ETV Bharat / state

மெட்ரோ ரயிலில் 3.81 கோடி பேர் பயணம்: மெட்ரோ நிர்வாகம்

சென்னை: மெட்ரோ ரயிலில் இதுவரை 3.81 கோடி பயணிகள் பயணம் செய்துள்ளதாக மெட்ரோ நிர்வாகம் அறிவித்துள்ளது.

author img

By

Published : May 15, 2019, 7:58 PM IST

மெட்ரோ ரயில்

இதுகுறித்து மெட்ரோ நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “சென்னையில் மெட்ரோ ரயில் சேவை கடந்த 2015ஆம் ஆண்டு ஜூன் 29ஆம் தேதி முதல் தொடங்கியது. சேவை தொடங்கிய நாள் முதல் இதுவரை சென்னையில் உள்ள மக்கள், அலுவலகங்களில் பணியாற்றுபவர்களுக்கு நம்பகமான போக்குவரத்து வசதியை தந்து வருகிறது. இதனால் நாளுக்கு நாள் பயணிகளின் எண்ணிக்கை சீராக உயர்ந்து வருகிறது.

metro train
பயணிகள் கூட்டம்

கடந்த 2015ஆம் ஆண்டு முதல் தற்போது வரை 3.81 கோடி பயணிகள் பயணம் செய்துள்ளனர். மேலும், அனைத்து ரயில் நிலையங்களையும் பராமரிப்பதில் ஒத்துழைப்பு வழங்கி வரும் அனைத்து பயணிகளுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மெட்ரோ நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “சென்னையில் மெட்ரோ ரயில் சேவை கடந்த 2015ஆம் ஆண்டு ஜூன் 29ஆம் தேதி முதல் தொடங்கியது. சேவை தொடங்கிய நாள் முதல் இதுவரை சென்னையில் உள்ள மக்கள், அலுவலகங்களில் பணியாற்றுபவர்களுக்கு நம்பகமான போக்குவரத்து வசதியை தந்து வருகிறது. இதனால் நாளுக்கு நாள் பயணிகளின் எண்ணிக்கை சீராக உயர்ந்து வருகிறது.

metro train
பயணிகள் கூட்டம்

கடந்த 2015ஆம் ஆண்டு முதல் தற்போது வரை 3.81 கோடி பயணிகள் பயணம் செய்துள்ளனர். மேலும், அனைத்து ரயில் நிலையங்களையும் பராமரிப்பதில் ஒத்துழைப்பு வழங்கி வரும் அனைத்து பயணிகளுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை மெட்ரோ ரயிலில் இதுவரை 3.81 கோடி பயணிகள் பயணம் செய்துள்ளதாக மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது .

இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துளதாவது 

சென்னை மெட்ரோ ரயில் சேவை கடந்த 2015-ம் ஆண்டு ஜூன் 29 முதல் சென்னையில் துவங்கியது. இதுவரை சென்னையில் உள்ள மக்களுக்கும் மற்றும் அரசு மற்றும் தனியார் அலுவலகங்களில் பணியாற்றுபவர்களுக்கு சென்னை மெட்ரோ ரயில் ஒரு நம்பகமான போக்குவரத்து வசதியை தந்து வருகிறது .இதை தவிர்த்து இணைப்பு போக்குவரத்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளது .தற்போது சில மெட்ரோ ரயில் நிலையங்களில் இயங்கி கொண்டு இருக்கும் ஷேர் ஆட்டோ மற்றும் ஷேர் டாக்ஸி சேவைகள் விரைவில் அணைத்து 32 மெட்ரோ நிலையங்களிலும் துவங்கிட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது .சென்னை மெட்ரோ ரயில் சேவைகளை துவங்கியதில் இருந்து நாளுக்கு நாள் பயணிகள் எண்ணிக்கை சீராக அதிகரித்து வருகிறது .

இதுவரை மொத்தம் 3,81,03,799 பயணிகள் மெட்ரோ ரயிலில் கடந்த 2015 ஜூன் 29ம் தேதி முதல் நேற்று வரை பயணித்து உள்ளார்கள் .

ஜூன் 2015 முதல் டிசம்பர் 2015 வரை     -        26,33,890

ஜனவரி 2016 முதல் டிசம்பர் 2016 வரை -         36,30,216

ஜனவரி 2017 முதல் டிசம்பர் 2017 வரை -        1,43,88,969

ஜனவரி 2019  முதல் மே 14-ம் தேதி  வரை -      1,0051,442

                                                             மொத்தம்   -       3,81,03,799


கடந்த 26-04-2019 அன்று 1,02,790 பயணிகள் மெட்ரோ ரயில் சேவையை பயன்படுத்தாளர்கள் என்றும் கடந்த 06-05-2019 அன்று 92,917 பயணிகளும் , 10-05-2019 அன்று 95,119 பயணிகளும் மெட்ரோ ரயிலில் பயணம் செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .

ஜனவரி 2019 - 17,36,744

பிப்ரவரி 2019 - 23,61,287

மார்ச் 2019 - 23,88,319

ஏப்ரல் 2019 - 11,34,379

2019 மே 1 முதல் 14 -ம் தேதி வரை - 11,34,379 

ஆஹா மொத்தம் 1,00,51,442 பேர் ஜனவரி முதல் நேற்றைய தேதி வரை பயணம் செய்துள்ளார்கள் .மெட்ரோ ரயில்கள் மற்றும் ரயில் நிலையங்களை பராமரிப்பதில் ஒத்துழைப்பு நல்கி வரும் அணைத்து பயணிகளுக்கும் மனமார்ந்த நன்றிகளை சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்து கொள்கிறது .

இவ்வாறு மெட்ரோ நிறுவனம் சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது .



ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.