ETV Bharat / state

திருமணமாகாத விரக்தியில் தற்கொலை செய்துகொண்டவருக்கு கரோனா!

author img

By

Published : May 18, 2020, 3:46 PM IST

சென்னை: திருமணமாகாத விரக்தியில் ஆறாவது மாடியிலிருந்து கீழே விழுந்து தற்கொலை செய்துகொண்ட நபருக்கு கரோனா தொற்று இருந்தது கண்டறியப்பட்டது.

corona virus positive
corona virus positive

சென்னை ஆயிரம் விளக்கு ஹாடஸ் சாலையில் வசித்து வருபவர் சுதர்சன் சாரி (45). புகைப்படக்காரரான இவர் தனது தாய் சித்ராவுடன் வசித்து வந்தார். தனக்கு 45 வயதாகியும் திருமணமாகாததால் நீண்ட நாள்களாக மன உளைச்சலில் இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது.


இச்சூழலில் சுதர்சன் நேற்று காலை திடீரென்று வீட்டின் ஆறாவது மாடிக்குச் சென்று, மேலிருந்து கீழே குதித்துள்ளார். இதில் சம்பவ இடத்திலேயே சுதர்சன் உயிரிழந்தார். தகவலறிந்து நுங்கம்பாக்கம் காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். அதன்பின் சுதர்சனின் உடலைக் கைப்பற்றி உடற்கூறாய்வுக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பரிசோதனை முடிவில் அவருக்கு கரோனா தொற்று இருந்தது கண்டறியப்பட்டுள்ளது. அவருக்கு கரோனா தொற்று இருந்ததால், பெற்றோரின் ஒப்புதலோடு அவரின் உடல் நுங்கம்பாக்கத்தில் உள்ள மயானத்தில் எரிக்கப்பட்டது.

இதையும் படிங்க: திடீரென மயக்கமடைந்து இறந்தவருக்கு கரோனா

சென்னை ஆயிரம் விளக்கு ஹாடஸ் சாலையில் வசித்து வருபவர் சுதர்சன் சாரி (45). புகைப்படக்காரரான இவர் தனது தாய் சித்ராவுடன் வசித்து வந்தார். தனக்கு 45 வயதாகியும் திருமணமாகாததால் நீண்ட நாள்களாக மன உளைச்சலில் இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது.


இச்சூழலில் சுதர்சன் நேற்று காலை திடீரென்று வீட்டின் ஆறாவது மாடிக்குச் சென்று, மேலிருந்து கீழே குதித்துள்ளார். இதில் சம்பவ இடத்திலேயே சுதர்சன் உயிரிழந்தார். தகவலறிந்து நுங்கம்பாக்கம் காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். அதன்பின் சுதர்சனின் உடலைக் கைப்பற்றி உடற்கூறாய்வுக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பரிசோதனை முடிவில் அவருக்கு கரோனா தொற்று இருந்தது கண்டறியப்பட்டுள்ளது. அவருக்கு கரோனா தொற்று இருந்ததால், பெற்றோரின் ஒப்புதலோடு அவரின் உடல் நுங்கம்பாக்கத்தில் உள்ள மயானத்தில் எரிக்கப்பட்டது.

இதையும் படிங்க: திடீரென மயக்கமடைந்து இறந்தவருக்கு கரோனா

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.