ETV Bharat / state

கரோனா என்ற பெயரில் கொள்ளையடிக்கும் அரசு - பாலகிருஷ்ணன் குற்றச்சாட்டு

author img

By

Published : Sep 16, 2020, 7:10 PM IST

சென்னை: கரோனா என்ற பெயரில் ஏழாயிரம் கோடி ரூபாயை அரசு கொள்ளையடித்துள்ளதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் குற்றஞ்சாட்டினார்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் செய்தியாளர்ச் சந்திப்பு...!
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் செய்தியாளர்ச் சந்திப்பு...!

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி மீது பொய்யான வழக்குகளை தொடுக்கும் மத்திய அரசை கண்டித்து அக்கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதில், மாநிலச் செயலாளர் பாலகிருஷ்ணன் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்பொழுது மத்திய, மாநில அரசுகளை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டன.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த பாலகிருஷ்ணன், “மத்தியில் ஆளுகின்ற பாஜக, சர்வாதிகார ஆட்சியை நடத்திவருகிறது. அரசியல் சட்டம் வழங்கப்பட்டுள்ள அடிப்படை உரிமைகளின் படி எதிர்க்கட்சித் தலைவர்கள் இந்த ஆட்சியை விமர்சிக்கும் போது, அந்த அடிப்படை உரிமையை பறிக்க கூடிய வகையில் பொய் வழக்குகள் போட்டுகின்றனர். குறிப்பாக எதிர்க்கட்சித் தலைவர்கள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினுடைய பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி, பேராசிரியர் ஜெயதிகோஷ் உள்ளிட்ட தலைவர்களின் மீது நீதிமன்றத்தில் வழக்குகளை பதிவு செய்துள்ளனர். இதனை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பாக அனைத்து இடங்களிலும் ஆர்ப்பாட்டம் நடை பெற்று வருகிறது” எனத் தெரிவித்தார்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் செய்தியாளர்ச் சந்திப்பு...!

மேலும், “நீட் தேர்வை பொறுத்தவரை தமிழ்நாடு சட்டப்பேரவையில் மசோதா ஒன்றை நிறைவேற்றி குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைத்தோம். அதற்கான பதில் இல்லாத நிலையில் அதனை எதிர்த்து நீதிமன்றத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வழக்கு தொடராமல் இருப்பது ஏன் என்றும், கரோனா வைரஸ் தொற்றுக்காக ஏழாயிரம் கோடி செலவு செய்து இருப்பதாக குறிப்பிடுகின்றனர். ஆனால் சிறப்பாக பணியாற்றிய மருத்துவர்களுக்கு கூட சம்பளத்தை வழங்க வில்லை. கரோனா என்ற பெயரில் கொள்ளை அடித்து இருக்கின்றனர் எனவும் குற்றஞ்சாட்டினார்.

இதையும் படிங்க...2020-2021ஆம் ஆண்டின் முதல் துணை மதிப்பீடுகளுக்கு ரூ.12,845.20 கோடி நிதி ஒதுக்கீடு!

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி மீது பொய்யான வழக்குகளை தொடுக்கும் மத்திய அரசை கண்டித்து அக்கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதில், மாநிலச் செயலாளர் பாலகிருஷ்ணன் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்பொழுது மத்திய, மாநில அரசுகளை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டன.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த பாலகிருஷ்ணன், “மத்தியில் ஆளுகின்ற பாஜக, சர்வாதிகார ஆட்சியை நடத்திவருகிறது. அரசியல் சட்டம் வழங்கப்பட்டுள்ள அடிப்படை உரிமைகளின் படி எதிர்க்கட்சித் தலைவர்கள் இந்த ஆட்சியை விமர்சிக்கும் போது, அந்த அடிப்படை உரிமையை பறிக்க கூடிய வகையில் பொய் வழக்குகள் போட்டுகின்றனர். குறிப்பாக எதிர்க்கட்சித் தலைவர்கள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினுடைய பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி, பேராசிரியர் ஜெயதிகோஷ் உள்ளிட்ட தலைவர்களின் மீது நீதிமன்றத்தில் வழக்குகளை பதிவு செய்துள்ளனர். இதனை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பாக அனைத்து இடங்களிலும் ஆர்ப்பாட்டம் நடை பெற்று வருகிறது” எனத் தெரிவித்தார்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் செய்தியாளர்ச் சந்திப்பு...!

மேலும், “நீட் தேர்வை பொறுத்தவரை தமிழ்நாடு சட்டப்பேரவையில் மசோதா ஒன்றை நிறைவேற்றி குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைத்தோம். அதற்கான பதில் இல்லாத நிலையில் அதனை எதிர்த்து நீதிமன்றத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வழக்கு தொடராமல் இருப்பது ஏன் என்றும், கரோனா வைரஸ் தொற்றுக்காக ஏழாயிரம் கோடி செலவு செய்து இருப்பதாக குறிப்பிடுகின்றனர். ஆனால் சிறப்பாக பணியாற்றிய மருத்துவர்களுக்கு கூட சம்பளத்தை வழங்க வில்லை. கரோனா என்ற பெயரில் கொள்ளை அடித்து இருக்கின்றனர் எனவும் குற்றஞ்சாட்டினார்.

இதையும் படிங்க...2020-2021ஆம் ஆண்டின் முதல் துணை மதிப்பீடுகளுக்கு ரூ.12,845.20 கோடி நிதி ஒதுக்கீடு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.