ETV Bharat / state

'நாங்குநேரி தொகுதியில் குமரி அனந்தன் போட்டி?' - வெற்றியைத்தக்க வைக்க காங்கிரஸ் பலே வியூகம்!

author img

By

Published : Sep 21, 2019, 7:23 PM IST

சென்னை: நாங்குநேரி தொகுதி திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ள நிலையில் காங்கிரஸ் கட்சி வேட்பாளராக அக்கட்சியின் மூத்த தலைவர் குமரிஅனந்தன் போட்டியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

kumari ananadhan

காங்கிரஸ் கட்சி வேட்பாளராக குமரி அனந்தன் நிறுத்தப்பட்டால் காங்கிரஸ் கட்சிக்கு வெற்றி வாய்ப்புகள் மிக அதிகம் என்று சொல்லப்படுகிறது. காங்கிரஸ் கட்சியில் அழுக்குப்படாதவர் என அனைவராலும் மதிக்கப்படும் மூத்த தலைவர் குமரிஅனந்தன் ஆவார். 1980 காலககட்டத்தில் குமரிஅனந்தனின் பேச்சை கேட்பதற்கு மாணவர்கள் முதல் அனைவரும் மிகுந்த ஆர்வத்தால் கூடுவார்கள். மேலும் குமரி அனந்தன் காமராஜருக்கு நெருக்கமாக இருந்தவர். அதே காலகட்டத்தில் குமரிஆனந்தன், காந்தி காமராஜர் தேசிய கட்சி என்று தனிக்கட்சி தொடங்கி, எம்.ஜி.ஆர் உடன் கூட்டணி வைத்து ஆறு தொகுதிகளில் வெற்றி பெற்றவர் என்ற வரலாறு உள்ளது. அதன் பிறகு காங்கிரஸ் கட்சியில் மீண்டும் இணைந்த போது, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவராக ஒரு முறை பதவி வகித்துள்ளார். அதன் பிறகு காங்கிரஸ் கட்சியில் குமரி அனந்தனுக்கு உரிய அங்கீகாரம் வழங்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டு இருந்து வந்தது.

குறிப்பாக குமரிஅனந்தனின் மகள் தமிழிசை தெலங்கானா ஆளுநராக நியமிக்கப்பட்டபோது, காங்கிரஸ் கட்சி குமரிஅனந்தனுக்கு என்ன செய்தது? போன்ற கடுமையான விமர்சனங்கள் காங்கிரஸ் கட்சி மேல் வைக்கப்பட்டன. மேலும் காங்கிரஸ் கட்சி குமரிஅனந்தனுக்கு ஏதும் செய்யவில்லை என்றுதான் தமிழிசை பாஜகவில் இணைந்தார் போன்ற பேச்சுகளும் நிலவின. அதோடு குமரிஅனந்தனை நாங்குநேரி இடைத்தேர்தலில் வேட்பாளராக காங்கிரஸ் நிறுத்தினால் நாடார் சமுதாயம் மத்தியில் காங்கிரஸ் செல்வாக்கு உயர்வதோடு தொகுதியில், வெற்றி பெறுவதும் எளிதாக இருக்கும் என்ற கருத்து நிலவி வருகிறது.

மேலும் குமரிஅனந்தனை வேட்பாளராக நிறுத்தாமல் இருக்க வயது மட்டும் தான் ஒரே தடையாக இருக்கும் என்றும் சொல்லப்படுகிறது. நாங்குநேரி தொகுதியில் குமரிஅனந்தன் தவிர வேறு எந்த வேட்பாளரைக் காங்கிரஸ் நிறுத்தினாலும் தோல்வி அடைவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளதாகப் பார்க்கப்படுகிறது. ஒருவேளை குமரி அனந்தன் நிறுத்தப்படவில்லை என்றால், அதிமுக தன் முழு பலத்தைப் பயன்படுத்தி நாங்குநேரி தொகுதியை எளிதாகக் கைப்பற்றிவிடும் என்றும் கூறப்படுகிறது.

