ETV Bharat / state

வெளிமாநிலங்களில் இருந்து தமிழகத்திற்குள் பிளாஸ்டிக் நுழைவதை தடுக்க அரசின் நடவடிக்கை என்ன? - பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 22, 2023, 10:39 PM IST

Madras High Court: வெளி மாநிலங்களில் இருந்து தமிழகத்திற்குள் பிளாஸ்டிக் பொருட்கள் நுழைவதைத் தடுக்க எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை குறித்து நேரில் ஆஜராகி விளக்கமளிக்க மூன்று துறைகளின் செயலாளர்கள் மற்றும் உணவு பாதுகாப்பு ஆணையர் மற்றும் தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியத் தலைவருக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Madras High Court
சென்னை உயர்நீதிமன்றம்

சென்னை: தமிழ்நாட்டில் கடந்த 2019 ஆம் ஆண்டு ஜனவரி முதல் ஒருமுறை பயன்படுத்தி வீசப்படும் 14 வகையான பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதித்து தமிழக அரசு அரசாணை பிறப்பித்தது. இந்த அரசாணையை எதிர்த்து தமிழ்நாடு மற்றும் புதுவை பிளாஸ்டிக் உற்பத்தியாளர் சங்கத்தின் சார்பில் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், அரசு உத்தரவை உறுதி செய்து தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பை மறு ஆய்வு செய்யக்கோரி பிளாஸ்டிக் உற்பத்தியாளர்கள் சங்கம் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மறு ஆய்வு மனு, நீதிபதிகள் S.வைத்தியநாதன், P.T.ஆஷா ஆகியோர் அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது, பிளாஸ்டிக் பொருட்கள் தடை செய்வது தொடர்பாக அமைக்கப்பட்ட நிபுணர் குழுவின் தற்போதைய நிலை என்ன? அந்த குழு எத்தனை முறை கூடி உள்ளது. அதில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன? என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த அரசு தரப்பு வழக்கறிஞர், பிளாஸ்டிக்கை தடை செய்வது தொடர்பாக கடந்த 2010 ஆம் ஆண்டு குழு அமைக்கப்பட்டு, கடந்த 2018 ஆம் ஆண்டு பிளாஸ்டிக் தடை செய்யப்பட்டதால், கடந்த 2018 ஆம் ஆண்டுக்குப் பிறகு அந்த குழு கூடவில்லை என்றார்.

தமிழகத்தில் பிளாஸ்டிக் தடை செய்யப்பட்டிருந்தாலும், இன்னும் தாரளமாக பிளாஸ்டிக் கிடைப்பதாகக் கூறிய நீதிபதிகள், வெளி மாநிலங்களில் இருந்து தமிழகத்திற்குள் பிளாஸ்டிக் நுழைவதைத் தடுக்க என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது? என கேள்வி எழுப்பினர். மாநில எல்லைகளில் சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளதாக அரசு தரப்பு வழக்கறிஞர் விளக்கமளித்தார்.

இதையடுத்து, நீதிமன்றம் பிறப்பித்த முந்தைய உத்தரவுகள் முறையாக அமல்படுத்தப்படவில்லை என அதிருப்தி தெரிவித்த நீதிபதிகள், இந்த விவகாரம் தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து நீதிமன்றத்திற்கு உதவும் வகையில் தமிழக சுற்றுச்சூழல் துறை, சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்கள் துறை, மற்றும் தொழில்துறை ஆகிய மூன்று துறைகளின் செயலாளர்கள் மற்றும் உணவு பாதுகாப்பு ஆணையர் மற்றும் மாசுக் கட்டுப்பாட்டு வாரியத் தலைவர் ஆகியோர் வரும் டிசம்பர் 4ஆம் தேதி நேரில் ஆஜராகி விளக்கமளிக்க உத்தரவிட்டு, விசாரணையை ஒத்திவைத்தனர்.

அப்போது, ஆஜரான கூடுதல் தலைமை வழக்கறிஞர் ஜெ.ரவீந்திரன், இந்த உத்தரவை திரும்ப பெற வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார். அதற்கு பதிலளித்த நீதிபதிகள், நீதிமன்றத்திற்கு உதவுவதற்காகவே ஆஜராக உத்தரவிட்டுள்ளதாகக் கூறினர்.

