ETV Bharat / state

2வது முறையாக அமலாக்கத்துறை விசாரணைக்கு ‘டிமிக்கி’ - அவகாசம் கேட்கும் செந்தில் பாலாஜி சகோதரர்..

author img

By

Published : Jun 20, 2023, 2:04 PM IST

Updated : Jun 20, 2023, 2:47 PM IST

செந்தில்பாலாஜியின் சகோதரர் அசோக்கிற்கு அமலாக்கத்துறை மற்றும் வருமான வரித்துறையினர் அனுப்பிய சம்மனுக்கு விசாரணைக்கு ஆஜராகாத நிலையில், அவர், கால அவகாசம் கேட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

minister-sendhilbalaji-brother-ashok-again-skips-ed-enquiry-ed-may-takes-strict-action
2வது முறையாக அமலாக்கத்துறை விசாரணைக்கு ‘டிமிக்கி’ - செந்தில் பாலாஜியின் சகோதரர் விரைவில்?..

சென்னை: சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் அமைச்சர் செந்தில் பாலாஜி, அவரது சகோதரர் அசோக் மற்றும் நெருங்கிய நண்பர்களின் வீட்டில் வருமான வரித்துறை மற்றும் அமலாக்கத்துறை அடுத்தடுத்து சோதனை நடத்திய நிலையில், கடந்த வாரம் அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டார்.

சென்னை, கோவை, கரூர் ஆகிய மாவட்டங்களில் அமைச்சர் செந்தில்பாலாஜியின் சகோதரர் அசோக், அரசியல் உதவியாளர் கோகுல் ஆகியோருக்கு சொந்தமான 40க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறையினர் கடந்த 26ஆம் தேதி சோதனை மேற்கொண்டனர். குறிப்பாக அமைச்சர் செந்தில்பாலாஜி, டாஸ்மாக் குடோனில் இருந்து பொருட்களை எடுத்து செல்வதற்கான டெண்டரில் ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கு ஊழல் நடைபெற்றதாகவும், மது ஆலைகள் மூலமாக பல ஆயிரம் கோடி ஊழல் நடைபெற்றதாகவும் தொடர்ந்து குற்றச்சாட்டுகள் எழுந்தன.

வரி ஏய்ப்பு புகாரின் அடிப்படையில் எட்டு நாட்களாக நடைபெற்ற இந்த வருமான வரித்துறை சோதனையில் முக்கிய ஆவணங்கள் மற்றும் கணக்கில் காட்டப்படாத ரொக்கத்தை வருமான வரித்துறையினர் பறிமுதல் செய்தனர். இதையடுத்து செந்தில்பாலாஜியின் உதவியாளரான கோகுலுக்கு பல முறை வருமான வரித்துறையினர் சம்மன் அனுப்பியும் ஆஜராகாததால் அவருக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறையினர் சீல் வைத்தனர்.

இதற்கிடையே கடந்த மாதம் 30ஆம் தேதி அமைச்சர் செந்தில்பாலாஜியின் சகோதரர் அசோக்கிற்கு வருமான வரித்துறையினர் விசாரணைக்கு ஆஜராக சம்மன் அனுப்பினர். ஆனால் அசோக் விசாரணைக்கு ஆஜராகவில்லை. இந்த நிலையில் மீண்டும் இன்று (ஜூன் 20ஆம் தேதி) விசாரணைக்கு ஆஜராக, அசோக்கிற்கு வருமான வரித்துறையினர் சம்மன் அனுப்பி இருந்த நிலையில் இன்றும் அசோக் ஆஜராகவில்லை.

இதே போல போக்குவரத்து துறையில் வேலை வாங்கி தருவதாக மோசடி செய்த வழக்கில், அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவரது சகோதரர் அசோக்கிற்கு அமலாக்கத்துறையினர் இன்று ஆஜராக சம்மன் அனுப்பி இருந்தனர். அந்த சம்மனுக்கும் அசோக் ஆஜராகவில்லை. இதனால் அடுத்தக்கட்ட நடவடிக்கையில் ஈடுபட வருமான வரித்துறை மற்றும் அமலாக்கத்துறை தயாராகி வருகின்றனர். மேலும் வருமான வரித்துறை மற்றும் அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜர் ஆவதற்கு அசோக் தரப்பிலிருந்து கால அவகாசம் கேட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

விளக்கம்: இந்நிலையில், இன்று அமலாக்கத்துறையின் விசாரணைக்கு நேரில் ஆஜராகாத அசோக், அமலாக்கத்துறை கேட்ட ஆவணங்களை திரட்டி வருவதால் தன்னால் ஆஜராக முடியவில்லை என்று அமலாக்கத்துறைக்கு விளக்கம் அளிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், அமலாக்கத் துறை அனுப்பி இருந்த இரண்டு சம்மன்களுக்கும் ஆஜராகாத நிலையில், அதற்கு உரிய ஆவணங்களை திரட்ட கால அவகாசம் கோரி உள்ள நிலையில், இனி அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக் மீது, அமலாக்கத் துறை, என்ன நடவடிக்கை எடுக்கப் போகின்றது என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்...

