ETV Bharat / state

கடத்தப்பட்ட குழந்தை; 8 நாட்களுக்குள் மீட்பு - குழந்தை மீட்கப்பட்ட பின்னணி நிலவரம்

author img

By

Published : Jan 22, 2020, 9:59 AM IST

சென்னை: கடத்தப்பட்ட குழந்தையை 8 நாட்களில் கண்டுபிடிக்க பெரும் உதவியாக இருந்தது சிசிடிவி தான் என பூக்கடை உதவி ஆணையர் லஷ்மணன் தெரிவித்தார்.

childrescue
childrescue

சென்னை மெரினா கடற்கரையில் பலூன் வியாபாரம் செய்து வருபவர் ஜானி போஸ்லே. அவரது மனைவி ரந்தீஷா போஸ்லே. இவர்களின் ஏழு மாத ஆண் குழந்தையை சினிமாவில் நடிக்க வைப்பதாகக் கூறிய பெண் ஒருவர், அவர்களை கடந்த 12ஆம் தேதி ராஜிவ் காந்தி மருத்துவமனைக்கு வரவழைத்து அங்கிருந்து குழந்தையைக் கடத்திச்சென்றார்.

மீட்கப்பட்ட குழந்தை

இதுதொடர்பாக சென்னை பூக்கடை காவல் நிலையத்தில் கடந்த 12ஆம் தேதி குழந்தையின் தந்தை ஜானி போஸ்லே புகார் அளித்துள்ளார். பின்னர் தனிப்படை அமைத்த காவல்துறை, சிசிடிவி காட்சிகளை வைத்து எட்டு நாட்களுக்குள் குழந்தையைக் கண்டுபிடித்து கடத்திய பெண்ணையும் கைது செய்துள்ளனர்.

பூக்கடை உதவி ஆணையர் - லஷ்மணன்

சிசிடிவிலிருந்து யாரும் தப்பிக்க முடியாது!

கடத்திய பெண்ணைக் கண்டுபிடிக்க பெரும் உதவியாக இருந்தது சிசிடிவி தான் எனவும், குற்றவாளிகள் சிசிடிவியினால் தப்பிக்க முடியாது எனவும் காவல் துறை உதவி ஆணையர் லஷ்மணன் தெரிவித்தார்.

குழந்தையைக் கடத்திய ரேவதி என்ற பெண், தனக்கு ஆண் குழந்தை இல்லை என்று கடத்தியதாகத் தெரிகிறது என்றும், சென்னை காவல் ஆணையருக்கு நன்றி தெரிவிப்பதாகவும் அவர் கூறினார்.

இதையும் படிங்க: கடத்தப்பட்ட குழந்தையை மீட்க உதவிய செவிலிக்கு பாராட்டு!

சென்னை மெரினா கடற்கரையில் பலூன் வியாபாரம் செய்து வருபவர் ஜானி போஸ்லே. அவரது மனைவி ரந்தீஷா போஸ்லே. இவர்களின் ஏழு மாத ஆண் குழந்தையை சினிமாவில் நடிக்க வைப்பதாகக் கூறிய பெண் ஒருவர், அவர்களை கடந்த 12ஆம் தேதி ராஜிவ் காந்தி மருத்துவமனைக்கு வரவழைத்து அங்கிருந்து குழந்தையைக் கடத்திச்சென்றார்.

மீட்கப்பட்ட குழந்தை

இதுதொடர்பாக சென்னை பூக்கடை காவல் நிலையத்தில் கடந்த 12ஆம் தேதி குழந்தையின் தந்தை ஜானி போஸ்லே புகார் அளித்துள்ளார். பின்னர் தனிப்படை அமைத்த காவல்துறை, சிசிடிவி காட்சிகளை வைத்து எட்டு நாட்களுக்குள் குழந்தையைக் கண்டுபிடித்து கடத்திய பெண்ணையும் கைது செய்துள்ளனர்.

பூக்கடை உதவி ஆணையர் - லஷ்மணன்

சிசிடிவிலிருந்து யாரும் தப்பிக்க முடியாது!

கடத்திய பெண்ணைக் கண்டுபிடிக்க பெரும் உதவியாக இருந்தது சிசிடிவி தான் எனவும், குற்றவாளிகள் சிசிடிவியினால் தப்பிக்க முடியாது எனவும் காவல் துறை உதவி ஆணையர் லஷ்மணன் தெரிவித்தார்.

குழந்தையைக் கடத்திய ரேவதி என்ற பெண், தனக்கு ஆண் குழந்தை இல்லை என்று கடத்தியதாகத் தெரிகிறது என்றும், சென்னை காவல் ஆணையருக்கு நன்றி தெரிவிப்பதாகவும் அவர் கூறினார்.

இதையும் படிங்க: கடத்தப்பட்ட குழந்தையை மீட்க உதவிய செவிலிக்கு பாராட்டு!

Intro:Body:8 நாட்களில் குழந்தையை கண்டுபிடிக்க பெரும் உதவியாக இருந்தது சிசிடிவி தான் என பூக்கடை உதவி ஆணையர் லஷ்மணன் தெரிவித்தார்.

சென்னை மெரினா கடற்கரையில் பலூன் விற்கும் தொழில் செய்து வரும் ஜானி போஸ்லே மற்றும் ரந்தீஷா ஆகிய தம்பதியினருக்கு பிறந்த 7மாத ஆண் குழந்தையை சினிமாவில் நடிக்க வைப்பதாக கூறி அடையாளம் தெரியாத பெண் அழைத்து சென்று பெற்றோரின் கவனத்தை திசை திருப்பி ராஜீவ் காந்தி மருத்துவமனையில் வைத்து குழந்தையை கடத்தி சென்றுள்ளார்.

இது தொடர்பாக பூக்கடை காவல் நிலையத்தில் கடந்த 12ஆம் தேதி குழந்தையின் தந்தை ஜானி போஸ்லே புகார் அளித்துள்ளார்.பின்னர் தனிப்படை அமைத்து சிசிடிவி காட்சிகளை வைத்து 8 நாட்களுக்குள் குழந்தையை கண்டுபிடித்து கடத்திய பெண்ணையும் கைது செய்ததாக கூறினார்.மேலும் கடத்திய பெண்ணை கண்டுபிடிக்க பெரும் உதவியாக இருந்தது சிசிடிவி தான் எனவும்,குற்றவாளிகள் சிசிடிவியினால் தப்பிக்க முடியாது எனவுன் தெரிவித்தார். மேலும் குழந்தையை கடத்திய ரேவதி என்ற பெண் ஆண் குழந்தை இல்லை என்று கடத்தியதாக தெரிகிறது என்றும்,சென்னை மாநகரம் மூலம் சிசிடிவியை பொருத்திய காவல் ஆணையருக்கு நன்றி தெரிவிப்பதாக அவர் கூறினார்.

பேட்டி:லஷ்மணன் (உதவி ஆணையர்)

ஜானி போஸ்லே (குழந்தையின் தந்தை)Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.