடத்துநர் மீது துறை ரீதியாக தக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்" என்று தெரிவித்தார்.

இதையும் படிங்க: குரூப்-4, சர்வேயர் தேர்வில் முறைகேடு புகார் - அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் அளித்த விளக்கம் என்ன?

சென்னை: சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று(மார்ச்.27) தமிழ்நாடு போக்குவரத்துத் துறை சார்பில், அரசு போக்குவரத்துக் கழக விருப்ப ஓய்வு பெற்றவர்கள் மற்றும் இறந்த பணியாளர்களுக்கான ஓய்வு கால பணப்பலன்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் கலந்து கொண்டு, 23 பேருக்கு காசோலைகளை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் போக்குவரத்துத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் கோபால், அனைத்து போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர்கள் உள்ளிட்டப் பலர் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் சிவசங்கர், "தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களில் கடந்த 2020ஆம் ஆண்டு மே மாதம் முதல் 2021ஆம் ஆண்டு மார்ச் மாதம் வரை பணிபுரிந்து விருப்ப ஓய்வுபெற்ற மற்றும் இறந்த பணியாளர்கள் என 1,242 நபர்களுக்கு வருங்கால வைப்பு நிதி பணிக்கொடை, விடுப்பு ஒப்படைப்பு தொகை மற்றும் ஓய்வூதிய ஒப்படைப்பு தொகை உள்ளிட்ட பணப்பலன்கள் 242.67 கோடி ரூபாயில் வழங்கப்பட்டுள்ளது.

அதேபோல், தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களில் கடந்த 2020ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் 2022ஆம் ஆண்டு மார்ச் மாதம் வரை பணிபுரிந்து விருப்ப ஓய்வுபெற்ற மற்றும் இறந்த பணியாளர்கள் என மொத்தம் 1,626 நபர்களுக்கு வருங்கால வைப்பு நிதி, பணிக்கொடை, விடுப்பு ஒப்படைப்பு தொகை, ஓய்வூதிய ஒப்படைப்புத் தொகை உள்ளிட்ட பணப் பலன்களான 308.45 கோடி ரூபாய் வழங்கப்பட்டு வருகிறது.

அதன் ஒரு பகுதியாக தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களைச் சார்ந்த 23 ஓய்வுபெற்ற மற்றும் இறந்த பணியாளர்களின் வருங்கால வைப்பு நிதி, பணிக்கொடை, விடுப்பு ஒப்படைப்பு தொகை மற்றும் ஓய்வூதிய ஒப்படைப்பு தொகை உள்ளிட்ட பணப்பலன்களுக்குரிய காசோலைகளை தற்போது வழங்கி உள்ளோம். அதேபோல் மீதமுள்ள 1,603 பணியாளர்களுக்கும் அந்த போக்குவரத்துக் கழக நிர்வாகத்தின் வாயிலாக காசோலைகள் வழங்கப்படும்.

தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின், கடந்த கால ஆட்சியாளர்கள் விட்டுச்சென்ற கடன்களையும், தேர்தல் வாக்குறுதிகளையும் பூர்த்தி செய்து கொண்டே மக்களின் தேவைகளையும் பூர்த்தி செய்து வருகிறார். அதிமுக ஆட்சிக்காலத்தில் போக்குவரத்து ஊழியர்களின் வயது வரம்பை 58-லிருந்து 60ஆக உயர்த்திவிட்டனர். ஆனால், ஓட்டுநர்கள் முழு உடல் உழைப்பை போடும் நிலையும், நடத்துநர்கள் பணி முடிவடையும் வரை நின்று கொண்டே இருக்கும் சூழலும் இருப்பதினாலும், அவர்களுக்கு நீரிழிவு நோய் மற்றும் கண்பார்வை குறைபாடு ஏற்படுகின்றது.

சென்னை மாநகரப் பணிமனைகளில் நீண்ட நாள் விடுப்பு எடுத்தவர்களைச் சந்தித்து பணிக்கு திரும்ப வலியுறுத்தியபோது, 58 வயதோடு தங்களுக்கு ஓய்வு வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர். இதுதொடர்பாக விரைவில் முதலமைச்சரிடம் தெரிவித்து நடவடிக்கை எடுக்கப்படும்.

பணிமனைகளில் அதிகாலை இயக்கக்கூடிய முதல் பேருந்துகள் தாமதமாக இயக்கப்படுவதாகப் புகார்கள் அளிக்கப்பட்டால், ஓட்டுநர் மற்றும் நடத்துநர் மீது துறை ரீதியாக தக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்" என்று தெரிவித்தார்.

இதையும் படிங்க: குரூப்-4, சர்வேயர் தேர்வில் முறைகேடு புகார் - அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் அளித்த விளக்கம் என்ன?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.