ETV Bharat / state

கல்விக் கட்டணத்தை எதிர்த்து மருத்துவக் கல்லூரி மாணவர்கள் இன்று ஆர்ப்பாட்டம்!

author img

By

Published : Jan 28, 2021, 8:37 AM IST

சென்னை: ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி, ராஜா முத்தையா பல் மருத்துவக் கல்லூரி, ஈரோடு அரசு மருத்துவக் கல்லூரி ஆகியவற்றின் கல்விக் கட்டணத்தை இதர தமிழ்நாடு அரசு மருத்துவக் கல்லூரிகளுக்கு இணையாக குறைத்திட வேண்டும் என்பதை வலியுறுத்தி மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடவுள்ளனர்.

medical-college-students-protest-against-tuition-fees
medical-college-students-protest-against-tuition-fees

சென்னை, சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி, பல் மருத்துவக் கல்லூரி கட்டணங்களை குறைக்க வலியுறுத்தி போராடி வரும் மாணவர்களுக்கு ஆதரவாக தமிழ்நாடு முழுவதும் மருத்துவக் கல்லூரி மாணவர்கள் இன்று (ஜனவரி 28) ஆர்ப்பாட்டம் நடத்துவார்கள் என தமிழ்நாடு மருத்துவ மாணவர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

இது குறித்து தமிழ்நாடு மருத்துவ மாணவர் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஹரி கணேஷ் வெளியிட்டுள்ள அறிவிப்பில், தமிழ்நாடு முழுவதும் மருத்துவக் கல்லூரி மாணவர்கள் 28ஆம் தேதி போராடும் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மற்றும் பல் மருத்துவக் கல்லூரி மாணவர்களுக்கு ஆதரவாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுகின்றனர்.

தமிழ்நாடு அரசு மருத்துவக் கல்லூரிகளில் எம்பிபிஎஸ் படிப்பிற்கு 13,600 ரூபாயும், எம்.டி, எம்.எஸ் படிப்புகளுக்கு 27 ஆயிரம் ரூபாயும், பி.டி.எஸ் படிப்பிற்கு 11 ஆயிரத்து 610 ரூபாயும், எம்.டி.எஸ் படிப்புக்கு 27 ஆயிரம் ரூபாயும் மட்டுமே கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. ஆனால் தமிழ்நாடு அரசே ஏற்று நடத்தி வரும் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரியில் எம்.பி.பி.எஸ் படிக்கும் மாணவர்களுக்கு 5 லட்சத்து 40 ஆயிரமும், பி.டி.எஸ் படிக்கும் மாணவர்களுக்கு 3 லட்சத்து 50 ஆயிரமும், எம்.டி.எம்.எஸ் படிக்கும் மாணவர்களுக்கு 9 லட்சத்து 60 ஆயிரம் ரூபாயும் கல்வி கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டு வசூலிக்கப்படுகிறது.

ஈரோடு அரசு மருத்துவக் கல்லூரியில் எம்பிபிஎஸ் படிப்புக்கு கல்வி கட்டணமாக 3 லட்சத்து 85 ஆயிரம் வசூலிக்கப்படுகிறது. இந்த கட்டண கொள்ளை ஏழை எளிய மாணவர்களை வாட்டி வதைக்கிறது. இந்தக் கொள்ளையை எதிர்த்து அந்த கல்லூரிகளில் மாணவர்கள் கடந்த 50 நாட்களாக அறவழிப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்கு தமிழ்நாடு மருத்துவ மாணவர்கள் சங்கம் முழுமையான ஆதரவை தெரிவிக்கிறது.

ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி, ராஜா முத்தையா பல் மருத்துவக் கல்லூரி, ஈரோடு அரசு மருத்துவக் கல்லூரி ஆகியவற்றில் கல்விக் கட்டணத்தை இதர தமிழ்நாடு அரசு மருத்துவக் கல்லூரிகளுக்கு இணையாக குறைத்திட வேண்டும். ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மற்றும் பல் மருத்துவக் கல்லூரியை தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழகத்துடன் இணைத்திட வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு மருத்துவ மாணவர்கள் சங்கத்தின் சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:மாஸ்டர் படத்தில் விஜய் பார்த்த வேலை காலியாக உள்ளது!

சென்னை, சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி, பல் மருத்துவக் கல்லூரி கட்டணங்களை குறைக்க வலியுறுத்தி போராடி வரும் மாணவர்களுக்கு ஆதரவாக தமிழ்நாடு முழுவதும் மருத்துவக் கல்லூரி மாணவர்கள் இன்று (ஜனவரி 28) ஆர்ப்பாட்டம் நடத்துவார்கள் என தமிழ்நாடு மருத்துவ மாணவர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

இது குறித்து தமிழ்நாடு மருத்துவ மாணவர் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஹரி கணேஷ் வெளியிட்டுள்ள அறிவிப்பில், தமிழ்நாடு முழுவதும் மருத்துவக் கல்லூரி மாணவர்கள் 28ஆம் தேதி போராடும் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மற்றும் பல் மருத்துவக் கல்லூரி மாணவர்களுக்கு ஆதரவாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுகின்றனர்.

தமிழ்நாடு அரசு மருத்துவக் கல்லூரிகளில் எம்பிபிஎஸ் படிப்பிற்கு 13,600 ரூபாயும், எம்.டி, எம்.எஸ் படிப்புகளுக்கு 27 ஆயிரம் ரூபாயும், பி.டி.எஸ் படிப்பிற்கு 11 ஆயிரத்து 610 ரூபாயும், எம்.டி.எஸ் படிப்புக்கு 27 ஆயிரம் ரூபாயும் மட்டுமே கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. ஆனால் தமிழ்நாடு அரசே ஏற்று நடத்தி வரும் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரியில் எம்.பி.பி.எஸ் படிக்கும் மாணவர்களுக்கு 5 லட்சத்து 40 ஆயிரமும், பி.டி.எஸ் படிக்கும் மாணவர்களுக்கு 3 லட்சத்து 50 ஆயிரமும், எம்.டி.எம்.எஸ் படிக்கும் மாணவர்களுக்கு 9 லட்சத்து 60 ஆயிரம் ரூபாயும் கல்வி கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டு வசூலிக்கப்படுகிறது.

ஈரோடு அரசு மருத்துவக் கல்லூரியில் எம்பிபிஎஸ் படிப்புக்கு கல்வி கட்டணமாக 3 லட்சத்து 85 ஆயிரம் வசூலிக்கப்படுகிறது. இந்த கட்டண கொள்ளை ஏழை எளிய மாணவர்களை வாட்டி வதைக்கிறது. இந்தக் கொள்ளையை எதிர்த்து அந்த கல்லூரிகளில் மாணவர்கள் கடந்த 50 நாட்களாக அறவழிப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்கு தமிழ்நாடு மருத்துவ மாணவர்கள் சங்கம் முழுமையான ஆதரவை தெரிவிக்கிறது.

ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி, ராஜா முத்தையா பல் மருத்துவக் கல்லூரி, ஈரோடு அரசு மருத்துவக் கல்லூரி ஆகியவற்றில் கல்விக் கட்டணத்தை இதர தமிழ்நாடு அரசு மருத்துவக் கல்லூரிகளுக்கு இணையாக குறைத்திட வேண்டும். ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மற்றும் பல் மருத்துவக் கல்லூரியை தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழகத்துடன் இணைத்திட வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு மருத்துவ மாணவர்கள் சங்கத்தின் சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:மாஸ்டர் படத்தில் விஜய் பார்த்த வேலை காலியாக உள்ளது!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.