ETV Bharat / state

சாலை விபத்தில் உயிரிழப்புக்கு இது காரணம் இல்லை சார்... இது தான் காரணம்!

சென்னை: இலவச தலைக்கவசம் வழங்கும் அரசாணை வெறும் கண்துடைப்பு நாடகமே என பால் முகவர் சங்கம் தெரிவித்துள்ளது.

author img

By

Published : Jun 13, 2019, 2:34 PM IST

File pic

சாலை விபத்துகளில் சிக்கி உயிரிழப்பதை தடுக்கும் பொருட்டு வாகன தயாரிப்பாளர்களோ அல்லது விற்பனையாளர்களோ புதிதாக இருசக்கர வாகனங்கள் வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு இந்திய தரச்சான்று உள்ள இரண்டு தலைக்கவசம் இலவசமாக வழங்க வேண்டும் என தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

இந்த அரசாணை குறித்து தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் சார்பில், அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் அவர்கள் தெரிவித்திருப்பதாவது, 'தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அரசாணையை தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் சார்பில் வரவேற்பதோடு, தமிழ்நாடு அரசுக்கு பாராட்டுகளையும், நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

ஆனால் இந்தத் திட்டத்தினால் பெரிய அளவில் நன்மைகள் நிகழ்ந்துவிடப் போவதில்லை என்பது மறுக்க முடியாத உண்மை.

இரண்டு சக்கர வாகனத்தில் பயணிப்போர் மட்டுமின்றி மூன்று சக்கர, நான்கு சக்கர வாகனங்களில் பயணிப்போரும் அதிக அளவில் சாலை விபத்துகளில் சிக்கி உயிரிழந்து வருகின்றனர்.

அவ்வாறு பெரும்பாலான சாலை விபத்துகள் நடைபெற கவனக்குறைவை விட மது குடித்து விட்டு வாகனங்களை இயக்குவதுதான் காரணம் என்பதை பல்வேறு புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

இளம் தலைமுறை சீரழிந்து போவதற்கும் காரணமான மதுவை முற்றிலுமாக தடைசெய்வதற்கான தமிழ்நாட்டில் பூரண மதுவிலக்கை அமல்படுத்தாமல் சாலை விபத்துகளில் உயிரிழப்பதை தடுக்க இலவச தலைக்கவசம் வழங்கிட அரசாணை பிறப்பிப்பது என்பது வெறும் கண்துடைப்பு நாடகமே.

தமிழ்நாடு முதலமைச்சர் பழனிசாமி, மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா அறிவித்த பூரண மதுவிலக்கு அமுல்படுத்தப்படும் என்கிற தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற துளி கூட முயற்சி எடுக்காமல் இருப்பது வேதனைக்குரிய விஷயம்.

எனவே புதிதாக இருசக்கர வாகனம் வாங்குவோருக்கு இரண்டு தலைக்கவசம் இலவசமாக வழங்கும் அரசாணையை விட தமிழ்நாடு முழுவதும் பூரண மது விலக்கை அமுல்படுத்த தேவையான நடவடிக்கைகளை அரசு எடுக்க வேண்டும்' என அதில் தெரிவித்திருந்தனர்.

சாலை விபத்துகளில் சிக்கி உயிரிழப்பதை தடுக்கும் பொருட்டு வாகன தயாரிப்பாளர்களோ அல்லது விற்பனையாளர்களோ புதிதாக இருசக்கர வாகனங்கள் வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு இந்திய தரச்சான்று உள்ள இரண்டு தலைக்கவசம் இலவசமாக வழங்க வேண்டும் என தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

இந்த அரசாணை குறித்து தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் சார்பில், அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் அவர்கள் தெரிவித்திருப்பதாவது, 'தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அரசாணையை தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் சார்பில் வரவேற்பதோடு, தமிழ்நாடு அரசுக்கு பாராட்டுகளையும், நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

ஆனால் இந்தத் திட்டத்தினால் பெரிய அளவில் நன்மைகள் நிகழ்ந்துவிடப் போவதில்லை என்பது மறுக்க முடியாத உண்மை.

இரண்டு சக்கர வாகனத்தில் பயணிப்போர் மட்டுமின்றி மூன்று சக்கர, நான்கு சக்கர வாகனங்களில் பயணிப்போரும் அதிக அளவில் சாலை விபத்துகளில் சிக்கி உயிரிழந்து வருகின்றனர்.

