ETV Bharat / state

'தமிழ்நாட்டில் இருமொழிக் கொள்கைதான்' - ஜெயக்குமார்

சென்னை: தமிழ்நாட்டில் பேரறிஞர் அண்ணா வகுத்து தந்த இரு மொழிக் கொள்கையைத்தான் பின்பற்றுவோம் என்று மீன்வளத் துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

author img

By

Published : Jun 6, 2019, 2:48 PM IST

ஜெயகுமார்

சென்னை பட்டினம்பாக்கம் இல்லத்தில் மீன்வளத் துறை அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார். அப்போது, "தமிழ்நாட்டைப் பொறுத்தவரை பேரறிஞர் அண்ணா வகுத்து தந்த இரு மொழிக் கொள்கையைத்தான் பின்பற்றுவோம்.

பிற மாநிலங்களிலும் தமிழ் ஒலிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் நேற்றைய தினம் முதலமைச்சர் டிவிட்டர் பதிவு செய்திருந்தார், ஆனால் அதனை அரசியலாக்கி இருக்கின்றனர்.

கர்நாடகா, ஆந்திரா, டெல்லி போன்ற மாநிலங்களில் தமிழை விருப்ப மொழியாக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் வந்ததன் அடிப்படையில்தான் முதலமைச்சர் டிவிட்டர் மூலம் பிரதமருக்கு கோரிக்கைவைத்தார்.

அமைச்சர் ஜெயகுமார் செய்தியாளர் சந்திப்பு

ஆனால் அதனை தவறாக புரிந்துகொண்டவர்கள் அதனை அரசியலாக்கியதால் அந்த டிவிட்டர் பதிவு நீக்கப்பட்டது. எந்த நிலையிலும் இந்தியை ஏற்கமாட்டோம்.

நீட் தேர்வில் தோல்வி அடைந்ததால் இரு மாணவிகள் தற்கொலை செய்துகொண்டது வருத்தமளிக்கிறது. நீட் தேர்வு வேண்டாம் என்பதுதான் அதிமுகவின் நிலைப்பாடு. அதற்காக சட்டரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் உரிய அழுத்தத்தை கொடுத்துவருகிறோம்" என தெரிவித்தார்.

சென்னை பட்டினம்பாக்கம் இல்லத்தில் மீன்வளத் துறை அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார். அப்போது, "தமிழ்நாட்டைப் பொறுத்தவரை பேரறிஞர் அண்ணா வகுத்து தந்த இரு மொழிக் கொள்கையைத்தான் பின்பற்றுவோம்.

பிற மாநிலங்களிலும் தமிழ் ஒலிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் நேற்றைய தினம் முதலமைச்சர் டிவிட்டர் பதிவு செய்திருந்தார், ஆனால் அதனை அரசியலாக்கி இருக்கின்றனர்.

கர்நாடகா, ஆந்திரா, டெல்லி போன்ற மாநிலங்களில் தமிழை விருப்ப மொழியாக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் வந்ததன் அடிப்படையில்தான் முதலமைச்சர் டிவிட்டர் மூலம் பிரதமருக்கு கோரிக்கைவைத்தார்.

அமைச்சர் ஜெயகுமார் செய்தியாளர் சந்திப்பு

ஆனால் அதனை தவறாக புரிந்துகொண்டவர்கள் அதனை அரசியலாக்கியதால் அந்த டிவிட்டர் பதிவு நீக்கப்பட்டது. எந்த நிலையிலும் இந்தியை ஏற்கமாட்டோம்.

நீட் தேர்வில் தோல்வி அடைந்ததால் இரு மாணவிகள் தற்கொலை செய்துகொண்டது வருத்தமளிக்கிறது. நீட் தேர்வு வேண்டாம் என்பதுதான் அதிமுகவின் நிலைப்பாடு. அதற்காக சட்டரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் உரிய அழுத்தத்தை கொடுத்துவருகிறோம்" என தெரிவித்தார்.

*தமிழகத்தில் இருமொழிகொள்கை தான் தொடரும் இதுவே அரசின் நிலைப்பாடு என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.*

சென்னை பட்டினம்பாக்கம் இல்லத்தில் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது பேசிய அவர் தமிழகத்தை பொறுத்தவரை பேரறிஞர் அண்ணா வகுத்து தந்த இரு மொழி கொள்கை தான் பின்பற்றுவோம் என்றும்
பிற மாநிலங்களிலும் தமிழ் ஒலிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் நேற்றைய தினம் முதல்வர் டிவிட்டர் பதிவு செய்திருந்தார், ஆனால் அதனை அரசியலாக்கி இருக்கின்றனர்.

கர்நாடக, ஆந்திரா, டெல்லி போன்ற மாநிலங்களில் தமிழை விருப்ப மொழியாக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் முதல்வருக்கு வந்தன என்றும் அதன் அடிப்படையில் தான் முதல்வர் டிவிட்டர் மூலம் பிரதமருக்கு கோரிக்கை வைத்தார்.

ஆனால் அதனை தவறாக புரிந்து கொண்டவர்கள் அதனை அரசியலாக்கியதால் அந்த டிவிட்டர் பதிவு நீக்கப்பட்டது, எந்த நிலையிலும் இந்தியை ஏற்கமாட்டோம் இது தான் தமிழக அரசின் கொள்கை.

அனைவரும் படிக்க வேண்டும் ஒரு நல்ல நோக்கத்திற்காக பதிவுபட்ட டிவிட்டர் பதிவை  அரசியலாக்கியாதால் தான் நீக்கப்பட்டது.

நீட் தேர்வில் தோல்வி அடைந்த்தால் இரு மாணவிகள் தற்கொலை செய்து கொண்டது வருத்தமளிக்கிறது என்றும் நீட் தேர்வு வேண்டாம் என்பது எங்களின் நிலைப்பாடும் அதற்கான சட்டரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் உரிய அழுத்தை கொடுத்து வருகிறோம்.

திமுகவும், காங்கரஸூம் பிள்ளையையும் கிள்ளிவிட்டு தொட்டிலையும் ஆட்டுகின்றனர்.

தற்கொலை என்பது எதற்கும் தீர்வாகது, தன்னம்பிக்கையுடன் எதனையும் எதிர்கொள்ள வேண்டும் என்றார்.

ஏழுபேரை விடுதலை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை ஆளுநர் நிராகரிக்கவில்லை, அவர் நிச்சயம் நல்ல முடிவை அறிவிப்பார் என்ற அவர் 
உள்ளாட்சி தேர்தல் குறித்து உரிய நேரத்தில் ஆணையம் அறிவிக்கும்.

டிடிவி தினகரன் கட்சியினர் கடலில் கரைத்த உப்பை போல காணமல் போய்விட்டனர்,
பெரும்பலோனர் எங்கள் பக்கம் வந்து கொண்டிருக்கின்றனர்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.