ETV Bharat / state

'நாற்காலிகள் பறந்திருக்கும், சட்டை கிழிந்திருக்கும்' திமுக பொதுக்குழு பற்றி ஜெயக்குமார்!

சென்னை: திமுக பொதுக்குழு கூட்டம் காணொலி வாயிலாக கூடாமல், பொதுவெளியில் கூடியிருந்தால் நாற்காலிகள் பறந்திருக்கும், சட்டை கிழிந்திருக்கும் என்று மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

author img

By

Published : Sep 12, 2020, 1:27 AM IST

minister-jeyakumar-comments-about-dmk-general-body-meeting
minister-jeyakumar-comments-about-dmk-general-body-meeting

சென்னை பழைய வண்ணாரப்பேட்டையில் உள்ள சென்னை மேல்நிலைப் பள்ளியில் ஸ்மார்ட் வகுப்புகளை அமைச்சர் ஜெயக்குமார் தொடங்கி வைத்தார். அதன் பின்னர் தூய்மை பணியாளர்களுக்கு நிவாரண பொருள்கள் வழங்கப்பட்டது.

பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், ''பட்டியலின மக்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கின்ற கட்சி அதிமுகதான். கட்சியில் பெரிய பதவிகள் அளித்து, அமைச்சரவையில் இடம் கொடுத்து அழகு பார்த்த கட்சியும் அதிமுகதான்.

திமுகவில் பெயருக்குதான் பட்டியலின மக்களின் பாதுகாவலர்கள் என்று சொல்கிறார்கள். ஆனால் உண்மையில் பட்டியலின மக்கள் அந்த கட்சியில் இருந்து வெளியேற்றப்படுகின்ற நிலை உள்ளது. கு.க செல்வத்திற்கு துரைமுருகன் நன்றி சொல்ல வேண்டும். அவர் மட்டும் நீதிமன்றம் செல்லவில்லை என்றால் திமுக பொதுக்குழு கூடி இருக்காது.

திமுக பொதுக்குழுவை வெளிப்படையாக கூட்டியிருந்தால் நாற்காலிகள் பறந்திருக்கும், சட்டைகள் கிழிந்திருக்கும். ஊழல் இல்லாத தமிழ்நாட்டில் முதல்முதலாக ஊழலுக்காக கலைக்கப்பட்ட ஒரே ஆட்சி திமுகதான்.

நடிகர் ரஜினிகாந்த் கட்சி தொடங்குவது குறித்து கருத்து சொல்ல நான் ஜோதிடர் கிடையாது. அவர் முதலில் கட்சி தொடங்கட்டும். 2021இல் அதீத பெரும்பான்மையுடன் அதிமுக ஆட்சிதான் தமிழ்நாட்டில் மலரும்'' என்றார்.

இதையும் படிங்க: குற்றப்பின்னணி குறித்த விவரங்களை ஊடகங்களில் வேட்பாளர்கள் வெளியிட வேண்டும்!

சென்னை பழைய வண்ணாரப்பேட்டையில் உள்ள சென்னை மேல்நிலைப் பள்ளியில் ஸ்மார்ட் வகுப்புகளை அமைச்சர் ஜெயக்குமார் தொடங்கி வைத்தார். அதன் பின்னர் தூய்மை பணியாளர்களுக்கு நிவாரண பொருள்கள் வழங்கப்பட்டது.

பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், ''பட்டியலின மக்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கின்ற கட்சி அதிமுகதான். கட்சியில் பெரிய பதவிகள் அளித்து, அமைச்சரவையில் இடம் கொடுத்து அழகு பார்த்த கட்சியும் அதிமுகதான்.

திமுகவில் பெயருக்குதான் பட்டியலின மக்களின் பாதுகாவலர்கள் என்று சொல்கிறார்கள். ஆனால் உண்மையில் பட்டியலின மக்கள் அந்த கட்சியில் இருந்து வெளியேற்றப்படுகின்ற நிலை உள்ளது. கு.க செல்வத்திற்கு துரைமுருகன் நன்றி சொல்ல வேண்டும். அவர் மட்டும் நீதிமன்றம் செல்லவில்லை என்றால் திமுக பொதுக்குழு கூடி இருக்காது.

திமுக பொதுக்குழுவை வெளிப்படையாக கூட்டியிருந்தால் நாற்காலிகள் பறந்திருக்கும், சட்டைகள் கிழிந்திருக்கும். ஊழல் இல்லாத தமிழ்நாட்டில் முதல்முதலாக ஊழலுக்காக கலைக்கப்பட்ட ஒரே ஆட்சி திமுகதான்.

நடிகர் ரஜினிகாந்த் கட்சி தொடங்குவது குறித்து கருத்து சொல்ல நான் ஜோதிடர் கிடையாது. அவர் முதலில் கட்சி தொடங்கட்டும். 2021இல் அதீத பெரும்பான்மையுடன் அதிமுக ஆட்சிதான் தமிழ்நாட்டில் மலரும்'' என்றார்.

இதையும் படிங்க: குற்றப்பின்னணி குறித்த விவரங்களை ஊடகங்களில் வேட்பாளர்கள் வெளியிட வேண்டும்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.