ETV Bharat / state

செந்தில் பாலாஜி ஜாமீன் கோரிய வழக்கில் நாளை தீர்ப்பு!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 18, 2023, 10:21 PM IST

Senthil Balaji bail petition: சட்டவிரோத பணபரிமாற்ற வழக்கில் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு மீதான வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் நாளை (அக்.19) தீர்ப்பு வழங்குகிறது.

Etv Bharat
Etv Bharat

சென்னை: சட்டவிரோத பண பரிமாற்ற தடை சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறையால் அமைச்சர் செந்தில் பாலாஜி கடந்த ஜூன் 14ஆம் தேதி கைது செய்யப்பட்டார். இந்நிலையில், இந்த வழக்கில் செந்தில் பாலாஜிக்கு எதிராக சுமார் மூவாயிரம் பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகை மற்றும் ஆவணங்கள் கடந்த ஆகஸ்ட் 12ஆம் தேதி அமலாக்கத் துறையால் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.

இந்நிலையில், சென்னை உயர்நீதிமன்ற உத்தரவின் படி, ஜாமீன் கோரி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் செந்தில் பாலாஜி தரப்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. ஜாமீன் மனுவை விசாரித்த முதன்மை அமர்வு நீதிமன்றம், செந்தில் பாலாஜி தரப்பில் குற்றம் செய்யவில்லை என்பதற்கான ஆதாரங்களை நிரூபிக்கவில்லை என தெரிவித்து, செப்.20ஆம் தேதி ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

இந்த நிலையில், அமைச்சர் செந்தில் பாலாஜி தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட ஜாமீன் மனு உயர்நீதிமன்ற நீதிபதி ஜெயச்சந்திரன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, அமலாக்கத்துறை சார்பில், அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. தொடர்ந்து செந்தில்பாலாஜி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், அமைச்சர் கைது செய்யப்பட்ட போது உரிய விதிமுறை பின்பற்றப்படவில்லை என நீதிமன்றம் கருதினால் ஜாமீன் வழங்கலாம் என பல்வேறு தீர்ப்புகள் கூறுகிறது.

கைது செய்யப்படுவதற்கு முன் அமைச்சரிடமோ? அவரது உறவினரிடமோ? உரிய விளக்கம் அளிக்கப்படவில்லை. நெஞ்சுவலிக்கு நீண்டகாலமாக மருத்துவ சிகிச்சையில் இருப்பதால் ஜாமீன் வழங்க வேண்டும். அமைச்சர் அதிகாரத்தில் உள்ளவர் என்பதால் ஜாமீன் வழங்க அமலாக்கத்துறை எதிர்ப்பு தெரிவிக்கிறது. ஸ்டான்லி மருத்துவமனையில் 13 மருத்துவர்கள் கொண்ட குழு அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு அக்.09ஆம் தேதி சிகிச்சை அளித்தது. மருத்துவ அறிக்கையில் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளனர்.

மருத்துவ சிகிச்சையில் இருப்பவர் அவருக்கான உரிமைகளை பெற சட்டம் அனுமதி வழங்குகிறது. 15 நிமிடங்களுக்கு மேல் நிற்க முடியாத அளவுக்கு அமைச்சர் செந்தில் பாலாஜி பாதிக்கப்பட்டுள்ளார். தொடர்ந்து மருத்துவர்கள் கண்கானிப்பில் இருக்க வேண்டும் என்பதால் ஜாமீன் வழங்க வேண்டும் என வாதிடப்பட்டது.

இதையடுத்து அமலாக்கத்துறை தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், உச்சநீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் அமலாக்கத்துறை விசாரணை தொடங்கியது. சட்டவிரோதமாக செந்தில் பாலாஜி கைது செய்யப்படவில்லை. கைதுக்கு முன் முறையாக நோட்டீஸ் வழங்கப்பட்டது. ஆனால், செந்தில் பாலாஜி அதை பெற மறுத்துவிட்டார். சிஆர்பிசி 43A பிரிவின் படி 16 வயதுக்கு குறைந்த பெண் குழந்தைகள் மற்றும் மருத்துவ சிகிச்சையில் உள்ளவர்களுக்கு மட்டுமே ஜாமீன் வழங்க முடியும். செந்தில் பாலாஜிக்கு அனைத்து மருத்துவ சிகிச்சைகளும் சிறையில் வழங்கப்பட்டு வருகிறது.

