ETV Bharat / state

அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் நவ.22 வரை நீட்டிப்பு!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 6, 2023, 3:37 PM IST

Senthil Balaji Judicial Custody Extension: சட்டவிரோத பணபரிமாற்ற தடை சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் நவம்பர் 22ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

Senthil Balaji Judicial Custody Extension
அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் நவம்பர் 22ம் தேதி வரை நீட்டிப்பு..

சென்னை: சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்ட வழக்கில் அமலாக்கத் துறையினரால், கடந்த ஜூன் மாதம் 14ஆம் தேதி அதிகாலை 4 மணியளவில் அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டார். அவருக்கு எதிராக ஆகஸ்ட் 12ஆம் தேதி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் 3 ஆயிரம் பக்கம் கொண்ட குற்றப்பத்திரிக்கையை அமலாக்கத் துறையினர் தாக்கல் செய்தனர்.

இந்த வழக்கு சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது. இதனை அடுத்து, அவரது நீதிமன்ற காவல் செப்டம்பர் 15ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது.

இந்த நிலையில், செந்தில் பாலாஜி மீதான வழக்கைச் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் தான் விசாரிக்க வேண்டும் எனச் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டதன் அடிப்படையில் வழக்கு மீண்டும் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது.

இதன் இடையே கடந்த செப்டம்பர் 20ஆம் தேதி அமைச்சர் செந்தில் பாலாஜி தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இந்த நிலையில், செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் செப்டம்பர் 29, அக்டோபர் 13, நவம்பர் 03 என இதுவரை 9 முறை நீட்டிப்பட்டது.

இத்தகைய சூழ்நிலையில், நீதிமன்ற காவல் முடிந்த செந்தில் பாலாஜி சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி முன்பு காணொளி காட்சி மூலம் ஆஜர் படுத்தப்பட்டார்.

அப்போது செந்தில் பாலாஜி தரப்பில், அமலாக்கத்துறை ஆவணங்களை தங்களுக்கு வழங்க உத்தரவிட வேண்டும் எனக் கோரிக்கை வைக்கப்பட்டது. இதனை அடுத்து, அமலாக்கத்துறை பதிலளிக்க உத்தரவிட்ட நீதிபதி அல்லி , செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவலை நவம்பர் 22ஆம் தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டார்.

இதையும் படிங்க: சனாதன ஒழிப்பு மாநாட்டில் பங்கேற்ற அமைச்சர்கள் மீது நடவடிக்கை எடுக்காதது ஏன்? - சென்னை உயர்நீதிமன்றம்!

சென்னை: சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்ட வழக்கில் அமலாக்கத் துறையினரால், கடந்த ஜூன் மாதம் 14ஆம் தேதி அதிகாலை 4 மணியளவில் அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டார். அவருக்கு எதிராக ஆகஸ்ட் 12ஆம் தேதி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் 3 ஆயிரம் பக்கம் கொண்ட குற்றப்பத்திரிக்கையை அமலாக்கத் துறையினர் தாக்கல் செய்தனர்.

இந்த வழக்கு சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது. இதனை அடுத்து, அவரது நீதிமன்ற காவல் செப்டம்பர் 15ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது.

இந்த நிலையில், செந்தில் பாலாஜி மீதான வழக்கைச் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் தான் விசாரிக்க வேண்டும் எனச் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டதன் அடிப்படையில் வழக்கு மீண்டும் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது.

இதன் இடையே கடந்த செப்டம்பர் 20ஆம் தேதி அமைச்சர் செந்தில் பாலாஜி தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இந்த நிலையில், செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் செப்டம்பர் 29, அக்டோபர் 13, நவம்பர் 03 என இதுவரை 9 முறை நீட்டிப்பட்டது.

இத்தகைய சூழ்நிலையில், நீதிமன்ற காவல் முடிந்த செந்தில் பாலாஜி சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி முன்பு காணொளி காட்சி மூலம் ஆஜர் படுத்தப்பட்டார்.

அப்போது செந்தில் பாலாஜி தரப்பில், அமலாக்கத்துறை ஆவணங்களை தங்களுக்கு வழங்க உத்தரவிட வேண்டும் எனக் கோரிக்கை வைக்கப்பட்டது. இதனை அடுத்து, அமலாக்கத்துறை பதிலளிக்க உத்தரவிட்ட நீதிபதி அல்லி , செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவலை நவம்பர் 22ஆம் தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டார்.

இதையும் படிங்க: சனாதன ஒழிப்பு மாநாட்டில் பங்கேற்ற அமைச்சர்கள் மீது நடவடிக்கை எடுக்காதது ஏன்? - சென்னை உயர்நீதிமன்றம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.