இதையும் படிங்க: செய்யாறு சிப்காட் விவகாரம்: அருள் மீதுள்ள குண்டர் சட்டத்தை நீக்க வேண்டும் - அறப்போர் இயக்கத்தினர்!

சென்னை: தமிழ்நாட்டில் கடந்த 2019 ஆம் ஆண்டு ஜனவரி முதல் ஒருமுறை பயன்படுத்தி வீசப்படும் 14 வகையான பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதித்து தமிழக அரசு அரசாணை பிறப்பித்தது. இந்த அரசாணையை எதிர்த்து தமிழ்நாடு மற்றும் புதுவை பிளாஸ்டிக் உற்பத்தியாளர் சங்கத்தின் சார்பில் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், அரசு உத்தரவை உறுதி செய்து தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பை மறு ஆய்வு செய்யக்கோரி பிளாஸ்டிக் உற்பத்தியாளர்கள் சங்கம் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மறு ஆய்வு மனு, நீதிபதிகள் S.வைத்தியநாதன், P.T.ஆஷா ஆகியோர் அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது, பிளாஸ்டிக் பொருட்கள் தடை செய்வது தொடர்பாக அமைக்கப்பட்ட நிபுணர் குழுவின் தற்போதைய நிலை என்ன? அந்த குழு எத்தனை முறை கூடி உள்ளது. அதில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன? என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த அரசு தரப்பு வழக்கறிஞர், பிளாஸ்டிக்கை தடை செய்வது தொடர்பாக கடந்த 2010 ஆம் ஆண்டு குழு அமைக்கப்பட்டு, கடந்த 2018 ஆம் ஆண்டு பிளாஸ்டிக் தடை செய்யப்பட்டதால், கடந்த 2018 ஆம் ஆண்டுக்குப் பிறகு அந்த குழு கூடவில்லை என்றார்.

தமிழகத்தில் பிளாஸ்டிக் தடை செய்யப்பட்டிருந்தாலும், இன்னும் தாரளமாக பிளாஸ்டிக் கிடைப்பதாகக் கூறிய நீதிபதிகள், வெளி மாநிலங்களில் இருந்து தமிழகத்திற்குள் பிளாஸ்டிக் நுழைவதைத் தடுக்க என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது? என கேள்வி எழுப்பினர். மாநில எல்லைகளில் சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளதாக அரசு தரப்பு வழக்கறிஞர் விளக்கமளித்தார்.

இதையடுத்து, நீதிமன்றம் பிறப்பித்த முந்தைய உத்தரவுகள் முறையாக அமல்படுத்தப்படவில்லை என அதிருப்தி தெரிவித்த நீதிபதிகள், இந்த விவகாரம் தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து நீதிமன்றத்திற்கு உதவும் வகையில் தமிழக சுற்றுச்சூழல் துறை, சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்கள் துறை, மற்றும் தொழில்துறை ஆகிய மூன்று துறைகளின் செயலாளர்கள் மற்றும் உணவு பாதுகாப்பு ஆணையர் மற்றும் மாசுக் கட்டுப்பாட்டு வாரியத் தலைவர் ஆகியோர் வரும் டிசம்பர் 4ஆம் தேதி நேரில் ஆஜராகி விளக்கமளிக்க உத்தரவிட்டு, விசாரணையை ஒத்திவைத்தனர்.

அப்போது, ஆஜரான கூடுதல் தலைமை வழக்கறிஞர் ஜெ.ரவீந்திரன், இந்த உத்தரவை திரும்ப பெற வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார். அதற்கு பதிலளித்த நீதிபதிகள், நீதிமன்றத்திற்கு உதவுவதற்காகவே ஆஜராக உத்தரவிட்டுள்ளதாகக் கூறினர்.

இதையும் படிங்க: செய்யாறு சிப்காட் விவகாரம்: அருள் மீதுள்ள குண்டர் சட்டத்தை நீக்க வேண்டும் - அறப்போர் இயக்கத்தினர்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.