ETV Bharat / state

தமிழ்நாடு வனத்துறையில் வரப்போகுது வேலைவாய்ப்பு - அமைச்சர் சொன்ன குட் நியூஸ்!

author img

By

Published : Dec 21, 2022, 10:51 PM IST

தமிழ்நாடு பல்லுயிர் பாதுகாப்பு மற்றும் பசுமையாக்கல் திட்டத்திற்கு ஜப்பான் நிதியுதவியுடன் ரூ.920.56 கோடியில் பணிகளை மேற்கொள்ள உள்ளதாகவும்; விரைவில் வனப் பணியாளர்கள் வேலைவாய்ப்பு குறித்து அறிவிக்க உள்ளதாகவும் வனத்துறை அமைச்சர் மா.மதிவேந்தன் தெரிவித்துள்ளார்.

fes
fe

சென்னை: தமிழ்நாடு பல்லுயிர் பாதுகாப்பு மற்றும் பசுமையாக்கல் திட்டத்திற்கு ரூ.920.56 கோடியில் பணிகளை மேற்கொள்ள திட்டமிடப்பட்டு இதற்காக ஜப்பான் நிதியுதவி பெறப்படவுள்ளது என வனத்துறை அமைச்சர் மா.மதிவேந்தன் கூறியுள்ளார். சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று (டிச.21) வனத்துறை அமைச்சர் மா.மதிவேந்தன் தலைமையில் நடந்த வனத்துறை கூட்டரங்கில், வனத்துறை மேம்பாட்டு பணிகள் குறித்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

இக்கூட்டத்தில் பேசிய அமைச்சர் மா.மதிவேந்தன், 'முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், வனத்துறையை தமிழகத்தின் முதன்மையான துறையாக உயர்த்திட பணியாற்றுமாறு அறிவுறுத்தியுள்ளார். அதற்கேற்ப, அலுவலர்கள் அனைவரும் ஒருங்கிணைந்து பணியாற்றிட வேண்டும்.

தமிழக மக்கள் இயற்கையைப் பேணுவதிலும், சுற்றுச்சூழல் நன்றாகப் பராமரிப்பதிலும் ஆர்வம் உள்ளவர்களாக உள்ளனர். இதனைக் கருத்தில் கொண்டு, அடுத்து வரும் ஆண்டுகளில் வனத்துறை நவீனப்படுத்தப்படுவதன் மூலம் மக்கள் வரவேற்பைப் பெற்றிட தங்களது பங்களிப்பினை நல்க வேண்டும்.

தமிழ்நாடு பல்லுயிர் பாதுகாப்பு மற்றும் பசுமையாக்கல் திட்டத்திற்கு ரூ.920.56 கோடியில் பணிகளை மேற்கொள்ள திட்டமிடப்பட்டு, இதற்காக ஜப்பான் நிதியுதவி பெறப்படவுள்ளது. வளம் குன்றிய வனப்பகுதிகளை மீட்டெடுக்கும் திட்டத்திற்கும் நபார்டு (NABARD) ரூ.281.14 கோடி வழங்க உள்ளது. இந்த திட்டங்களின் மூலம் சுற்றுச்சூழல் பாதுகாக்கவும், அதற்கு தேவையான மரக்கன்றுகளை வளர்த்து நடவும் திட்டமிடப்பட்டுள்ளன' எனத் தெரிவித்தார்.

’'பசுமைத்தமிழகம் இயக்கம்' திட்டத்தில் 10 ஆண்டுகளில் 260 கோடி மரக்கன்றுகள் வளர்க்கப்பட்டு நடப்படுவதன் மூலம் 23.7 விழுக்காடு ஆக உள்ள வனப்பரப்பை 33 விழுக்காடு ஆக உயர்த்திட முதலமைச்சர் ஏற்கனவே இந்த திட்டத்தை துவக்கி வைத்துள்ளார். இத்திட்டத்தில் நடப்பாண்டு 2 கோடியே 50 லட்சம் மரக்கன்றுகள் வளர்க்கப்பட்டு நடவு செய்யப்பட்டு வருகின்றன. அடுத்தாண்டு, 7 கோடியே 50 லட்சம் மரக்கன்றுகள் வளர்க்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

விரைவில் வனப்பணியாளர்கள் வேலைவாய்ப்பு: தமிழ்நாடு சீருடை வனப்பணியாளர் தேர்வாணையம் மூலம் 1161 சீருடை வனப்பணியாளர்கள் விரைவில் தேர்வு செய்யப்பட உள்ளனர். 100 கிராமங்களில் மரகதப் பூஞ்சோலைகள் ஏற்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. சூழல் சுற்றுலா சுற்றுத்தடங்கல் புதிதாக ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது’ என அமைச்சர் தெரிவித்தார்.