அவ்வாறு பெரும்பாலான சாலை விபத்துகள் நடைபெற கவனக்குறைவை விட மது குடித்து விட்டு வாகனங்களை இயக்குவதுதான் காரணம் என்பதை பல்வேறு புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

இளம் தலைமுறை சீரழிந்து போவதற்கும் காரணமான மதுவை முற்றிலுமாக தடைசெய்வதற்கான தமிழ்நாட்டில் பூரண மதுவிலக்கை அமல்படுத்தாமல் சாலை விபத்துகளில் உயிரிழப்பதை தடுக்க இலவச தலைக்கவசம் வழங்கிட அரசாணை பிறப்பிப்பது என்பது வெறும் கண்துடைப்பு நாடகமே.

தமிழ்நாடு முதலமைச்சர் பழனிசாமி, மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா அறிவித்த பூரண மதுவிலக்கு அமுல்படுத்தப்படும் என்கிற தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற துளி கூட முயற்சி எடுக்காமல் இருப்பது வேதனைக்குரிய விஷயம்.

எனவே புதிதாக இருசக்கர வாகனம் வாங்குவோருக்கு இரண்டு தலைக்கவசம் இலவசமாக வழங்கும் அரசாணையை விட தமிழ்நாடு முழுவதும் பூரண மது விலக்கை அமுல்படுத்த தேவையான நடவடிக்கைகளை அரசு எடுக்க வேண்டும்' என அதில் தெரிவித்திருந்தனர்.

Intro:இலவச தலைக்கவசம் வழங்கும் அரசாணை வெறும் கண்துடைப்பு நாடகமே என பால் முகவர் சங்கம் தெரிவித்துள்ளது. Body:இலவச தலைக்கவசம் வழங்கும் அரசாணை வெறும் கண்துடைப்பு நாடகமே - பால் முகவர்கள் சங்கம் குற்றச்சாட்டு

விபத்துகள் நடைபெற கவனக்குறைவை விட மது குடித்து விட்டு வாகனங்களை இயக்குவது தான் காரணம், அதைவிட்டு இலவச தலைக்கவசம் வழங்கும் அரசாணை வெறும் கண்துடைப்பு நாடகமே பால் முகவர்கள் சங்கம் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துளதாவது

சாலை விபத்துகளில் சிக்கி உயிரிழப்பதை தடுக்கும் பொருட்டு வாகன தயாரிப்பாளர்களோ அல்லது விற்பனையாளர்களோ புதிதாக இருசக்கர வாகனங்கள் வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு இந்திய தரச்சான்று உள்ள இரண்டு தலைக்கவசம் இலவசமாக வழங்க வேண்டும் என தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளதை தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் சார்பில் வரவேற்பதோடு, தமிழக அரசுக்கு பாராட்டுகளையும், நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

அதே நேரம் ஒரு தவறு நடந்தால் அதில் உயிரிழப்புகள் நடக்காமல் இருப்பதற்கான வழிமுறைகளை அமுல்படுத்தும் முயற்சியில் ஒருபகுதியாக புதிதாக இருசக்கர வாகனம் வாங்குவோருக்கு இரண்டு தலைக்கவசம் இலவசமாக வழங்கும் முயற்சி பாராட்டுக்குரியதாக தெரிந்தாலும் கூட உண்மையில் இந்த திட்டத்தினால் பெரிய அளவில் நன்மைகள் நிகழ்ந்து விடப் போவதில்லை என்பது மறுக்க முடியாத உண்மை.

இன்றைய சூழலில் சாலை விபத்துகளில் சிக்கி உயிரிழப்போர் இருசக்கர வாகனத்தில் பயணிப்பவர்கள் மட்டுமல்ல. அதுமட்டுமின்றி சாலையில் விபத்துகளை ஏற்படுத்துவதும் இருசக்கர வாகனங்கள் மட்டுமல்ல என்பதை தமிழக அரசு கவனத்தில் கொள்ள தவறி விட்டது என்பது தெள்ளத் தெளிவாக தெரிகிறது.

