ETV Bharat / state

வரி ஏய்ப்பு செய்வோர் மீது குண்டர் சட்டம் பாயும் - அமைச்சர் மூர்த்தி

author img

By

Published : Sep 28, 2021, 9:50 AM IST

வரி ஏய்ப்பு செய்யும் எந்த நிறுவனமாக இருந்தாலும் அவர்கள் மீது குண்டர் சட்டம் பாயும் என வணிகவரித் துறை அமைச்சர் பி. மூர்த்தி எச்சரித்துள்ளார்.

'வரி ஏய்ப்பு செய்வோர் மீது குண்டர் சட்டம் பாயும்'
'வரி ஏய்ப்பு செய்வோர் மீது குண்டர் சட்டம் பாயும்'

சென்னை: நந்தனத்தில் உள்ள வணிகவரித் துறை அலுவலகத்தில் பி. மூர்த்தி நேற்று (செப். 27) செய்தியாளரைச் சந்தித்துப் பேசுகையில், "தமிழ்நாட்டின் முக்கிய நகரங்களில் வணிகம் செய்யும் துணிக்கடைகளில் மாதாந்திர அறிக்கைகளை ஆய்வு செய்ததில் அவர்கள் வரியைச் சரிவர செலுத்தவில்லை என்பது தெரியவந்தது.

அவற்றைக் கண்டறிவதற்காக வணிகவரி ஆணையரின் மேற்பார்வையில் ஐந்து குழுக்கள் அமைக்கப்பட்டு 260 வணிகவரித் துறை அலுவலர்களால் 115 இடங்களில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

இந்த ஆய்வு பெரும்பாலான இடங்களில் முடிவுற்ற நிலையில் இன்னும் சில இடங்களில் நடத்தப்பட வேண்டியுள்ளது. ஆய்வு நடத்தி அதன் அடிப்படையில் கீழ்க்காணும் குறைகள் கண்டறியப்பட்டுள்ளன.

'வரி ஏய்ப்பு செய்வோர் மீது குண்டர் சட்டம் பாயும்'

வரி மறைக்கப்பட்டது, தவறாக உள்ளீட்டு வரி செலுத்தியது, வாடகை போன்ற சில சேவைகளுக்கு வரி செலுத்தாத பதிவு பெறாத இடங்களில் சரக்கு இருப்பு வைத்துள்ளது போன்றவை கண்டறியப்பட்டுள்ளன. இவை சம்பந்தமான கண்டுபிடிக்கப்பட்ட குறைபாடுகள் மொத்தம் 101.49 கோடி ரூபாய் ஆகும்.

சோதனை மேற்கொள்ளப்பட்ட 115 இடங்களில் அரசுக்குச் செலுத்த வேண்டிய வரி சுமார் ரூ. 101.49 கோடி. நாளுக்கு நாள் வரி ஏய்ப்பு செய்பவர்கள் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே செல்கிறது.

அதற்காகத் துறை ரீதியாக நடவடிக்கை எடுத்துவருகிறோம். வரி ஏய்ப்பு செய்யும் எந்த நிறுவனமாக இருந்தாலும் அவர்கள் மீது குண்டர் சட்டம் பாயும். கடந்த நான்கு ஆண்டுகளாக வரி ஏய்ப்பு நடைபெற்றுள்ளது.

வரி ஏய்ப்பு செய்பவர்களைக் கண்டறிந்து அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். அரசுக்கு வரக்கூடிய வருவாயில் 87 விழுக்காடு வணிக வரியிலிருந்துதான் வருகிறது" எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: 'சேகர் ரெட்டி டைரியில் என் பெயர் எனும் தகவல் தவறு' - அமைச்சர் செந்தில் பாலாஜி

சென்னை: நந்தனத்தில் உள்ள வணிகவரித் துறை அலுவலகத்தில் பி. மூர்த்தி நேற்று (செப். 27) செய்தியாளரைச் சந்தித்துப் பேசுகையில், "தமிழ்நாட்டின் முக்கிய நகரங்களில் வணிகம் செய்யும் துணிக்கடைகளில் மாதாந்திர அறிக்கைகளை ஆய்வு செய்ததில் அவர்கள் வரியைச் சரிவர செலுத்தவில்லை என்பது தெரியவந்தது.

அவற்றைக் கண்டறிவதற்காக வணிகவரி ஆணையரின் மேற்பார்வையில் ஐந்து குழுக்கள் அமைக்கப்பட்டு 260 வணிகவரித் துறை அலுவலர்களால் 115 இடங்களில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

இந்த ஆய்வு பெரும்பாலான இடங்களில் முடிவுற்ற நிலையில் இன்னும் சில இடங்களில் நடத்தப்பட வேண்டியுள்ளது. ஆய்வு நடத்தி அதன் அடிப்படையில் கீழ்க்காணும் குறைகள் கண்டறியப்பட்டுள்ளன.

'வரி ஏய்ப்பு செய்வோர் மீது குண்டர் சட்டம் பாயும்'

வரி மறைக்கப்பட்டது, தவறாக உள்ளீட்டு வரி செலுத்தியது, வாடகை போன்ற சில சேவைகளுக்கு வரி செலுத்தாத பதிவு பெறாத இடங்களில் சரக்கு இருப்பு வைத்துள்ளது போன்றவை கண்டறியப்பட்டுள்ளன. இவை சம்பந்தமான கண்டுபிடிக்கப்பட்ட குறைபாடுகள் மொத்தம் 101.49 கோடி ரூபாய் ஆகும்.

சோதனை மேற்கொள்ளப்பட்ட 115 இடங்களில் அரசுக்குச் செலுத்த வேண்டிய வரி சுமார் ரூ. 101.49 கோடி. நாளுக்கு நாள் வரி ஏய்ப்பு செய்பவர்கள் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே செல்கிறது.

அதற்காகத் துறை ரீதியாக நடவடிக்கை எடுத்துவருகிறோம். வரி ஏய்ப்பு செய்யும் எந்த நிறுவனமாக இருந்தாலும் அவர்கள் மீது குண்டர் சட்டம் பாயும். கடந்த நான்கு ஆண்டுகளாக வரி ஏய்ப்பு நடைபெற்றுள்ளது.

வரி ஏய்ப்பு செய்பவர்களைக் கண்டறிந்து அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். அரசுக்கு வரக்கூடிய வருவாயில் 87 விழுக்காடு வணிக வரியிலிருந்துதான் வருகிறது" எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: 'சேகர் ரெட்டி டைரியில் என் பெயர் எனும் தகவல் தவறு' - அமைச்சர் செந்தில் பாலாஜி

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.