இதையும் படிங்க: செந்தில் பாலாஜிக்கு நாளை அறுவை சிகிச்சை - அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

சென்னை: சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் அமைச்சர் செந்தில் பாலாஜி, அவரது சகோதரர் அசோக் மற்றும் நெருங்கிய நண்பர்களின் வீட்டில் வருமான வரித்துறை மற்றும் அமலாக்கத்துறை அடுத்தடுத்து சோதனை நடத்திய நிலையில், கடந்த வாரம் அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டார்.

சென்னை, கோவை, கரூர் ஆகிய மாவட்டங்களில் அமைச்சர் செந்தில்பாலாஜியின் சகோதரர் அசோக், அரசியல் உதவியாளர் கோகுல் ஆகியோருக்கு சொந்தமான 40க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறையினர் கடந்த 26ஆம் தேதி சோதனை மேற்கொண்டனர். குறிப்பாக அமைச்சர் செந்தில்பாலாஜி, டாஸ்மாக் குடோனில் இருந்து பொருட்களை எடுத்து செல்வதற்கான டெண்டரில் ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கு ஊழல் நடைபெற்றதாகவும், மது ஆலைகள் மூலமாக பல ஆயிரம் கோடி ஊழல் நடைபெற்றதாகவும் தொடர்ந்து குற்றச்சாட்டுகள் எழுந்தன.

வரி ஏய்ப்பு புகாரின் அடிப்படையில் எட்டு நாட்களாக நடைபெற்ற இந்த வருமான வரித்துறை சோதனையில் முக்கிய ஆவணங்கள் மற்றும் கணக்கில் காட்டப்படாத ரொக்கத்தை வருமான வரித்துறையினர் பறிமுதல் செய்தனர். இதையடுத்து செந்தில்பாலாஜியின் உதவியாளரான கோகுலுக்கு பல முறை வருமான வரித்துறையினர் சம்மன் அனுப்பியும் ஆஜராகாததால் அவருக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறையினர் சீல் வைத்தனர்.

இதற்கிடையே கடந்த மாதம் 30ஆம் தேதி அமைச்சர் செந்தில்பாலாஜியின் சகோதரர் அசோக்கிற்கு வருமான வரித்துறையினர் விசாரணைக்கு ஆஜராக சம்மன் அனுப்பினர். ஆனால் அசோக் விசாரணைக்கு ஆஜராகவில்லை. இந்த நிலையில் மீண்டும் இன்று (ஜூன் 20ஆம் தேதி) விசாரணைக்கு ஆஜராக, அசோக்கிற்கு வருமான வரித்துறையினர் சம்மன் அனுப்பி இருந்த நிலையில் இன்றும் அசோக் ஆஜராகவில்லை.

இதே போல போக்குவரத்து துறையில் வேலை வாங்கி தருவதாக மோசடி செய்த வழக்கில், அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவரது சகோதரர் அசோக்கிற்கு அமலாக்கத்துறையினர் இன்று ஆஜராக சம்மன் அனுப்பி இருந்தனர். அந்த சம்மனுக்கும் அசோக் ஆஜராகவில்லை. இதனால் அடுத்தக்கட்ட நடவடிக்கையில் ஈடுபட வருமான வரித்துறை மற்றும் அமலாக்கத்துறை தயாராகி வருகின்றனர். மேலும் வருமான வரித்துறை மற்றும் அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜர் ஆவதற்கு அசோக் தரப்பிலிருந்து கால அவகாசம் கேட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

விளக்கம்: இந்நிலையில், இன்று அமலாக்கத்துறையின் விசாரணைக்கு நேரில் ஆஜராகாத அசோக், அமலாக்கத்துறை கேட்ட ஆவணங்களை திரட்டி வருவதால் தன்னால் ஆஜராக முடியவில்லை என்று அமலாக்கத்துறைக்கு விளக்கம் அளிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், அமலாக்கத் துறை அனுப்பி இருந்த இரண்டு சம்மன்களுக்கும் ஆஜராகாத நிலையில், அதற்கு உரிய ஆவணங்களை திரட்ட கால அவகாசம் கோரி உள்ள நிலையில், இனி அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக் மீது, அமலாக்கத் துறை, என்ன நடவடிக்கை எடுக்கப் போகின்றது என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்...

இதையும் படிங்க: செந்தில் பாலாஜிக்கு நாளை அறுவை சிகிச்சை - அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

Last Updated : Jun 20, 2023, 2:47 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.