அக்டோபர் 15 வரை செந்தில் பாலாஜியின் உடல்நிலை சீராக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். எம்.ஆர்.ஐ, சிடி ஸ்கேன், ஈ.என்.டி, இதய மருத்துவர்கள் என 7க்கும் மேற்பட்ட மருத்துவ நிபுணர்கள் தொடர்ந்து சிகிச்சை அளித்து கண்கானித்து வருகின்றனர். சிறையில் மற்றும் அரசு மருத்துவமனையில் போதிய மருத்துவ சிகிச்சை வழங்க முடியாத நிலையில், ஜாமீன் வழங்கலாம். போக்குவரத்து துறையில் உள்ள 216 வேலைகளுக்கு சுமார் 67.74 கோடி பண பரிமாற்றம் நடந்தற்கான பென்டிரைவ் ஆதாரம் அமலாக்கத்துறைக்கு கிடைத்துள்ளது என தெரிவித்தார்.

இதையடுத்து, அதிகாரத்தில் உள்ள அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீன் வெளிவந்து சாட்சிகளை அச்சுறுத்த மாட்டார் என்பதற்கு என்ன உத்திரவாதம் அளிக்க முடியும் என கேள்வி எழுப்பி வழக்கின் தீர்ப்பை அக்டோபர் 16ஆம் தேதி தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தார். இந்த நிலையில் தான் உயர்நீதிமன்ற நீதிபதி ஜெயச்சந்திரன், செந்தில் பாலாஜி ஜாமீன் வழக்கில் நாளை (அக்.19) தீர்ப்பு வழங்க உள்ளார்.

இதையும் படிங்க: கண்களை இழந்தாலும் தன்னம்பிக்கையை இழக்காத காணி பழங்குடி விவசாயி.. வன விலங்குகளுடன் தனி ஆளாக வாழும் அதிசயம்!

சென்னை: சட்டவிரோத பண பரிமாற்ற தடை சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறையால் அமைச்சர் செந்தில் பாலாஜி கடந்த ஜூன் 14ஆம் தேதி கைது செய்யப்பட்டார். இந்நிலையில், இந்த வழக்கில் செந்தில் பாலாஜிக்கு எதிராக சுமார் மூவாயிரம் பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகை மற்றும் ஆவணங்கள் கடந்த ஆகஸ்ட் 12ஆம் தேதி அமலாக்கத் துறையால் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.

இந்நிலையில், சென்னை உயர்நீதிமன்ற உத்தரவின் படி, ஜாமீன் கோரி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் செந்தில் பாலாஜி தரப்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. ஜாமீன் மனுவை விசாரித்த முதன்மை அமர்வு நீதிமன்றம், செந்தில் பாலாஜி தரப்பில் குற்றம் செய்யவில்லை என்பதற்கான ஆதாரங்களை நிரூபிக்கவில்லை என தெரிவித்து, செப்.20ஆம் தேதி ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

இந்த நிலையில், அமைச்சர் செந்தில் பாலாஜி தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட ஜாமீன் மனு உயர்நீதிமன்ற நீதிபதி ஜெயச்சந்திரன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, அமலாக்கத்துறை சார்பில், அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. தொடர்ந்து செந்தில்பாலாஜி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், அமைச்சர் கைது செய்யப்பட்ட போது உரிய விதிமுறை பின்பற்றப்படவில்லை என நீதிமன்றம் கருதினால் ஜாமீன் வழங்கலாம் என பல்வேறு தீர்ப்புகள் கூறுகிறது.

