ETV Bharat / state

சீமைக் கருவேல மர விவகாரம் - அரசுக்கு நீதிமன்றம் எச்சரிக்கை

author img

By

Published : Jan 28, 2023, 6:43 AM IST

தமிழ்நாட்டில் சீமைக் கருவேல மரங்களை அகற்றுவது தொடர்பாக பிறப்பித்த உத்தரவை அமல்படுத்தாவிட்டால், நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

சீமைக் கருவேல மர விவகாரம் - அரசுக்கு நீதிமன்றம் எச்சரிக்கை!
சீமைக் கருவேல மர விவகாரம் - அரசுக்கு நீதிமன்றம் எச்சரிக்கை!

சென்னை: தமிழ்நாடு முழுவதும் சீமைக் கருவேல மரங்களை அகற்றக் கோரி மதிமுக பொதுச்செயலாளர் வைகோ உள்ளிட்டோர் தாக்கல் செய்த வழக்குகள், நேற்று (ஜன.27) நீதிபதிகள் சதீஷ்குமார் மற்றும் பரத சக்கரவர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது அரசுத் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், “சீமைக் கருவேல மரங்களை அகற்றும் விஷயத்தில் சில சிக்கல்கள் எழுந்துள்ளது. அவற்றை அப்புறப்படுத்த சிறப்பு நிதி ஏதும் ஒதுக்கப்படவில்லை. அந்த மரங்களை அப்புறப்படுத்த அரசு சாரா அமைப்புகள் முன்வரவில்லை. பல இடங்களில் இயந்திரங்களைக் கொண்டு செல்ல முடியவில்லை.

பருவமழை காரணமாக இப்பணிகளில் சுணக்கம் ஏற்பட்டுள்ளது. அதனால் வழக்கை தள்ளிவைக்க வேண்டும். அதேநேரம் சீமைக் கருவேல மரங்களை அகற்றுவதில் முன்னேற்றம் காட்டப்படும்” என வாதிட்டார். இதனையடுத்து நீதிபதிகள் அமர்வு, “சீமைக்கருவேல மரங்கள் நோய் போல பரவுகிறது. எனவே அதன் தாக்கத்தை கருத்தில் கொள்ள வேண்டும்.

குறிப்பிட்ட தேதியில் அத்தனை சீமைக் கருவேல மரங்களையும் அகற்ற வேண்டும் என பஞ்சாயத்துகளுக்கு உத்தரவிடலாம். இறுதி வாய்ப்பாக பிப்ரவரி 14ஆம் தேதி வரை வழக்கு தள்ளி வைக்கப்படுகிறது. சீமைக் கருவேல மரங்களை அப்புறப்படுத்தியது தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். இல்லாவிட்டால் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கப்படும்” என உத்தரவிட்டனர்.

இதையும் படிங்க: மலைப்பகுதிகளில் காலி மதுபான பாட்டில்களை மீட்கும் திட்டம் - நீதிமன்றம் வரவேற்பு

சென்னை: தமிழ்நாடு முழுவதும் சீமைக் கருவேல மரங்களை அகற்றக் கோரி மதிமுக பொதுச்செயலாளர் வைகோ உள்ளிட்டோர் தாக்கல் செய்த வழக்குகள், நேற்று (ஜன.27) நீதிபதிகள் சதீஷ்குமார் மற்றும் பரத சக்கரவர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது அரசுத் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், “சீமைக் கருவேல மரங்களை அகற்றும் விஷயத்தில் சில சிக்கல்கள் எழுந்துள்ளது. அவற்றை அப்புறப்படுத்த சிறப்பு நிதி ஏதும் ஒதுக்கப்படவில்லை. அந்த மரங்களை அப்புறப்படுத்த அரசு சாரா அமைப்புகள் முன்வரவில்லை. பல இடங்களில் இயந்திரங்களைக் கொண்டு செல்ல முடியவில்லை.

பருவமழை காரணமாக இப்பணிகளில் சுணக்கம் ஏற்பட்டுள்ளது. அதனால் வழக்கை தள்ளிவைக்க வேண்டும். அதேநேரம் சீமைக் கருவேல மரங்களை அகற்றுவதில் முன்னேற்றம் காட்டப்படும்” என வாதிட்டார். இதனையடுத்து நீதிபதிகள் அமர்வு, “சீமைக்கருவேல மரங்கள் நோய் போல பரவுகிறது. எனவே அதன் தாக்கத்தை கருத்தில் கொள்ள வேண்டும்.

குறிப்பிட்ட தேதியில் அத்தனை சீமைக் கருவேல மரங்களையும் அகற்ற வேண்டும் என பஞ்சாயத்துகளுக்கு உத்தரவிடலாம். இறுதி வாய்ப்பாக பிப்ரவரி 14ஆம் தேதி வரை வழக்கு தள்ளி வைக்கப்படுகிறது. சீமைக் கருவேல மரங்களை அப்புறப்படுத்தியது தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். இல்லாவிட்டால் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கப்படும்” என உத்தரவிட்டனர்.

இதையும் படிங்க: மலைப்பகுதிகளில் காலி மதுபான பாட்டில்களை மீட்கும் திட்டம் - நீதிமன்றம் வரவேற்பு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.