மேலும் இரண்டு சக்கர வாகனத்தில் பயணிப்போர் மட்டுமின்றி மூன்று சக்கர, நான்கு சக்கர வாகனங்களில் பயணிப்போரும் அதிக அளவில் சாலை விபத்துகளில் சிக்கி உயிரிழந்து வருகின்றனர். அவ்வாறு "பெரும்பாலான சாலை விபத்துகள் நடைபெற கவனக்குறைவை விட மது குடித்து விட்டு வாகனங்களை இயக்குவது தான் காரணம் என்பதை பல்வேறு புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

பெரும்பாலான சாலை விபத்துகள் நடைபெற மட்டுமல்ல புற்றுநோய் உள்ளிட்ட பல்வேறு நோய்களால் பாதிக்கப்பட்டுள்ள நோயாளிகளால் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகள் நிரம்பி வழிவதோடு தமிழகத்தில் இளம் விதவைகள் அதிகரிக்கவும்,தற்போது இளம் தலைமுறை சீரழிந்து போவதற்கும் காரணம் மதுவெனும் அரக்கன்"தான் என்பது தெரிந்தும் அதனை முற்றிலுமாக தடைசெய்வதற்கான, தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்த தேவையான பணிகளை முடுக்கி விடாமல் சாலை விபத்துகளில் சிக்கி உயிரிழப்பதை தடுக்க இலவச தலைக்கவசம் வழங்கிட அரசாணை பிறப்பிப்பது என்பது வெறும் கண்துடைப்பு நாடகமே.

சமீபத்தில் நடந்து முடிந்த ஆந்திரா சட்டப் பேரவை தேர்தலில் பெரும்பான்மையான இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்துள்ள ஓய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் தலைவரும், தற்போதைய ஆந்திரா முதல்வருமான ஜெகன் மோகன் ரெட்டி ஆந்திரா மாநிலத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்த முடிவு செய்து அதற்கான செயல்திட்டம் தயாரிக்கும் பணியை "ஜனசைத்தன்ய வேதிகா"என்கிற தொண்டு நிறுவனத்தின் தலைவரான லஷ்ம ரெட்டி என்பவரிடம் ஒப்படைத்துள்ளதாக தெரிய வருகிறது. ஆட்சிக்கு வந்த சில நாட்களிலேயே மக்கள் நலன் மீது அக்கறை கொண்டு சிந்தித்து செயல்பட தொடங்கியுள்ள ஆந்திரா முதல்வர் மக்களின் முதல்வராக தெரிகிறார்.

ஆனால் "மக்களால் நான் மக்களுக்காகவே நான்" என கர்ஜித்து கடந்த 2016ம் ஆண்டு தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற்ற போது தமிழகத்தில் படிப்படியாக பூரண மதுவிலக்கு அமுல்படுத்தப்படும் என ஜெயலலிதாஅளித்த தேர்தல் வாக்குறுதியானது கடலில் வீசப்பட்ட கல்லாகவும், கடலில் கரைக்கப்பட்ட பெருங்காயமாகவும் காணாமலேயே கிடக்கிறது. ஏனெனில் தமிழக மக்கள் செலக்டிவ் அம்னீசியா உள்ளவர்கள் என்கிற ஆட்சியாளர்களின் நம்பிக்கை தான் காரணம்.

அம்மா வழியில் ஆட்சி நடத்துவதாக தன்னை சுயவிளம்பரப்படுத்திக் கொண்டு, விவசாயிகள் வயிற்றில் அடிக்கும் "சேலம் எட்டு வழிச் சாலை" விவகாரத்தில் மிகுந்த அக்கறை காட்டும் தமிழக முதல்வர் எடப்பாடியார், ஜெயலலிதா அறிவித்த பூரண மதுவிலக்கு அமுல்படுத்தப்படும் என்கிற தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற துளி கூட முயற்சி எடுக்காமல் இருப்பது வேதனைக்குரிய விசயம்.

மக்கள் நலனில் அக்கறை உள்ளவர்கள் போல காட்டிக் கொள்ளும் அதிமுக தலைமையிலான தமிழக அரசு தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமுல்படுத்தி மதுவெனும் அரக்கனை ஒழிக்க தேவையான நடவடிக்கைகளை எடுத்திருந்தாலே தமிழகத்தில் அதிக அளவிலான சாலை விபத்துகள் தடுக்கப்பட்டு, அதனால் பொதுமக்கள் உயிரிழப்பது பெருமளவிற்கு குறைந்திருக்கும்.

எனவே புதிதாக இருசக்கர வாகனம் வாங்குவோருக்கு இரண்டு தலைக்கவசம் இலவசமாக வழங்கும் அரசாணையை விட தமிழகம் முழுவதும் பூரண மது விலக்கை அமுல்படுத்த தேவையான நடவடிக்கைகளை தமிழக அரசு எடுக்க வேண்டும் என தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் சார்பில் தமிழக முதல்வர் அவர்களை வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறோம்.

இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.