ETV Bharat / state

பட்டியல் வழக்குகள் விசாரணை: 4ஆவது நாளாக அமர்விற்கு வராத தஹில் ரமாணி

author img

By

Published : Sep 12, 2019, 10:37 AM IST

சென்னை: சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி தஹில் ரமாணி தனது ராஜினாமா கடிதத்தை குடியரசுத் தலைவருக்கு அனுப்பியுள்ள நிலையில், இன்று நான்காவது நாளாக அவருக்கு ஒதுக்கப்பட்ட பட்டியல் வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவில்லை.

madras high court chief justice tahil ramani not sitting today

சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி தஹில் ரமாணி, மேகாலயா மாநில உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக பணியிடமாறுதல் செய்ய, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான கொலிஜியம் குழு மத்திய அரசிற்கு பரிந்துரை செய்யப்பட்டதையடுத்து, அவர் தனது ராஜினாமா கடிதத்தை குடியரசுத் தலைவருக்கு அனுப்பியுள்ளார்.

இந்நிலையில், தலைமை நீதிபதி தஹில் ரமாணி, கடந்த 9ஆம் தேதியிலிருந்து, நான்காவது நாளாக இன்றும்அவருக்கு ஒதுக்கப்பட்ட வழக்குகளை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளவில்லை.

அவருக்கு ஒதுக்கப்பட்ட முக்கிய வழக்குகளை இரண்டாம் மற்றும் மூன்றாம் அமர்வின் மூத்த நீதிபதிகள் முன் பட்டியலிடப்படுவதாக பதிவுத் துறை தெரிவித்துள்ளது.

சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி தஹில் ரமாணி, மேகாலயா மாநில உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக பணியிடமாறுதல் செய்ய, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான கொலிஜியம் குழு மத்திய அரசிற்கு பரிந்துரை செய்யப்பட்டதையடுத்து, அவர் தனது ராஜினாமா கடிதத்தை குடியரசுத் தலைவருக்கு அனுப்பியுள்ளார்.

இந்நிலையில், தலைமை நீதிபதி தஹில் ரமாணி, கடந்த 9ஆம் தேதியிலிருந்து, நான்காவது நாளாக இன்றும்அவருக்கு ஒதுக்கப்பட்ட வழக்குகளை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளவில்லை.

அவருக்கு ஒதுக்கப்பட்ட முக்கிய வழக்குகளை இரண்டாம் மற்றும் மூன்றாம் அமர்வின் மூத்த நீதிபதிகள் முன் பட்டியலிடப்படுவதாக பதிவுத் துறை தெரிவித்துள்ளது.

Intro:Body:சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி தஹீல்ரமானி, குடியரசு தலைவருக்கு ராஜினாமா கடிதம் அனுப்பியுள்ள நிலையில் மூன்றாவது நாளாக வியாழக்கிழமையும் தனக்கான வழக்குகளை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளவில்லை.

கடந்த வாரம் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான கொலீஜியம் குழு, சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி தஹீல்ரமானியை மேகாலயா மாநில உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக மாற்ற மத்திய அரசிற்கு பரிந்துரை செய்தது.

அதே போன்று மேகாலயா மாநில தலைமை நீதிபதியாக உள்ள அஜய் குமார் மிட்டலை சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக இடம் மாற்றம் செய்யவும் மத்திய அரசிற்கு கொலிஜியம் பரிந்துரை வழங்கியது.

இந்த நிலையில் சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி தஹீல்ரமானி, கொலிஜியத்திற்கு அனுப்பிய கடிதத்தில் தன்னை மேகாலயா உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக மாற்றும் முடிவை மீண்டும் பரிசீலனை செய்ய வேண்டும் என குறிப்பிட்டிருந்தார்.

தலைமை நீதிபதியின் கோரிக்கையை நிராகரிக்கப்பட்ட நிலையில், மேகாலயா உயர்நீதிமன்றத்திற்கு மாற்றுவது உகந்ததாக இருக்காது என்பதால் தன்னுடைய பதவியை ராஜினாமா செய்வதாக குடியரசுத் தலைவருக்கு கடிதம் அனுப்பினார்

இந்நிலையில், தலைமை நீதிபதி தஹில் ரமானி,
கடந்த 9 ம் தேதி முதல் மூன்றாவது நாளாக அவருக்கு ஒதுக்கப்பட்ட வழக்குகளை இன்றும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளவில்லை. முறையீடுகள் மற்றும் முக்கிய வழக்குகள் இரண்டாவது மற்றும் மூன்றாவது அமர்வு மூத்த நீதிபதிகள் முன் பட்டியலிடப்படுவதாக பதிவுத்துறை தெரிவித்துள்ளது.
Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.