ETV Bharat / state

வடகிழக்கு பருவ மழை வரும் 4ம் தேதி வரை பெய்யக்கூடும் - வானிலை ஆய்வு மைய தலைவர்

author img

By

Published : Oct 27, 2022, 8:55 PM IST

வடகிழக்கு பருவ மழையின் முதல் பகுதி தொடர் மழை வரும் 4ம் தேதி வரை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மைய தென்மண்டல தலைவர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

வடகிழக்கு பருவ மழை
வடகிழக்கு பருவ மழை

சென்னை: நுங்கம்பாக்கம் மண்டல வானிலை ஆய்வு மையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டல தலைவர் பாலசந்திரன், தென்மேற்கு பருவ மழை அக்டோபர் 23ம் தேதி விலகியது. வங்கடலில் சிட்ரங்(Sitrang) புயல் உருவாகி வங்கதேசத்தில் கரையைக் கடந்தது.

இதன் காரணமாக வடகிழக்கு பருவமழை துவங்கத் தாமதம் ஏற்பட்டது. வடகிழக்கு பருவமழை அக்டோபர் 29ம் தேதியொட்டி தென் இந்திய பகுதிகளில் துவங்கச் சாதகமான சூழல் நிலவுகிறது.

1988ல் அக்டோபர் 12ம் தேதி தென்மேற்கு பருவமழை விலகி நவம்பர் 20ம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கியது. பருவமழை காலதாமதமாகத் தொடங்குவது மழையின் தன்மை பாதிக்காது. அக்டோபர் மாதத்தில் இதுவரை 9 விழுக்காடு மழை கூடுதலாகப் பெய்துள்ளது. தென்மேற்கு பருவ மழை 47 செ.மீ பெய்துள்ளது. இது இயல்பை விட 45 சதவீதம் அதிகம். இயல்பு அளவு 32 செ.மீ ஆகும் எனத் தெரிவித்தார்.

வடகிழக்கு பருவமழை இந்தாண்டு இயல்பையொட்டி இருக்கும் என்றும் இந்திய பெருங்கடலின் இருமுனை துருவங்கள் நெகட்டிவ் என்ற அளவில் உள்ளதால் அதனால் தமிழ்நாட்டிற்கு பாதிப்பில்லை. பசுபிக் பெருங்கடலில் வெப்பநிலை லாநினோ என்ற நிலையில் உள்ளது. இதன் காரணி மட்டுமின்றி பல்வேறு காரணிகள் மூலம் மழைக்கான வாய்ப்பு உள்ளதால் தற்போது மழையின் வாய்ப்பை உறுதியாகக் கணிக்க முடியாது என விளக்கினார்.

தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில் வளிமண்டல சுழற்சியின் காரணமாகத் தமிழகம் மற்றும் புதுவை பகுதியில் அடுத்த 24 மணி நேரத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது. படிப்படியாக வரும் காலங்களில் மழை அதிகரிக்கக் கூடும். நவம்பர் 4ம் தேதி வரை தமிழகத்தின் பெரும்பாலான இடங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கும் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.

வடகிழக்கு பருவ மழை தாமதமாகத் தொடங்குவதால் தாமதமாக வெளியேறும் என்றில்லை. சென்னை மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் தாலுகா அளவில் வானிலை முன்னறிவிப்புகள் வழங்குவதற்குச் சோதனை முறையில் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது எனக் கூறிய அவர் வடகிழக்கு பருவமழையின் முதல் பகுதி தொடர் மழை ( 1st rain Spell ) வரும் 4ம் தேதி வரை பெய்யக்கூடும் அதன் பிறகு மழை குறைந்து மீண்டும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: பாதுகாப்பற்ற முறையில் மழைநீர் வடிகால் பணி: மக்கள் நீதி மய்யம் சார்பில் ஆர்ப்பாட்டம்

சென்னை: நுங்கம்பாக்கம் மண்டல வானிலை ஆய்வு மையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டல தலைவர் பாலசந்திரன், தென்மேற்கு பருவ மழை அக்டோபர் 23ம் தேதி விலகியது. வங்கடலில் சிட்ரங்(Sitrang) புயல் உருவாகி வங்கதேசத்தில் கரையைக் கடந்தது.

இதன் காரணமாக வடகிழக்கு பருவமழை துவங்கத் தாமதம் ஏற்பட்டது. வடகிழக்கு பருவமழை அக்டோபர் 29ம் தேதியொட்டி தென் இந்திய பகுதிகளில் துவங்கச் சாதகமான சூழல் நிலவுகிறது.

1988ல் அக்டோபர் 12ம் தேதி தென்மேற்கு பருவமழை விலகி நவம்பர் 20ம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கியது. பருவமழை காலதாமதமாகத் தொடங்குவது மழையின் தன்மை பாதிக்காது. அக்டோபர் மாதத்தில் இதுவரை 9 விழுக்காடு மழை கூடுதலாகப் பெய்துள்ளது. தென்மேற்கு பருவ மழை 47 செ.மீ பெய்துள்ளது. இது இயல்பை விட 45 சதவீதம் அதிகம். இயல்பு அளவு 32 செ.மீ ஆகும் எனத் தெரிவித்தார்.

வடகிழக்கு பருவமழை இந்தாண்டு இயல்பையொட்டி இருக்கும் என்றும் இந்திய பெருங்கடலின் இருமுனை துருவங்கள் நெகட்டிவ் என்ற அளவில் உள்ளதால் அதனால் தமிழ்நாட்டிற்கு பாதிப்பில்லை. பசுபிக் பெருங்கடலில் வெப்பநிலை லாநினோ என்ற நிலையில் உள்ளது. இதன் காரணி மட்டுமின்றி பல்வேறு காரணிகள் மூலம் மழைக்கான வாய்ப்பு உள்ளதால் தற்போது மழையின் வாய்ப்பை உறுதியாகக் கணிக்க முடியாது என விளக்கினார்.

தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில் வளிமண்டல சுழற்சியின் காரணமாகத் தமிழகம் மற்றும் புதுவை பகுதியில் அடுத்த 24 மணி நேரத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது. படிப்படியாக வரும் காலங்களில் மழை அதிகரிக்கக் கூடும். நவம்பர் 4ம் தேதி வரை தமிழகத்தின் பெரும்பாலான இடங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கும் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.

வடகிழக்கு பருவ மழை தாமதமாகத் தொடங்குவதால் தாமதமாக வெளியேறும் என்றில்லை. சென்னை மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் தாலுகா அளவில் வானிலை முன்னறிவிப்புகள் வழங்குவதற்குச் சோதனை முறையில் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது எனக் கூறிய அவர் வடகிழக்கு பருவமழையின் முதல் பகுதி தொடர் மழை ( 1st rain Spell ) வரும் 4ம் தேதி வரை பெய்யக்கூடும் அதன் பிறகு மழை குறைந்து மீண்டும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: பாதுகாப்பற்ற முறையில் மழைநீர் வடிகால் பணி: மக்கள் நீதி மய்யம் சார்பில் ஆர்ப்பாட்டம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.