கைது செய்யப்படுவதற்கு முன் அமைச்சரிடமோ? அவரது உறவினரிடமோ? உரிய விளக்கம் அளிக்கப்படவில்லை. நெஞ்சுவலிக்கு நீண்டகாலமாக மருத்துவ சிகிச்சையில் இருப்பதால் ஜாமீன் வழங்க வேண்டும். அமைச்சர் அதிகாரத்தில் உள்ளவர் என்பதால் ஜாமீன் வழங்க அமலாக்கத்துறை எதிர்ப்பு தெரிவிக்கிறது. ஸ்டான்லி மருத்துவமனையில் 13 மருத்துவர்கள் கொண்ட குழு அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு அக்.09ஆம் தேதி சிகிச்சை அளித்தது. மருத்துவ அறிக்கையில் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளனர்.

மருத்துவ சிகிச்சையில் இருப்பவர் அவருக்கான உரிமைகளை பெற சட்டம் அனுமதி வழங்குகிறது. 15 நிமிடங்களுக்கு மேல் நிற்க முடியாத அளவுக்கு அமைச்சர் செந்தில் பாலாஜி பாதிக்கப்பட்டுள்ளார். தொடர்ந்து மருத்துவர்கள் கண்கானிப்பில் இருக்க வேண்டும் என்பதால் ஜாமீன் வழங்க வேண்டும் என வாதிடப்பட்டது.

இதையடுத்து அமலாக்கத்துறை தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், உச்சநீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் அமலாக்கத்துறை விசாரணை தொடங்கியது. சட்டவிரோதமாக செந்தில் பாலாஜி கைது செய்யப்படவில்லை. கைதுக்கு முன் முறையாக நோட்டீஸ் வழங்கப்பட்டது. ஆனால், செந்தில் பாலாஜி அதை பெற மறுத்துவிட்டார். சிஆர்பிசி 43A பிரிவின் படி 16 வயதுக்கு குறைந்த பெண் குழந்தைகள் மற்றும் மருத்துவ சிகிச்சையில் உள்ளவர்களுக்கு மட்டுமே ஜாமீன் வழங்க முடியும். செந்தில் பாலாஜிக்கு அனைத்து மருத்துவ சிகிச்சைகளும் சிறையில் வழங்கப்பட்டு வருகிறது.

அக்டோபர் 15 வரை செந்தில் பாலாஜியின் உடல்நிலை சீராக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். எம்.ஆர்.ஐ, சிடி ஸ்கேன், ஈ.என்.டி, இதய மருத்துவர்கள் என 7க்கும் மேற்பட்ட மருத்துவ நிபுணர்கள் தொடர்ந்து சிகிச்சை அளித்து கண்கானித்து வருகின்றனர். சிறையில் மற்றும் அரசு மருத்துவமனையில் போதிய மருத்துவ சிகிச்சை வழங்க முடியாத நிலையில், ஜாமீன் வழங்கலாம். போக்குவரத்து துறையில் உள்ள 216 வேலைகளுக்கு சுமார் 67.74 கோடி பண பரிமாற்றம் நடந்தற்கான பென்டிரைவ் ஆதாரம் அமலாக்கத்துறைக்கு கிடைத்துள்ளது என தெரிவித்தார்.

இதையடுத்து, அதிகாரத்தில் உள்ள அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீன் வெளிவந்து சாட்சிகளை அச்சுறுத்த மாட்டார் என்பதற்கு என்ன உத்திரவாதம் அளிக்க முடியும் என கேள்வி எழுப்பி வழக்கின் தீர்ப்பை அக்டோபர் 16ஆம் தேதி தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தார். இந்த நிலையில் தான் உயர்நீதிமன்ற நீதிபதி ஜெயச்சந்திரன், செந்தில் பாலாஜி ஜாமீன் வழக்கில் நாளை (அக்.19) தீர்ப்பு வழங்க உள்ளார்.

இதையும் படிங்க: கண்களை இழந்தாலும் தன்னம்பிக்கையை இழக்காத காணி பழங்குடி விவசாயி.. வன விலங்குகளுடன் தனி ஆளாக வாழும் அதிசயம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.