ETV Bharat / state

"அதிமுகவில் இருந்து சென்றவர்களால் தான் திமுக இயங்குகிறது"- ஸ்டாலினை வம்பிழுத்த அமைச்சர்!

author img

By

Published : Aug 30, 2019, 6:31 PM IST

சென்னை: திமுகவில் ஏற்பட்டுள்ள பஞ்சம் காரணமாக தங்க.தமிழ்ச்செல்வனுக்கு கொள்கை பரப்புச்செயலாளர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி, அதிமுகவில் இருந்து சென்றவர்களால் தான் திமுக இயங்குகிறது என மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.

minister jayakumar said dmk occupied aiadmk

சென்னை புரசைவாக்கத்தில் இரண்டு கோடி ரூபாய் செலவில் பம்பிங் ஸ்டேசன் அமைக்க மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் அடிக்கல் நாட்டினார்.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் ஜெயக்குமார், 'திமுகவில் ஏற்பட்டுள்ள பஞ்சம் காரணமாகவே தங்க.தமிழ்ச்செல்வனுக்கு கொள்கை பரப்புச் செயலாளர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. திமுகவில் உள்ளவர்கள் இதனை ஏற்றுக்கொள்வார்களா என்பது சந்தேகத்திற்குரியது. இந்த முடிவு ஸ்டாலினுடைய தனிப்பட்ட விருப்பம். கட்சியின் விருப்பமாக இருக்காது.

அதிமுகவில் இருந்து சென்றவர்களால் தான் திமுக இயங்குகிறது - அமைச்சர் ஜெயக்குமார்

திமுகவின் நடவடிக்கைகள் தற்போது ஸ்டாலினின் 'ஒன் மேன் ஷோ'வாக இருக்கிறது. திமுகவில், உதயநிதியின் மகனுக்குக்கூட புதுப்பிரிவை உருவாக்கி தலைவர் ஆக்குவார்கள். மேலும், அதிமுகவிலிருந்து சென்றவர்களால் தான் திமுக செயல்படுகிறது' என்றும் விமர்சித்தார்.

சென்னை புரசைவாக்கத்தில் இரண்டு கோடி ரூபாய் செலவில் பம்பிங் ஸ்டேசன் அமைக்க மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் அடிக்கல் நாட்டினார்.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் ஜெயக்குமார், 'திமுகவில் ஏற்பட்டுள்ள பஞ்சம் காரணமாகவே தங்க.தமிழ்ச்செல்வனுக்கு கொள்கை பரப்புச் செயலாளர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. திமுகவில் உள்ளவர்கள் இதனை ஏற்றுக்கொள்வார்களா என்பது சந்தேகத்திற்குரியது. இந்த முடிவு ஸ்டாலினுடைய தனிப்பட்ட விருப்பம். கட்சியின் விருப்பமாக இருக்காது.

அதிமுகவில் இருந்து சென்றவர்களால் தான் திமுக இயங்குகிறது - அமைச்சர் ஜெயக்குமார்

திமுகவின் நடவடிக்கைகள் தற்போது ஸ்டாலினின் 'ஒன் மேன் ஷோ'வாக இருக்கிறது. திமுகவில், உதயநிதியின் மகனுக்குக்கூட புதுப்பிரிவை உருவாக்கி தலைவர் ஆக்குவார்கள். மேலும், அதிமுகவிலிருந்து சென்றவர்களால் தான் திமுக செயல்படுகிறது' என்றும் விமர்சித்தார்.

Intro:Body:அதிமுகவில் இருந்து சென்றவர்களால் தான் திமுக இயங்குகிறது என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

சென்னை புரசைவாக்கதில் குடிநீர் அடைப்பு ஏற்படாமல் தடுக்கும் பொருட்டு சுமார் 2 கோடி ரூபாய் செலவில் பம்பிங் ஸ்டேசன் அமைக்க மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் அடிக்கல் நாட்டினார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், பொதுமக்கள் கோரிக்கையை ஏற்று பம்பிங் ஸ்டேஷன் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றார். குடிநீர் வழங்கல் வாரியம் மூலம் இந்த பணிகள் 2 மாதங்களில் நிறைவடையும் என்றும்,
இதன் மூலம் 36 தெருக்களில் தண்ணீர் தேங்குவதையும் தடுக்க முடியும் என்றும் கூறினார்.
இயற்கை பேரிடர் வரும்போது எப்படி கையாள்வது என்பதில் அதிமுக விற்கு தனி பெருமை உண்டு என்றார்
நிஷா, கஜா, ஓக்கி போன்ற புயல்களை எதிர்கொண்டுள்ளோம் என்றும் அதன் மூலம் பயிற்சி பெற்றுள்ளோம் என்றும் தெரிவித்த அவர் தண்ணீர் பிரச்சினையையும் திறமையாக கையாள்வோம் என்றார்.
முதலமைச்சர் இல்லாத நிலையிலும் சட்ட மன்ற உறுப்பினர்கள் கூட்டு முயற்சியோடு மக்கள் நலனில் கவனம் செலுத்தி வருகிறோம் என்றும் பணிகளில் எந்த தொய்வும் இல்லை என்றும் கூறிய அமைச்சர், திமுகவில் ஏற்பட்டுள்ள பஞ்சம் காரணமாக தங்க தமிழ் செல்வனுக்கு கொள்கை பரப்பு செயலாளர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது என்றார். திமுகவில் உள்ளவர்கள் இதனை ஏற்றுக்கொள்வார்களா என்பது சந்தேகத்திற்குரியது என்றும், இது ஸ்டாலினுடைய தனிப்பட்ட விருப்பம் கட்சியின் விருப்பமாக இருக்காது என்றும் கூறிய அவர்,
திமுக என்பது தற்போது ஒன் மேன் ஷோவாக இருக்கிறது என்றும் அது ஸ்டாலின் ஷோ என்றும் கூறினார். உதய நிதியின் மகனுக்கு கூட கட்சியில் புது பிரிவை உருவாக்கி அதற்கு தலைவர் ஆக்குவார் என்றும் கூறினார். மேலும் திமுக, அதிமுக விலிருந்து சென்றவர்களால் செயல்படுகிறது என்றும் அவர் தெரிவித்தார்.
முதலமைச்சர் பழனிசாமியின் கோட் ஸூட் புகைப்படங்கள் குறித்த சமூக வலைதள கருத்துக்கள் தொடர்பாக பதிலளித்த அவர், தட்பவெப்ப நிலைக்கு ஏற்றவாறு ஆடை அணிந்து இருக்கிறார் என்றும் வெளிநாட்டில் தொழிலதிபர்கள் மத்தியில் அதுபோன்ற ஆடை அணிவது சரியானதுதான் என்றும் அவர் தெரிவித்தார். முதலமைச்சர் குறித்த மீம்ஸ் செய்பவர்களுக்கு அவர் தனது வாழ்த்துகளை தெரிவித்துக்கொண்டார். Visual has sent by Mojo kitConclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.