காங்கிரஸ் கட்சி வேட்பாளராக குமரி அனந்தன் நிறுத்தப்பட்டால் காங்கிரஸ் கட்சிக்கு வெற்றி வாய்ப்புகள் மிக அதிகம் என்று சொல்லப்படுகிறது. காங்கிரஸ் கட்சியில் அழுக்குப்படாதவர் என அனைவராலும் மதிக்கப்படும் மூத்த தலைவர் குமரிஅனந்தன் ஆவார். 1980 காலககட்டத்தில் குமரிஅனந்தனின் பேச்சை கேட்பதற்கு மாணவர்கள் முதல் அனைவரும் மிகுந்த ஆர்வத்தால் கூடுவார்கள். மேலும் குமரி அனந்தன் காமராஜருக்கு நெருக்கமாக இருந்தவர். அதே காலகட்டத்தில் குமரிஆனந்தன், காந்தி காமராஜர் தேசிய கட்சி என்று தனிக்கட்சி தொடங்கி, எம்.ஜி.ஆர் உடன் கூட்டணி வைத்து ஆறு தொகுதிகளில் வெற்றி பெற்றவர் என்ற வரலாறு உள்ளது. அதன் பிறகு காங்கிரஸ் கட்சியில் மீண்டும் இணைந்த போது, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவராக ஒரு முறை பதவி வகித்துள்ளார். அதன் பிறகு காங்கிரஸ் கட்சியில் குமரி அனந்தனுக்கு உரிய அங்கீகாரம் வழங்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டு இருந்து வந்தது.

குறிப்பாக குமரிஅனந்தனின் மகள் தமிழிசை தெலங்கானா ஆளுநராக நியமிக்கப்பட்டபோது, காங்கிரஸ் கட்சி குமரிஅனந்தனுக்கு என்ன செய்தது? போன்ற கடுமையான விமர்சனங்கள் காங்கிரஸ் கட்சி மேல் வைக்கப்பட்டன. மேலும் காங்கிரஸ் கட்சி குமரிஅனந்தனுக்கு ஏதும் செய்யவில்லை என்றுதான் தமிழிசை பாஜகவில் இணைந்தார் போன்ற பேச்சுகளும் நிலவின. அதோடு குமரிஅனந்தனை நாங்குநேரி இடைத்தேர்தலில் வேட்பாளராக காங்கிரஸ் நிறுத்தினால் நாடார் சமுதாயம் மத்தியில் காங்கிரஸ் செல்வாக்கு உயர்வதோடு தொகுதியில், வெற்றி பெறுவதும் எளிதாக இருக்கும் என்ற கருத்து நிலவி வருகிறது.

மேலும் குமரிஅனந்தனை வேட்பாளராக நிறுத்தாமல் இருக்க வயது மட்டும் தான் ஒரே தடையாக இருக்கும் என்றும் சொல்லப்படுகிறது. நாங்குநேரி தொகுதியில் குமரிஅனந்தன் தவிர வேறு எந்த வேட்பாளரைக் காங்கிரஸ் நிறுத்தினாலும் தோல்வி அடைவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளதாகப் பார்க்கப்படுகிறது. ஒருவேளை குமரி அனந்தன் நிறுத்தப்படவில்லை என்றால், அதிமுக தன் முழு பலத்தைப் பயன்படுத்தி நாங்குநேரி தொகுதியை எளிதாகக் கைப்பற்றிவிடும் என்றும் கூறப்படுகிறது.

இதையும் படிங்க:

நாங்குநேரியில் போட்டியிடுவது குறித்து கட்சித் தலைமை முடிவெடுக்கும் - திருநாவுக்கரசர்

Intro:Body:நாங்குநேரி தொகுதியில் போட்டியிட காங்கிரஸ் வேட்பாளராக குமரிஆனந்தன் தேர்வு செய்யப்படுவர் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நாங்குநேரி தொகுதி திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ள நிலையில் காங்கிரஸ் கட்சி வேட்பாளராக காங்கிரஸ் மூத்த தலைவர் 87 வயதான குமரிஆனந்தன் போட்டியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நாங்குநேரி தொகுதியில் காங்கிரஸ் பலம்பெற்ற கட்சியாக இருந்தாலும் 2014 நாடாளுமன்ற தேர்தலில் நாங்குநேரி சட்டமன்ற தொகுதியில் காங்கிரஸ் தனியாக போட்டியிட்டு வெறும் 8 .53 சதவீத
வாக்குகளும், திமுக 28 .49 சதவீத வாக்குகள் வாங்கிருந்தது. இதனால் இடைத்தேர்தல் அறிவிக்கப்படுவதற்கு முன்பே திமுக நாங்குநேரியில் போட்டியிட வேண்டும் போன்ற கருத்துகளை தொடர்ந்து திமுக நிர்வாகிகள் கூறிவந்தனர். இந்நிலையில் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்ட உடன் எந்த ஒரு ஆலோசனையும் இல்லாமல் திமுக நாங்குநேரி தொகுதியை காங்கிரஸுக்கு விட்டு கொடுத்திருப்பதற்கு வேட்பாளராக குமரிஆனந்தன் நிறுத்தப்படுவர் என்பதால்தான் என்று கூறப்படுகிறது.

