தமிழ்நாட்டில் சட்டப்பேரவைத் தேர்தலில் திமுகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்த கேரள மாநில முன்னாள் முதலமைச்சரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான உம்மன் சாண்டி திருவனந்தபுரத்தில் இருந்து சென்னை வந்தார்.
அப்போது செய்தியாளர்களிடம் கூறியதாவது, தமிழ்நாட்டில் சட்டப்பேரவைத் தேர்தல் குறித்து காங்கிரஸ் கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளேன். திமுக தலைவர் மு.க ஸ்டாலினை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளேன்.
காங்கிரஸ் சார்பில் அமைக்கப்பட்டு உள்ள பேச்சுவார்த்தை குழுவினர் டெல்லியில் இருந்து வந்துள்ளனர். அவர்களுடன் ஆலோசித்த பின்னர், தொகுதி பங்கீடு குறித்து முடிவு செய்யப்படும்” என்றார்