ETV Bharat / state

குரூப் 1 பணியிடங்களுக்கான முதன்மைத்தேர்வு எழுதுபவர்கள் மே 16-க்குள் சான்றிதழ்களை பதிவேற்றவேண்டும்!

author img

By

Published : May 5, 2023, 10:30 PM IST

குரூப் 1 பணியிடங்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் முதன்மை எழுத்துத் தேர்வுக்கு தற்காலிகமாக தேர்வு செய்யப்பட்டுள்ளவர்கள் வரும் மே 8ஆம் தேதி முதல் 16ஆம் தேதிக்குள் சான்றிதழ்களைப் பதிவேற்றம் செய்ய வேண்டும் என தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது.

Etv Bharat
Etv Bharat

சென்னை: தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் குரூப் 1 பதவிகளில் அடங்கிய துணை ஆட்சியர், காவல் துணை கண்காணிப்பாளர், உள்ளிட்ட 92 காலி பணியிடங்களுக்கான தேர்வை 2022 நவம்பர் 19ஆம் தேதி நடத்தியது. முதல் நிலைத் தேர்வினை மூன்று லட்சத்திற்கும் அதிகமானோர் எழுதினர்.

இதன் முடிவுகள் ஏப்ரல் 28ஆம் தேதி வெளியிடப்பட்டுள்ளது. மேலும் முதன்மைத் தேர்வு ஆகஸ்ட் 10ஆம் தேதி முதல் 13ஆம் தேதி வரையில் எழுதுவதற்கு ஒரு பணியிடத்திற்கு 20 பேர் வீதம் அழைக்கப்பட்டுள்ளனர். முதன்மைத் தேர்வு எழுதவுள்ள நபர்களின் சான்றிதழ் சரிபார்ப்பிற்கான ஆவணங்களை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்திற்கு ஸ்கேன் செய்து பதிவேற்றம் செய்ய வேண்டும் எனக் கூறியுள்ளது.

இது குறித்து தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலர் அஜய்யாதவ் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ''குரூப் 1 தேர்வு முதல் நிலைத் தேர்வில் வெற்றி பெற்ற தேர்வர்கள் மே 8ஆம் தேதி முதல் 16ஆம் தேதி வரை தங்களுடைய அசல் சான்றிதழ்களை ஸ்கேன் செய்து தேர்வாணைய இணையதளத்தில் அரசு இ-சேவை மையங்கள் மூலமாக பதிவேற்றம் செய்ய வேண்டும்.

மேலும் முதன்மை எழுத்துத் தேர்விற்கு தேர்வுக் கட்டண விலக்குப் பெறாத தேர்வர்கள் முதன்மைத் தேர்வுக்குரிய தேர்வுக் கட்டணமாக 200 ரூபாய் 15ஆம் தேதிக்குள் செலுத்தப்பட வேண்டும். தேர்வுக் கட்டணத்தை செலுத்தியப் பின்னரே ஆவணங்களைப் பதிவேற்றம் செய்ய முடியும்.

தேர்வர்கள் அசல் சான்றிதழ்களை குறிப்பிட்ட தேதிகளுக்குள் பதிவேற்றம் செய்யப்படவில்லை என்றால், அவர்கள் முதன்மைத் தேர்வு எழுத அனுமதிக்கப்படமாட்டார் எனவும், முதன்மைத் தேர்வில் கலந்துக் கொள்ள விரும்பவில்லை எனக் கருதி விண்ணப்பம் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படமாட்டாது'' எனத் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: பொறியியல் கலந்தாய்வு ஆகஸ்ட் 2ல் தொடக்கம்; கலை அறிவியல் கல்லூரிக்கு 8ம் தேதி முதல் விண்ணப்பம்!

சென்னை: தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் குரூப் 1 பதவிகளில் அடங்கிய துணை ஆட்சியர், காவல் துணை கண்காணிப்பாளர், உள்ளிட்ட 92 காலி பணியிடங்களுக்கான தேர்வை 2022 நவம்பர் 19ஆம் தேதி நடத்தியது. முதல் நிலைத் தேர்வினை மூன்று லட்சத்திற்கும் அதிகமானோர் எழுதினர்.

இதன் முடிவுகள் ஏப்ரல் 28ஆம் தேதி வெளியிடப்பட்டுள்ளது. மேலும் முதன்மைத் தேர்வு ஆகஸ்ட் 10ஆம் தேதி முதல் 13ஆம் தேதி வரையில் எழுதுவதற்கு ஒரு பணியிடத்திற்கு 20 பேர் வீதம் அழைக்கப்பட்டுள்ளனர். முதன்மைத் தேர்வு எழுதவுள்ள நபர்களின் சான்றிதழ் சரிபார்ப்பிற்கான ஆவணங்களை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்திற்கு ஸ்கேன் செய்து பதிவேற்றம் செய்ய வேண்டும் எனக் கூறியுள்ளது.

இது குறித்து தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலர் அஜய்யாதவ் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ''குரூப் 1 தேர்வு முதல் நிலைத் தேர்வில் வெற்றி பெற்ற தேர்வர்கள் மே 8ஆம் தேதி முதல் 16ஆம் தேதி வரை தங்களுடைய அசல் சான்றிதழ்களை ஸ்கேன் செய்து தேர்வாணைய இணையதளத்தில் அரசு இ-சேவை மையங்கள் மூலமாக பதிவேற்றம் செய்ய வேண்டும்.

மேலும் முதன்மை எழுத்துத் தேர்விற்கு தேர்வுக் கட்டண விலக்குப் பெறாத தேர்வர்கள் முதன்மைத் தேர்வுக்குரிய தேர்வுக் கட்டணமாக 200 ரூபாய் 15ஆம் தேதிக்குள் செலுத்தப்பட வேண்டும். தேர்வுக் கட்டணத்தை செலுத்தியப் பின்னரே ஆவணங்களைப் பதிவேற்றம் செய்ய முடியும்.

தேர்வர்கள் அசல் சான்றிதழ்களை குறிப்பிட்ட தேதிகளுக்குள் பதிவேற்றம் செய்யப்படவில்லை என்றால், அவர்கள் முதன்மைத் தேர்வு எழுத அனுமதிக்கப்படமாட்டார் எனவும், முதன்மைத் தேர்வில் கலந்துக் கொள்ள விரும்பவில்லை எனக் கருதி விண்ணப்பம் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படமாட்டாது'' எனத் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: பொறியியல் கலந்தாய்வு ஆகஸ்ட் 2ல் தொடக்கம்; கலை அறிவியல் கல்லூரிக்கு 8ம் தேதி முதல் விண்ணப்பம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.