காங்கிரஸ் கட்சி வேட்பாளராக குமரிஆனந்தன் நிறுத்தப்பட்டால் காங்கிரஸ் கட்சிக்கு வெற்றி வாய்ப்புகள் மிக அதிகம் என்று சொல்லப்படுகிறது. காங்கிரஸ் கட்சியில் அழுக்கு படாத அனைவராலும் மதிக்கப்படும் மூத்த தலைவர் குமரிஆனந்தன் ஆவார். 1980 போன்ற காலக்கட்டத்தில் குமாரிஆனந்தன் பேச்சை கேட்பதற்கு மாணவர்கள் முதல் அனைவரும் மிகுந்த ஆர்வத்தால் கூடுவார்கள். மேலும் குமாரி ஆனந்தன் காமராஜருக்கு நெருக்கமாக இருந்தவர். அதே காலக்கட்டத்தில் குமரிஆனந்தன், காந்தி காமராஜர் தேசிய கட்சி என்று தனி கட்சி தொடங்கி எம்.ஜி.ஆர் உடன் கூட்டணி வைத்து ஆறு தொகுதிகளில் வெற்றி பெற்றவர் என்ற வரலாறு உள்ளது. அதன் பிறகு காங்கிரஸ் கட்சியில் மீண்டும் இணைந்த போது தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக ஒரு முறை பதிவு வகுத்துள்ளார். இதன் பிறகு காங்கிரஸ் கட்சியில் குமரானந்தனுக்கு உரிய அங்கீகாரம் வழங்கப்படவில்லை என்ற குற்றசாட்டு இருந்துவந்தது.

குறிப்பாக குமரிஆனந்தனின் மகள் தமிழிசை தெலுங்கானா ஆளுநராக நியமிக்கப்பட்டபோது காங்கிரஸ் கட்சி குமரிஆனந்தனுக்கு என்ன செய்தது? போன்ற கடுமையான விமர்சனங்கள் காங்கிரஸ் கட்சி மேல் வைக்கப்பட்டது. காங்கிரஸ் கட்சிக்காக தொடர்ந்து கடுமையாக உழைத்தவருக்கு காங்கிரஸ் கட்சி ஏதும் செய்வில்லை என்ற விமர்சனம் இருந்து வருகிறது. மேலும் காங்கிரஸ் கட்சி குமரிஆனந்தனுக்கு ஏதும் செய்வில்லை என்றுதான் தமிழிசை பிஜேபி கட்சியில் இணைந்தார் போன்ற பேச்சுகளும் இருந்து வந்தது. அதோடு நாடார் வாக்குகளை தமிழிசையை ஆளுநராக நியமித்ததின் மூலம் பிஜேபி கட்சி கவர்ந்தது என்று சொல்லப்பட்டது. அதனால் தற்போது குமரிஆனந்தனை நாங்குநேரி இடைத்தேர்தலில் வேட்பாளராக காங்கிரஸ் நிறுத்தினால் நாடார் சமுதாயம் மத்தியில் காங்கிரஸ் செல்வாக்கு பெறுவதோடு தொகுதியில் வெற்றி பெறுவதும் எளிதாக இருக்கும் என்ற கருத்து நிலவி வருகிறது.

மேலும் குமரிஆனந்தனை வேட்பாளராக நிறுத்தாமல் இருக்க வயது மட்டும் தான் ஒரே தடையக இருக்கும் என்று சொல்லப்படுகிறது.
நாங்குநேரி தொகுதியில் குமரிஆனந்தன் தவிர வேறு எந்த வேட்பாளரை காங்கிரஸ் நிறுத்தினாலும் தோல்வி அடைவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளதாக பார்க்கப்படுகிறது. அதிமுக தன் முழு பலத்தை பயன்படுத்தி நாங்குநேரி தொகுதியில் கைப்பற்றிவிடும் என்று கூறப்படுகிறது. Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.