இதையும் படிங்க: எங்கு பொறி வைத்தால், எந்த எலி வரும் என்று எங்களுக்குத் தெரியும்: அண்ணாமலை

சென்னை: தமிழ்நாடு பல்லுயிர் பாதுகாப்பு மற்றும் பசுமையாக்கல் திட்டத்திற்கு ரூ.920.56 கோடியில் பணிகளை மேற்கொள்ள திட்டமிடப்பட்டு இதற்காக ஜப்பான் நிதியுதவி பெறப்படவுள்ளது என வனத்துறை அமைச்சர் மா.மதிவேந்தன் கூறியுள்ளார். சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று (டிச.21) வனத்துறை அமைச்சர் மா.மதிவேந்தன் தலைமையில் நடந்த வனத்துறை கூட்டரங்கில், வனத்துறை மேம்பாட்டு பணிகள் குறித்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

இக்கூட்டத்தில் பேசிய அமைச்சர் மா.மதிவேந்தன், 'முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், வனத்துறையை தமிழகத்தின் முதன்மையான துறையாக உயர்த்திட பணியாற்றுமாறு அறிவுறுத்தியுள்ளார். அதற்கேற்ப, அலுவலர்கள் அனைவரும் ஒருங்கிணைந்து பணியாற்றிட வேண்டும்.

தமிழக மக்கள் இயற்கையைப் பேணுவதிலும், சுற்றுச்சூழல் நன்றாகப் பராமரிப்பதிலும் ஆர்வம் உள்ளவர்களாக உள்ளனர். இதனைக் கருத்தில் கொண்டு, அடுத்து வரும் ஆண்டுகளில் வனத்துறை நவீனப்படுத்தப்படுவதன் மூலம் மக்கள் வரவேற்பைப் பெற்றிட தங்களது பங்களிப்பினை நல்க வேண்டும்.

தமிழ்நாடு பல்லுயிர் பாதுகாப்பு மற்றும் பசுமையாக்கல் திட்டத்திற்கு ரூ.920.56 கோடியில் பணிகளை மேற்கொள்ள திட்டமிடப்பட்டு, இதற்காக ஜப்பான் நிதியுதவி பெறப்படவுள்ளது. வளம் குன்றிய வனப்பகுதிகளை மீட்டெடுக்கும் திட்டத்திற்கும் நபார்டு (NABARD) ரூ.281.14 கோடி வழங்க உள்ளது. இந்த திட்டங்களின் மூலம் சுற்றுச்சூழல் பாதுகாக்கவும், அதற்கு தேவையான மரக்கன்றுகளை வளர்த்து நடவும் திட்டமிடப்பட்டுள்ளன' எனத் தெரிவித்தார்.

’'பசுமைத்தமிழகம் இயக்கம்' திட்டத்தில் 10 ஆண்டுகளில் 260 கோடி மரக்கன்றுகள் வளர்க்கப்பட்டு நடப்படுவதன் மூலம் 23.7 விழுக்காடு ஆக உள்ள வனப்பரப்பை 33 விழுக்காடு ஆக உயர்த்திட முதலமைச்சர் ஏற்கனவே இந்த திட்டத்தை துவக்கி வைத்துள்ளார். இத்திட்டத்தில் நடப்பாண்டு 2 கோடியே 50 லட்சம் மரக்கன்றுகள் வளர்க்கப்பட்டு நடவு செய்யப்பட்டு வருகின்றன. அடுத்தாண்டு, 7 கோடியே 50 லட்சம் மரக்கன்றுகள் வளர்க்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

விரைவில் வனப்பணியாளர்கள் வேலைவாய்ப்பு: தமிழ்நாடு சீருடை வனப்பணியாளர் தேர்வாணையம் மூலம் 1161 சீருடை வனப்பணியாளர்கள் விரைவில் தேர்வு செய்யப்பட உள்ளனர். 100 கிராமங்களில் மரகதப் பூஞ்சோலைகள் ஏற்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. சூழல் சுற்றுலா சுற்றுத்தடங்கல் புதிதாக ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது’ என அமைச்சர் தெரிவித்தார்.

இதையும் படிங்க: எங்கு பொறி வைத்தால், எந்த எலி வரும் என்று எங்களுக்குத் தெரியும்: அண்ணாமலை

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.